India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாபநாசம் தாலுகா கபிஸ்தலம் அருகே தென்செருக்கை பகுதியில், மயிலாடுதுறை பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் இன்று(ஏப்.3) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது துரைசாமி என்பவர் ஸ்டாலின் வாகனத்தை தடுத்து நிறுத்தி, கடந்த ஆண்டு ராமதாஸின் 85வது பிறந்த நாளை முன்னிட்டு சீர்வரிசை பொருட்களுடன் 90 ஜோடிகளுக்கு பிரமாண்ட திருமணம் செய்து வைத்ததில், தனது மகளும் பயனடைந்தார் எனக்கூறி வேட்பாளரிடம் நன்றி கூறினார்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்.19ம் தேதி நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து, தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாபநாசத்தில், திருமண அழைப்பிதழ் போன்று பத்திரிகை அச்சடித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன், தாசில்தார் மணிகண்டன் ஆகியோர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்து வருகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு கோலப்போட்டி பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று(ஏப்.3) நடந்தது. நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை சட்டமன்ற உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ தலைமை தாங்கினார். வட்டாட்சியர் சுகுமார் முன்னிலை வகித்தார். 40க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோலம் வரைந்தனர்.
தஞ்சாவூர் மேலவீதியில் புகழ்பெற்ற மூலை அனுமார் கோவில் அமைந்துள்ளது. இங்கு நேற்று 1ம்தேதி திங்கட்கிழமை இரவு பங்குனி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு மூலை அனுமாருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோயில் உட்பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. பக்தர்கள் பிரதி மூல நட்சத்திரம் மற்றும் அமாவாசை மூலை அனுமாரை தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் விஜய், லூா்து பிரவீன் உள்ளிட்டோா் நேற்று(ஏப்.1) ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, தஞ்சாவூா் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட 20 இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சாலையோர நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளின் பொருள்களும் அப்புறப்படுத்தப்பட்டன.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது இதையொட்டி நேற்று தஞ்சை பள்ளி யக்கிரஹாரம் பகுதியில் வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணியை தாசில்தார் அருள்ராஜ் தொடங்கி வைத்தார். இந்த பூத் சிலிப்பில் சட்டமன்ற தொகுதியின் பெயர், வாக்காளர் அடை யா அட்டை எண், பாகம் எண். வாக்குச்சாவடியின் பெயர். வாக்குப்பதிவு நாள், நேரம் போன்றவை இடம் பெற்றிருக்கும்.
சேதுபாவாசத்திரம் அருகிலுள்ள பேராவூரணி அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலகு-2, சார்பில், சிறப்பு முகாம் தொடக்க விழா சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கழனிவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது. இதில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகம் மற்றும் அப்பகுதியில் உள்ள முக்கிய இடங்களில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்
தஞ்சாவூர்: ஆடுதுறை பகுதியை சேர்ந்த மணிபாரதி என்பவர் வேலையை முடித்துக்கொண்டு தஞ்சை ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார்.அப்போது திடீரென வந்த 4 பேர் அவரை சுற்றி வளைத்து தாக்கி அவரிடமிருந்த பணம், மற்றும் செல்போனை பறித்து சென்றனர். இதுதொடர்பாக அப்துல்ரஹீம் (19), வருண் ( 20) சதீஷ் ( 19),முகமது ரோஷன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் பயணிகள் தங்கும் வகையில் ஓய்வறைகள் ஏற்கெனவே தெற்கு ரயில்வே நிர்வாகத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து பராமரிப்பு ஐஆர்சிடிசி நிர்வாகத்திடம் தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒப்படைத்தது. அதன்படி நேற்று 10 குளிரூட்டப்பட்ட அறைகள் புனரமைக்கப்பட்டு, அதனை பயன்பாட்டுக்கு திருச்சி ரயில்வே கோட்ட மேலாளார் அன்பழகன் திறந்து வைத்தார்.
தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் அருகே குருங்களூரைச் சோ்ந்தவா் மாணிக்கவாசகம் (59). ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா்.இவா் தனது வீட்டின் பின்புறம் கொட்டகை அமைத்து பசு மாடுகள் வளா்த்து வருகிறாா்.இக்கொட்டகையிலும் , அருகிலிருந்த வைக்கோல் கட்டுகளிலும் நேற்று அதிகாலை தீ பற்றி எரிந்தது.தகவலறிந்த தஞ்சாவூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று தீயை அணைத்தனா்.இந்த விபத்தில் ஒரு பசு மாடு உயிரிழந்தது.
Sorry, no posts matched your criteria.