India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே அய்யன்பேட்டையில் ஸ்ரீ படி அளந்தநாயகி சமேத செட்டியப்பர் கோயில் உள்ளது. சிவபெருமான் தராசு பிடித்தும், பார்வதி தேவி அளவை படியை ஏந்தியும் வியாபாரம் செய்யும் கோலத்தில் காட்சியளிக்கும் இந்த கோயிலுக்கு வியாபாரிகள் ஒரு முறை சென்று தரிசித்தால் தங்களது வியாபாரம் பெருகும், நஷ்டம் தீரும் கடன்கள் அடையும் என்பது ஐதீகம்.. வியாபார நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்
MBBS, BDS படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயம். ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது. இந்தாண்டு மே 4ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கியது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நாளை இரவு 11.50 மணியுடன் முடிவடைகிறது. எனவே விண்ணப்பிக்காத மாணவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 மூலம் MTS, Lab Technician, Pharmacist என மொத்தமாக 35 காலியிடங்கள் உள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு மார்ச். 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்களுக்கு ரூ. 13,000 முதல் ரூ. 40,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து கூடுதல் தகவல் அறிய <
தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வு புதன்கிழமை தொடங்கியது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 229 பள்ளிகளைச் சேர்ந்த 14 ஆயிரத்து 105 மாணவர்களும், 12 ஆயிரத்து 764 மாணவிகளும் என மொத்தம் 26 ஆயிரத்து 869 பேர் விண்ணப்பம் செய்தனர். தமிழ்த் தேர்வில் 26 ஆயிரத்து 210 மாணவ, மாணவிகள் பங்கேற்று எழுதினர். 659 பேர் தேர்வு எழுதவில்லை.
தஞ்சை மாவட்டம், வெண்டயம்பட்டியில் முறிந்து விழும் நிலையில் இருந்த மின்கம்பம் குறித்து பல புகார் மனுக்கள் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சில நாட்களுக்கு முன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக சேதமடைந்த மின்கம்பத்தினை அகற்றிவிட்டு புதிய மின்கம்பத்தினை அங்கு மின்வாரியத்தினர் நிறுவியுள்ளனர். இதுபோல உங்கள் பகுதி மக்கள் கோரிக்கைகளும் நிறைவேற Way2News-இல் நிருபராக இணையவும்!
தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டி கிராமத்தில் மார்ச்.08 ஆம் தேதி (சனிக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. அதில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு அவசியம் எனவும், தஞ்சாவூர் மாவட்ட இணையதளத்தில் இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
வல்லம், அகிழாங்கரை மேட்டு தெருவைச் சேர்ந்த இசையாஸ் என்பவரின் மகன் திரண் பெனடிக் வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை சிறப்பு வகுப்பு முடிந்து சக மாணவர்களுடன் வீட்டிற்குச் செல்லும் வழியில் மாடு முட்டி உயிரிழந்தார். மாணவரின் உடல் தற்போது தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.
தஞ்சை, கள்ளப்பெரம்பூர் அருகே வெண்ணலோடை பெண்ணாற்றங்கரை பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்த 3 பேரை கள்ளபெரம்பூர் போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர். இதில் அவர்கள் தஞ்சாவூர் கூடலூர் பெரிய தெரு பகுதியைச் சேர்ந்த ராஜப்பா என்பவரின் மகன் எபினேசர் (30), கீழத்தெருவை சேர்ந்த கஜேந்திரன் மகன் சதீஷ்குமார் (20), இளங்கோவன் மகன் கிருபாகரன் (24) என்பது தெரியவந்தது.
தஞ்சாவூரில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற பெரிய கோயில் தேரோட்டம் வரும் மே 7ஆம் தேதி நடைபெறுகிறது. உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு விழாவிற்கான பந்தல் கால் முகூர்த்தம் நேற்று நடைபெற்றது. ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற மே 7ஆம் தேதி நடைபெறுகின்றது.
தஞ்சாவூர் மாநகராட்சி 2024ஆம் ஆண்டுக்கான சிட்டி 2.0 என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவின் நம்பர் 1 நகரம் என்ற விருதை பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து தஞ்சையை தூய்மையாக மாற்றுவதற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒப்பந்தம் நேற்று ஜெய்ப்பூரில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.
Sorry, no posts matched your criteria.