Thanjavur

News January 16, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜன.15 இரவு 10 முதல் ஜன.16 காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News January 15, 2026

தஞ்சை: சங்கடங்கள் தீர்க்கும் சனீஸ்வர பகவான்

image

திருநள்ளாறில் அமைந்துள்ள சிவனின் தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலய சனீஸ்வரன் புகழ்பெற்று விளங்குகிறார். நளன் என்னும் மன்னனை சனீஸ்வரர் துன்பப்படுத்தினார். அப்போது நளன் இத்தலத்தில் உள்ள சிவனை வணங்கியதால், சனீஸ்வரன் நளனை தன் துன்பப் பிடியிருந்து விடுவித்தார். ஆகவே திருநள்ளாறு சனீஸ்வரரை வணங்கினால் ஏழரை சனி உள்ளிட்ட பல பிரட்சனை தீரும் என்பது ஐதீகம். உங்கள் சங்கடங்கள் தீர ஒருமுறை இத்தலத்திற்கு செல்லுங்கள்..

News January 15, 2026

தஞ்சை: தேர்வு கிடையாது-போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

தஞ்சை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 15, 2026

தஞ்சை: அரசு ஊழியர் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், தஞ்சாவூர் மாவட்ட மக்கள் 04362-227100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 15, 2026

தஞ்சை அருகே விவசாயி தற்கொலை

image

ஒரத்தநாடு அருகே திருநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணப்பா. விவசாயியான இவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் விபத்து ஒன்றில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி கண்ணப்பாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் விளைவாக, மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை தூக்கிட்டு செய்து கொண்டார். இதையடுத்து ஒரத்தநாடு போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 15, 2026

தஞ்சை ரூ.5 லட்சம் இலவச காப்பீடு.. APPLY NOW!

image

தஞ்சை மக்களே, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!

News January 15, 2026

தஞ்சை: கணவன் அடித்தால் CALL பண்ணுங்க!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கணவன் அடிப்பது, வரதட்சணை கேட்டு துன்புறுத்துவது போன்ற குடும்ப வன்முறைகளை தஞ்சை மாவட்ட பெண்கள் யாரேனும் எதிர்கொண்டால், தயங்காமல் மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (8012232577) தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!

News January 15, 2026

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும், பொதுவிநியோகத் திட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் வரும் ஜன.24-ந் தேதி, காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு ரேஷன் கடை, பொருட்கள் அல்லது சேவைகள் குறித்து ஏதேனும் குறைகள் இருந்தால் மனுவாக அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

News January 15, 2026

தஞ்சை: பொங்கல் சீர் கொண்டு சென்றவர் பரிதாப பலி

image

ஒரத்தநாடு சுண்ணாம்புக்காரத் தெருவைச் சேர்ந்த விவசாயி திருநாவுக்கரசு (49), தனது குடும்பத்துடன் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு பொங்கல் சீர் கொடுக்க காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சிற்றம்பலம் அம்மாகுளம் அருகே எதிரே வந்த கார் மோதியதில், திருநாவுக்கரசு உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 15, 2026

தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.14) இரவு 10 முதல் இன்று (ஜன. 15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!