India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
TAHDCO சார்பில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் (JEE Mains) தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. உணவு, தங்குமிடம் மற்றும் 11 மாதங்கள் பயிற்சிக்கான செலவை CPCL ஏற்கும் . இப்பயிற்சிக்கு www.tahdco.com இணையத்தில் பதிவு செய்து பயிற்சியில் கலந்து கொள்ளலாம். மாணவர்களுக்கு இதனை SHARE பண்ணுங்க…
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் மார்ச்.22ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெற இருந்தது. ஒரு சில நிர்வாக காரணங்களால் நடைபெறாமல் போனது. இந்நிலையில் வரும் மார்ச்.29ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார். கிராம மக்களுக்கு SHARE பண்ணுங்க..
தஞ்சை மாவட்டத்தில் ரம்ஜான் விடுமுறையை வேலை நாளாக ஆட்சியர் அறிவித்ததாக வதந்தி பரவியது. அதாவது, மாசிமக விழாவுக்கு கடந்த 12ஆம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 29ஆம் தேதி பணி நாளாக ஆட்சியர் அறிவித்தார். இந்நிலையில், மார்ச் 29ஆம் தேதி ரம்ஜான் கிடையாது 31ஆம் தேதி தான் ரம்ஜான் பண்டிகை என உண்மை சரிபார்பகம் உரிய விளக்கம் அளித்தது. இதை SHARE பண்ணுங்க
தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை பிரசன்ன ராஜகோபால சாமி கோயிலுக்கு புதிய அறங்காவலர் நியமிக்கப்பட்டது. அறங்காவலராக நியமிக்கப்பட்டவர் ஒரு இஸ்லாமியர் என்ற தவறான தகவலை சமூக வலைதளத்தில் பரப்பியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்ததில் ராஜபாளையத்தைச் சேர்ந்த விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாநில அமைப்பாளர் சரவண கார்த்தி (43) என்பவரை கைது செய்தனர்.
தஞ்சாவூர், திருவிடைமருதூர் தாலுகா நரசிங்கன்பேட்டையில் அருள்பாலிக்கும் யோக நரசிம்மர் கோயில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இக்கோயிலில் வேண்டுதல் நிறைவேற கொப்பரை தேங்காயை கட்டிவிட்டு வந்தால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. நிறைவேறியதும் பக்தர்கள் அந்தத் தேங்காயை கடவுளுக்கு உடைத்து அர்ச்சனை செய்து வழிபடுவர். ஒருமுறை சென்று வாருங்கள் மாற்றம் நிகழும்…பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க..
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் நகராட்சி, பேராவூரணி, பெருமகளூர் பேரூராட்சிகள் மற்றும் பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியங்களில், மார்ச்.26, 27 ஆகிய இரண்டு நாட்களுக்கு குடிநீர் நிறுத்தப்படும் என தஞ்சாவூர் நிர்வாகப் பொறியாளர் ப.நாகராஜ் தெரிவித்துள்ளார். உங்கள் பகுதி மக்களுக்கு SHARE பண்ணுங்க..
அதிராம்பட்டினம் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது39). கொத்தனார். நேற்று இவர் கீழத்தெருவில் புதிதாக வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கிருந்த மின் மோட்டாருடன் இணைக்கப்பட்டிருந்த ஒயரில் அவருடைய கை எதிர்பாராவிதமாக பட் டது. இதில் மின்சாரம் பாய்ந்து, செந்தில்குமார் தூக்கி வீசப்பட்டார். சம்பவ இடத்தில் இறந்தார். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 வயது சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை செய்த சூரக்கோட்டை பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்ற முதியவர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். இந்நிலையில் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார். இதனையடுத்து குண்டர் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திருவலஞ்சுழி பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ்(36). இவர் மதுவிற்கு அடிமையானதால் இவரை விட்டு மனைவி மற்றும் குழந்தைகள் பிரிந்து வாழ்கின்றனர். குடி போதைக்கு அடிமையான காளிதாசை அவரது சகோதரர் பாண்டியன் நேற்று இரவு கண்டித்துள்ளார். இருவருக்கும் தகராறு ஏற்பட அருகில் இருந்த கட்டையை எடுத்து காளிதாசை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சியில் டாக்டர் கலைஞர் புதிய பேருந்து நிலையத்தினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு , உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர்.கோவி.செழியன் ஆகியோர் ஞாயிற்றுக் கிழமை (23.03.2025) காலை 11.00 மணியளவில் திறந்து வைக்கவுள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.