Thanjavur

News July 10, 2025

தஞ்சை: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா? ( 1/1)

image

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <>E-பெட்டகம்<<>> என்ற செயலியில் உங்கள் ஆதார் என்னை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும் உங்களுக்கு தேவையான 10th , 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். SHARE IT NOW <<17020292>>தொடர்ச்சி <<>>

News July 10, 2025

தஞ்சாவூர்: குரூப் 4க்கு 155 தேர்வு மையங்கள் அமைப்பு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV தொகுதி IV பணிகள் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு வருகிற 12ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 43,517 தேர்வர்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள 155 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 10, 2025

தஞ்சை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் வரை காப்பீடு

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

News July 10, 2025

தஞ்சை: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது உள்ளிட்டவை விஏஓ-வின் முக்கிய வேலையாகும். இவற்றை சரியாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், தஞ்சை மாவட்ட மக்கள் 04362-227100 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க

News July 10, 2025

உலகை புகழ்பெற்ற தஞ்சை ராஜகோபால பீரங்கி

image

தஞ்சையில் பெரும்பாலும் பலரும் அறிந்திடாத ஒன்று தஞ்சை ராஜகோபால பீரங்கி. சுமார் 400 ஆண்டு பழமைவாய்ந்த இந்த பீரங்கி நாயக்கர் காலத்தில் தஞ்சைக்குள் நுழையும் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 400ஆண்டுகள் ஆனா பின்பும் இப்பீரங்கி இன்றளவும் துருப்பிடிக்காமல் உள்ளது. உலக வரலாற்றில் சுடப்பட்ட பெரிய பீரங்கிகளில் இது 4வது பெரிய பீரங்கி ஆகும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News July 10, 2025

ஆடுதுறை விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

image

ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம், கோவை தமிழ்நாடு பல்கலைக்கழகத் துடன் இணைந்து விவசாயிகளுக்கான நெல் பயிரில் உயிர் ஊக்கிகளின் பங்கு குறித்த பயிற்சி நடந்தது. நிறுவன இயக்குனர் சுப்ரமணியன் தலைமை வகித்து பேசுகையில், தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து வெளியிடப்படும் நெல் ரகங்கள் குறைந்த அளவில் உரங்கள் அளித்தாலே சராசரி மகசூல் கொடுக்கும். விவசாயிகளுக்கு தொழில்நுட்ப விளக்கங்கள் அளித்தனர்.

News July 9, 2025

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பள்ளிப் படிப்பினை முடித்த மாணவ-மாணவியர்கள் உயர் கல்வி பயில்வதற்கான இரண்டாம் கட்ட வழிகாட்டல் சிறப்பு குறைதீர் கூட்டத்தினை இன்று துவக்கி வைத்தார்.

News July 9, 2025

தஞ்சை: விமான நிலையத்தில் ரூ.30,000 சம்பளத்தில் வேலை!

image

இளைஞர்களே விமான நிலையத்தில் வேலை பார்க்க ஆசை இருக்கா? AAI கார்கோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் காலியாகவுள்ள 393 Assistant (Security), Security Screener (Fresher) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 21 வயது அதிகபட்சம் 27 வயதுக்குள் இருப்பவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக 30,000 வரை வழங்கப்படுகிறது. நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News July 9, 2025

குறுவை சாகுபடிக்காக 23,784 டன் உரம் கையிருப்பு

image

தஞ்சை மாவட்டத்தில் தற்போது வரை 95,000 ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளன. இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் நடப்பு குறுவை பருவத்திற்கு தேவையான உரங்களான யூரியா 9,996 டன், டிஏபி 2,685 டன், பொட்டாஷ் 3,468 டன், காம்ப்ளக்ஸ் 6,094 டன், சூப்பர் பாஸ்பேட் 1,541 டன் என 23,784 டன் உரங்கள் இருப்புள்ளது மேலும் தஞ்சை மாவட்டத்திற்கு குறுவை சாகுபடிக்காக 1,227 டன் யூரியா உரம் வந்துள்ளது.

News July 9, 2025

தஞ்சை: 10th படித்தால் காவலர், உதவியாளர் வேலை 1/2

image

அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலர் பணிக்காக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. இப்பணிக்கு சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 24-ம் தேதி கடைசி ஆகும். உடனே https://ssc.gov.in/home/apply என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். (<<17003305>>பாகம்-2<<>>). SHARE பண்ணுங்க.

error: Content is protected !!