Thanjavur

News March 31, 2025

தஞ்சை மக்களே ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். (உடனே SHARE பண்ணுங்க)

News March 30, 2025

ஆளுநரை வரவேற்ற மாவட்ட ஆட்சியர்

image

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு இன்று (30.03.2025) வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை, மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் கும்பகோணம் காவேரி திட்ட இல்லத்தில் புத்தகம் வழங்கி வரவேற்றார். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் உடன் இருந்தார்.

News March 30, 2025

தஞ்சை: மாதம் ரூ.30,000 சம்பளத்தில் வேலை!

image

அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவ படையில் ஆள்சேர்க்கும் அறிவிப்பை திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. குறைந்தது 10-ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட, 21 வயதுக்குட்பட்ட திருமணமாகாத இளைஞர்கள் இதில் விண்ணப்பிக்கலாம். ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் joinindianarmy.nic என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பருக்கு பகிரவும்!

News March 30, 2025

தஞ்சையில் நீச்சல் பயிற்சி

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் கோடைகால விடுமுறையையொட்டி, தஞ்சை அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் நீச்சல் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது. 5 கட்டங்களாக நடைபெற உள்ள இந்த வகுப்புகள் முதற்கட்டமாக ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 13 வரை நடக்கிறது. இப்பயிற்சியில் பங்குபெற்று பயன்பெறுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் அறிய 04362 – 235633, 74017-03496 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

News March 30, 2025

ஒரத்தநாடு அருகே கார் பைக் மோதல், வாலிபர் பலி

image

ஒரத்தநாடு அடுத்த தெலுங்கன்குடிக்காட்டைச் சேர்ந்த முகிலன்(23). இவர் நேற்று முன்தினம் பைக்கில் ஓரத்தநாடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பாளம்புத்தூர் மின்சார அலுவலகம் அருகே எதிரே வந்த கார் இவர் மீது மோதியதில் கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.

News March 29, 2025

பொது மருத்துவ முகாம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம்

image

கும்பகோணம் செம்போடை அருகே உள்ள புனித சேவியர் உயர்நிலைப்பள்ளியில் நாளை (மார்ச்.30) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம்1.00 மணி வரை தஞ்சை மாவட்ட டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் பொது மருத்துவ முகாம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் சாக்கோட்டை க. அன்பழகன் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற உள்ளது.

News March 29, 2025

தஞ்சையில் பாலியல் வன்முறைக் குறித்தான‌ விழிப்புணர்வு கருத்தரங்கம்

image

தஞ்சாவூர் மாவட்டம் NIFTEM கூட்டரங்கில் சமூக நலன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் இன்று துவக்கி வைத்தார்.

News March 29, 2025

மங்கு, பொங்கு, மரண சனியில் இருந்து விடுபட ?

image

சூரியனார்கோயிலில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது திருக்கோடிக்காவல் கோடீஸ்வரர் கோயில். இங்கு சிரசில் சிவலிங்கத்துடன் குழந்தை வடிவில் சனிபகவான் பாலசனியாக அருள்பாலிக்கிறார்.இந்த மண்ணை மிதித்தவரை எமதர்மன் நெருங்க கூடாது என சிவபெருமான் கட்டளையிட்டதாக ஐதீகம். எம பயம் நீக்கும் பால சனிபகவானை வணங்க மங்கு, பொங்கு, மரண சனி ஆகிய மூன்றின் பாதிப்பிலிருந்தும் விடுபடலாம் என்பது நம்பிக்கை. உடனே Share பண்ணுங்க..

News March 29, 2025

தஞ்சாவூரில் (ஏப். 1) தொடங்குது கோடைகால நீச்சல் பயிற்சி

image

தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு (ஏப்.1) ஆம் தேதி தொடங்க உள்ளது. என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். நீச்சல் கற்றுக்கொள்ள 5 கட்டங்களாக பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. பயிற்சி பெறுவோருக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04362-235633 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

News March 29, 2025

தஞ்சையில் உயர் கல்வி & வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி

image

தஞ்சை பெரியார் பல்கலைக்கழக வள்ளுவர் கூட்டரங்கில் இன்று (மா.29) காலை 10 மணிக்கு கல்லூரி கனவு முகாம் நடைபெற உள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் தன்னார்வ இயக்கம் மற்றும் டான் போஸ்கோ குழுவும் இணைந்து, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு தொழில், வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் குறித்து ஆலோசனை முகாம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று பயனடையுமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!