Thanjavur

News July 8, 2025

பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு!

image

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் சங்கர் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் திருவோணம் உள்ளடக்கிய பட்டுக்கோட்டை கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் இன்று 8ம் தேதி நடைபெற உள்ளதாகவும், அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

News July 7, 2025

தஞ்சாவூரில் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஜூலை 7) இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News July 7, 2025

தஞ்சை: பண கஷ்டத்தை நீக்கும் குபேரபுரீஸ்வரர் கோயில்!

image

தஞ்சை மக்களே செல்வம் என்பது முக்கியமான ஓன்று. பணக்கஷ்டத்தை நீக்கி செல்வம் அருளும் தஞ்சபுரீஸ்வரர் கோயில் நம் தஞ்சாவூரில் அமைந்துள்ளது. குபேரன் தன் செல்வங்களை இழந்து இங்குள்ள சிவனை வழிபட்டதில் அவருக்கு அனைத்து செல்வங்களும் மீண்டும் கிடைக்கப் பெற்றதாக கூறப்படுகிறது. செல்வம் இழந்தவர்கள் இங்கு வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது இப்பகுது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News July 7, 2025

தஞ்சாவூர்: வங்கியில் வேலை! மாதம் ரூ.85,000 சம்பளம்

image

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் தஞ்சை, திருச்சி உட்பட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். இதற்கு இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். மேலும் கடைசி நாள் ஜூலை 24ம் தேதி ஆகும். SHARE பண்ணுங்க.

News July 7, 2025

தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில், நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் உடன் உள்ளார்.

News July 7, 2025

தஞ்சை: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

image

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. விருப்பமுள்ளவர்கள்<> tnesevai.tn.gov.in <<>>என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம். மேலும் தகவலுக்கு 1800-425-6000. பகிரவும்

News July 7, 2025

இளைஞர்களுக்கு மீன்வளர்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி

image

சூரக்கோட்டையில் கிராமப்புற இளைஞர்களுக்கு மீன் வளர்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி வருகிற 9ந் தேதி முதல் அளிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்கும் விவசாயிகள் முன்பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வருகிற 9-ந்தேதி தொடங்கி 6 நாட்களுக்கு (சனி,ஞாயிறு தவிர) நடைபெறுகிறது. இதில் 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்சம் 5-ம் வகுப்பு படித்த விவசாயிகள் பங்கு பெறலாம்.

News July 7, 2025

தஞ்சை: சொந்த ஊரில் ரூ.35,000 சம்பளத்தில் அரசு வேலை (1/2)

image

தமிழகத்தில் காலியாக உள்ள ‘2299’ தலையாரி எனும் கிராம உதவியாளர் (VA) பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 305 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 10-ஆம் வகுப்பு முடித்த, எழுதப் படிக்க தெரிந்த நபர்கள் ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.11,100 முதல் 35,100 வரை வழங்கப்படும். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க! <<16974138>>(பாகம்-2)<<>>

News July 7, 2025

தஞ்சை: சொந்த ஊரில் ரூ.35,000 சம்பளத்தில் அரசு வேலை (2/2)

image

➡️ விண்ணப்பிக்கும் நபர் அதே கிராமம் / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
➡️ வயது: 21-37 க்குள் இருக்க வேண்டும்
➡️ சைக்கிள் / டூவீலர் ஓட்ட தெரிந்திருந்தால் நல்லது
➡️ எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
➡️ கிராம உதவியாளராக 10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு விஏஓ-வாக பதவி உயர்வு வழங்கப்படும்
➡️ மேலும் தகவலுக்கு உங்கள் பகுதி தாலுகா அலுவலகத்தை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!

News July 7, 2025

தஞ்சை மாநகர் பகுதியில் மின்தடை அறிவிப்பு

image

தஞ்சாவூர் அர்பன் துணை மின் நிலையத்தில் (ஜூலை 08) அன்று மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம், கீழவாசல், வண்டிக்கார தெரு, மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

error: Content is protected !!