India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் மக்களே… கனரா வங்கியில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள 3500 Graduate Apprentices பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தமிழகத்தில் 394 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு மாதம் ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இங்கே <
கபிஸ்தலம் அடுத்த மண்ணிக்கரை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (45) . இவருடைய மனைவி மாலா. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. சம்பவத்தன்று வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த கபிஸ்தலம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 130 பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை கணினி ஆசிரியர்களுக்கான பயிற்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர் அனைவரையும் வாழ்த்தி பேசினார்கள். இதில் 130 பள்ளிகளை சேர்ந்த ஆசியர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <
தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (வியாழன்) காலை 10 மணிக்கு தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது. கூட்டத்தில் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்து திட்ட விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன. கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த கருத்துக்களை கோரிக்கைகளாக தெரிவித்து பயன் பெற ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தஞ்சை சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-26-ம் ஆண்டுக்கான நகை மதிப்பீடும், அதன் நுட்பங்கள் குறித்து பட்டயப் பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் சேர 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.4.2025 அன்று குறைந்த பட்சம் 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. கூட்டுறவு சங்கங்களின் தஞ்சை மண்டல இணைப்பதிவாளர் கூறி உள்ளார். SHARE NOW
தஞ்சை மக்களே, நீங்கள் வேலை செய்யும் இடத்தில் முன்னறிவிப்பின்றி வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம். அதன்படி, வீட்டு வேலை செய்பவர்கள் நலவாரியம் – 04428110147, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் – 044-28264950, 044-28264951, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் – 044-28110147. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!
தஞ்சை மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! உடனே இங்கே கிளிக் செய்து <
தஞ்சை மக்களே நாளை 25.09.2025 ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்!
1.தஞ்சாவூர்
கிளாசிக் மஹால் சீனிவாசபுரம்
2.வேப்பத்துர்
ஹரி மஹால் வேப்பத்துார்
3.ஒரத்தநாடு
விளக்கேட்ரி அம்மன் கோயில் மண்டபம், ராகவாம்பாள்புரம்
4.பாபநாசம்
காய்தே மில்லத் மஹால், ராஜகிரி
5.கும்பகோணம் கொரநாட்டுக் கருப்பூர்
கிராம பொது சேவை மையக் கட்டிடம்,
6.தஞ்சாவூர் மேலவெளி
சமூதாயக்கூடம்
SHARE பண்ணுங்க!
தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்தவமனை வளாகத்தில் இயங்கி வரும் DEIC-TN-RIGHTS Occupational Therapist -1 பணியிடத்தினை ஒப்பந்த அடிப்படையில் நிரப்படவுள்ளது.
1.பதவியின் பெயர்: Occupational Therapist
2.மாத ஊதியம்: Rs.23000/
3.வயது வரம்பு: 40
4.விண்ணப்ப படிவம்: இங்கே <
5.அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சுகாதார அலுவலகம்,
6.மேலும் விபரங்களுக்கு: தொலைபேசி எண்: 04362-273503
SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.