India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பேராவூரணி சொக்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த கண்ணன்–பரிமளா தம்பதியினர். இவரது மகள் கவிபாலா (13). பள்ளத்துார் அரசு உயர்நிலைப்பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது மூக்கில் இரத்தம் கசிந்து மயங்கி விழுந்து மாணவி உயிரிழந்துள்ளார். பள்ளியில் வழங்கப்பட்ட குடற்புழு மாத்திரைகளே காரணம் என உறவினர்கள் குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழக முதல்வரின் மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் மருத்துவ காப்பீடு அட்டை கோரி பதிவு செய்தவா்களின் எண்ணிகை 5,05,225 போ் என்றும், இவா்களில் காப்பீடு திட்ட அட்டை உபயோகித்து மருத்துவம் பாா்த்தவா்களின் எண்ணிகை 1.7 லட்சம் என்று தஞ்சை கலெக்டர் தெரிவித்துள்ளார். புதிய மருத்துவ காப்பீட்டுத் அட்டைக்கு இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
பாபநாசம் அருகே மேலவழுத்துார் பகுதியை சேர்ந்த ஷேக் தாவூத். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான, நிலத்தினை ஆதார் கார்டில் பெயர் மாற்றி ஆள் மாறாட்டம் செய்து போலி ஆவணங்கள் மூலம் பத்திர பதிவு செய்த முகம்மது யூசுப் அலி, உஸ்மான், அப்துல்காதர், ராஜசேகரன் ஆகிய நான்கு பேரை பாபநாசம் காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு வருகிற 11-ம் தேதி செவ்வாய்க்கிழமை தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும். தஞ்சை மாவட்டத்தில் இயங்கி வரும் மதுபான கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற விடுதியுடன் இயங்கும் மது கூடங்கள் என அனைத்திலும் அன்று மது விற்பனை நடைபெறாது என தெரிவித்துள்ளார். SHARE NOW!
தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு வருகிற 11-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) டாஸ் மாக் கடைகள் மூடப்படும். தஞ்சை மாவட்டத்தில் இயங்கிவரும் டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் என அனைத்திலும் அன்று மதுபான விற்பனை கிடையாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தஞ்சை மாநகராட்சி மாதாந்திர கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் மாநகராட்சி மாதாந்திர கூட்டம் நாளை மேயர் தலைமையில் நடைபெற இருந்த நிலையில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ள நிலையில் நாளை நடைபெற இருந்த மாநகராட்சி மாதாந்திர கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் தாலுகாவுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை. தஞ்சை அடுத்த புன்னைநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் திருக்குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு நாளை 10ஆம் தேதி அன்று தஞ்சாவூர் வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
தஞ்சை மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் அவர்களின் சுய விவரங்களை “விவசாயிகள் பெறும் பதிவேடு” என்னும் புதிய திட்டத்தின் கீழ் பதிவு செய்ய இன்று முதல் கிராமங்கள் தோறும் ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் பதிவு செய்ய விரும்பும் விவசாயிகள் தகுந்த ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பொது இடங்களில் புகைபிடித்தால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே பொது இடங்களில் புகைபிடித்த 21 பேருக்கு தலா 100 ரூபாய் என ரூ.2,100-ஐ அதிகாரிகள் அபராதமாக விதித்து வசூல் செய்தனர். மேலும் பொது இடங்களில் புகைபிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தாராசுரத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி ஆனந்தி (35). கடந்த சில நாட்களாக இவர் உடல் நலக்குறைவால் மிகுந்த மனஅழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் திருச்சியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில் முன் ஆனந்தி பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ரயிலின் லோகோ பைலட் அளித்த தகவலின் பேரில் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றினர்.
Sorry, no posts matched your criteria.