India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர், சாணூர்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஹரிகரன். நேற்று இரவு (மே.6) புதிய பேருந்து நிலையம் அருகே தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த மூன்று இளைஞர்களுக்கும் ஹரிஹரனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அந்த இளைஞர்கள் தாக்கியதில் ஹரிஹரன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இது குறித்து மருத்துவகல்லூரி காவல்துறையினர் மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகள் நேற்று(மே 6) வெளியானது. இதில் தஞ்சாவூர் மாவட்டம் 93.46% தேர்ச்சி பெற்றிருந்தது. இந்நிலையில் தஞ்சாவூர் தனியார் பள்ளியில் படித்த இரட்டையர்களான ஜெர்ஷன் – ஜாஸன் ஆகியோரும் பொதுத்தேர்வு எழுதி இருந்தனர். உருவத்தில் ஒரே மாதிரி இருக்கும் இவர்கள், மதிப்பெண்ணிலும் பிரியாமல் ‘506’ பெற்று அசத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல், உங்களை சுற்றி நடக்கும் உள்ளூர் நிகழ்சிகள், புகார்கள், கோரிக்கைகள், அரசியல் நிகழ்வுகளை செய்திகளாக பதிவேற்றி நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
பூதலூர் அருகே சித்திரக்குடியில் சத்தியா என்பவரின் நிலத்தில் நந்தி மற்றும் விஷ்ணு சிலைகள் பாதி புதைந்த நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன் பேரில், சரசுவதி மகால் நூலக தமிழ்ப் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணிமாறன் ஆய்வில் ஈடுபட்டார். அதில், இந்த சிலைகள் கி.பி. 9 முதல் 10ம் நூற்றாண்டை சேர்ந்ததாகவும், சோழர் காலத்தில் முக்கிய பகுதியாகவும் இருந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
தென்னிந்தியாவின் பழமையான தேவாலயங்களில் ஒன்றாக உள்ளது தஞ்சாவூர் ஸ்வார்ட்ஸ் சர்ச் ஆகும். 1779 இல் டேனிஷ் மிஷனரியான கிறிஸ்டியன் ஃபிரெட்ரிக் ஸ்வார்ஸ் என்பவரால் கட்டப்பட்டது. 1780 முதல் வழக்கமான வெகுஜனங்களை நடத்தினார். இதிலுள்ள சிலையை, லண்டனில் வாழ்ந்த இத்தாலிய சிற்பி ஜான் ஃபிளாக்ஸ்மேன் 1807இல் சரபோஜி மன்னரின் வேண்டுகோளிற்காக சிலையை செதுக்கியுள்ளார். இச்சிலை 1811 இல் தேவாலயத்தில் நிறுவப்பட்டது.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில், தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாணவி அபினேஸ்ரீ 580/600 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். இவர் 3 பாடங்களில் 100/100 மதிப்பெண் எடுத்துள்ளார். 2ம் இடமாக மாணவி நிஃப்ரின் 573, 3ம் இடமாக மாணவி ரிபாயா 568 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். முதலிடம் பிடித்த மாணவியை ஆசிரியர்கள், சக மாணவர்கள் பாராட்டி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில்
25,734 மாணவ – மாணவிகள் தேர்வு எழுதி 24,052 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதே போல் 11,819 மாணவர்கள் தேர்வு எழுதி 10,710 தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்தம் 13,915 மாணவிகள் தேர்வு எழுதி 13,342 தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 90.62% மாணவிகள் 95.88% என மொத்தம் 93.46 தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே 6) வெளியாகியுள்ளது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 90.62 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் – 95.88 % தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
உலகப் புகழ்பெற்ற பெரியகோவில் மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. இதில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. கட்டிட கலைக்கும் – சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக உள்ள கோவிலை காண அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தொடர் விடுமுறையொட்டி தமிழகம் மட்டும் அல்லாமல் மாநிலத்தின் பிறபகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இன்று கண்டு ரசித்தனர்.
2024ஆண்டுக்கான விளையாட்டு விடுதிமையம், முதன்மைவிளையாட்டு மையம், சிறப்புநிலை விளையாட்டு மையத்தில் சேருவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.விளையாட்டு விடுதிக்கு 26.04.2024-08.05.2024 வரையும் சிறப்புநிலை விடுதிக்கு 26.04.2024 -05.05.2024, முதன்மைநிலை விளையாட்டு விடுதிக்கு 26.04.2024-06.05.2024 வரை www.sdat.gov.it இணையவழியில் மாலை 5மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவிப்பு
Sorry, no posts matched your criteria.