Thanjavur

News July 7, 2025

தஞ்சை இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஜூலை 6) இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவர்களை மேற்கண்ட தொலைப்பேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News July 6, 2025

தஞ்சை மக்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய எண்கள்

image

உங்கள் பகுதிகளில் இருக்கும் அத்தியாவசிய தேவைகளுக்கு நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய வட்டாச்சியர் அலுவலக எண்கள்
▶தஞ்சாவூர்-04362-230456,
▶திருவையாறு-04362-260248,
▶பூதலூர்-04362-288107,
▶ஒரத்தநாடு-04372-233225,
▶கும்பகோணம்-0435-2430227,
▶திருவிடைமருதூர்-0435-2460187,
▶பாபநாசம்-04374-222456,
▶பட்டுக்கோட்டை-04373-235049,
▶பேராவூரணி-04373-232456.
உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க.!

News July 6, 2025

தஞ்சாவூர்: கழிவறை கட்ட ரூ.12,000 ஊக்கத் தொகை!

image

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), அனைத்து கிராமப் புற குடும்பங்களுக்கும் கழிவறை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற உங்கள் கிராம ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இதனை அனைவருக்கும் SHARE செய்து அவர்களும் பயனடைய உதவுங்கள்.!

News July 6, 2025

தஞ்சை: விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கும் திட்டம்

image

மத்திய அரசின் ‘கிசான் மந்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் முதலீடு செய்தால் 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் கிடைக்கும். 2 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள 18 – 40 வயதுடைய விவசாயிகள், உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த அற்புத தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News July 6, 2025

தஞ்சை: ரூ.85,000 சம்பளத்தில் வங்கி வேலை

image

IBPS வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் உள்ள IT Officer (203), Marketing Officer (350) உட்பட (1007) காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ. 48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News July 6, 2025

பாலியல் வழக்கில் கைதானவா் மீது குண்டா் தடுப்பு சட்டம்

image

பாபநாசம் அருகே மேல செம்மங்குடியைச் சோ்ந்தவா் அஜய் (23). இவா் மனநலம் பாதிக்கப்பட்ட எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாபநாசம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினரால் அண்மையில் கைது செய்யப்பட்டாா்.
இவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் பரிந்துரையின் பேரில், குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

News July 6, 2025

மூத்த குடிமக்களுக்கான செயலி அறிமுகம்

image

தஞ்சையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலமாக முதியோர் மற்றும் மூத்த குடிமக்களின் நலனை மேம்படுத்தும் விதமாக மூத்த குடிமக்களுக்கான செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இச்செயலி மற்றும் மூத்த குடிமக்கள் நலன் தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண் 303, மாவட்ட ஆட்சியர் வளாகம் ஆகிய முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

News July 6, 2025

தஞ்சை மாவட்டத்தில் உள்ள நீர்வளங்கள்

image

தமிழகத்திலேயே மிகவும் முக்கியமான நீர்வளங்களை நம் தஞ்சை மாவட்டம் கொண்டுள்ளது. இங்கு பல ஏரிகள், அணைகள் உள்ளன. அதில் முக்கியமாக கல்லணை அணை, கச்சமங்கலம் அணை, தென்பெரம்பூர் அணை போன்ற அணைகளும், சிவகங்கை ஏரி, சமுத்திரம் ஏரி, செங்கழுநீர் ஏரி, குறிச்சிக்குளம் ஏரி, பெராவூரணி ஆகிய ஏரிகளும் நம் தஞ்சையில் இயற்கை அழகுகளால் நிரம்பி காட்சியளிக்கிறது. தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News July 6, 2025

தஞ்சை இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஜூலை 5) இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவர்களை மேற்கண்ட தொலைப்பேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News July 5, 2025

தஞ்சை: வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை!

image

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாகியும், தொடர்ந்து பதிவை புதுப்பித்து வரும் இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது. அதன்படி குடும்ப வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்கும் இளைஞர்கள் தஞ்சை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம். இதில், 3 ஆண்டுகள் உதவி தொகை வழங்கப்படும். இதனை அனைவருக்கும் SHARE செய்யவும்.!

error: Content is protected !!