India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கும்பகோணம்,திருபுவனத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் கோயிலில் மனிதன்,பறவை மிருகம் போன்ற கலவையாக அருள்பாலிக்கும் சரபேஸ்வரரை 11 வாரம் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் 11 நெய் தீபம் ஏற்றி 11 சுற்று வலம் வந்து வழிபட்டால் எதிரிகளின் தொல்லைகளால் அவதிப்படுவோர், ஏவல் பில்லி சூனியத்தால் துன்பப்படுவோர், தீராத நோயுற்றவர்கள் அதிலிருந்து முழுமையாக விடுபட்டு அவர்களின் தலையெழுத்தே மாறும் என்பது ஐதீகம்.Share It
திருநள்ளாறில் அமைந்துள்ள சிவனின் தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலய சனீஸ்வரன் புகழ்பெற்று விளங்குகிறார். நளன் என்னும் மன்னனை சனீஸ்வரர் துன்பப்படுத்தினார். அப்போது நளன் இத்தலத்தில் உள்ள சிவனை வணங்கியதால், சனீஸ்வரன் நளனை தன் துன்பப் பிடியிருந்து விடுவித்தார். திருநள்ளாறு சனீஸ்வரரை வணங்கினால் ஏழரை சனி உள்ளிட்ட பல பிரட்சனை தீரும் என்பது ஐதீகம். உங்கள் சங்கடங்கள் தீர ஒருமுறை இத்தலத்திற்கு செல்லுங்கள்..
தஞ்சாவூர் மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் நிலையில் பதவி வகித்து வரும் 17 பேரை பணியிடமாற்றம் செய்து ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பேரிடர் மேலாண்மை துறை தனி வட்டாட்சியர் ஜி.சிவக்குமார், தஞ்சாவூர் வட்டாட்சியராகவும், அங்கு பணியாற்றிய பி.அருள்ராஜ் நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களாக வறண்ட வானிலை நிலவியது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் வரும் 11ஆம் தேதி தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்கள், விவசாயிகளுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது.
தமிழக மருத்துவ தேர்வாணையம் பார்மசிஸ்ட் பிரிவில் உள்ள 425 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வு நடைபெறும். ஊதியம் ரூ.35,000 – ரூ.1,30,400ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே டி.பார்ம், பி.பார்ம், பார்ம்.டி படிப்பை முடித்தோர் இங்கு <
கும்பகோணம் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அரசினர் கலைக்கல்லூரியில் இன்று (மார்ச்.08) கல்லூரி விடுமுறை என கல்லூரி நாட்காட்டியில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அதனை ரத்து செய்து நாளை வேலை நாள், மேலும் நான்காம் நாள் கால அட்டவணை கடைபிடிக்கப்படும் என கல்லூரி முதல்வர் மாதவி சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் தொகுதி, உடையாளூர் ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஊரகப்பகுதியில் “மக்களுடன் முதல்வர்” திட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாநிலங்களவை உறுப்பினர் சு. கல்யாணசுந்தரம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் மயிலாடுதுறை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ. இராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் கரிகால சோழ கலையரங்கத்தில் சனிக்கிழமை (08.03.2025) காலை 10.45 மணி அளவில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்கள்.
திருவையாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி நர்சிங் முடித்து வீட்டில் உள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு பூதலூர் பகுதியை சேர்ந்த மதியழகன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி மருத்துவமனையில் ஆண் குழந்தை பெற்றெடுத்த நிலையில் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று கர்ப்பத்திற்கு காரணமாக இருந்த முன்னாள் காதலனும் திருமணம் ஆனவருமான மதியழகனை அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், இதில் தொழில்முனைவோருக்கான ஒருநாள் “ChatGPT”பயிற்சி வகுப்பு நாளை (மார்ச்.08) திருச்சி, அரியமங்கலம் சேஷசாயி தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற உள்ளது. இதில் ஸ்டார்ப் நிறுவனர்கள், தொழிமுனைவோர் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு www.editn.in என்ற இணையம், 9894920819/ 9080609808 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். SHARE NOW.
Sorry, no posts matched your criteria.