India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், Way2News சார்பில் சுரேஷ், சிங்காரவேலு, மதன் ஆகியோர் கலந்து கொண்டு தஞ்சை பகுதியைச் சேர்ந்த சுமார் 8 இளைஞர்களை தேர்வு செய்தனர். இதையடுத்து, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பணி ஆணை, மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் பரமேஸ்வரி தலைமையில் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்நிலையில் மார்ச்.18ஆம் தேதி கும்பகோணத்திலும், 25ஆம் தேதி பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகம் எதிரே உள்ள கிராம சபை கட்டடத்திலும் நடைபெற உள்ளது. தகுதி உடையவர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர், வெளிநாட்டில் இருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெறப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் மனித நேய மக்கள் கட்சி தலைவரும், பாபநாசம் எம்எல்ஏவுமான ஜவஹிருல்லாவிற்கு ஓராண்டு சிறை தண்டைனையை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை வாசித்து வருகிறார். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் புதிய அரசு கலைக் கல்லூரி, தஞ்சையில் அன்புச்சோலை மையம், தஞ்சை நடுவூரில் தொழிற்பேட்டை, தஞ்சை கைவினை கலைஞர்களுக்காக பொதுவசதி மையங்கள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் பல அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தஞ்சை மக்களே SHARE பண்ணுங்க..
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தை தனிமாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட ஆண்டுகால கோரிக்கையாகும். இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள பட்ஜெட் தொடரில் கும்பகோணம் தனிமாவட்டமாக அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தஞ்சை மக்களே இதுகுறித்து உங்கள் கருத்தை கமெண்ட் செய்யவும். மேலும், Share பண்ணுங்க.
தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (மார்ச்.14) நடைபெற உள்ளது. இந்த முகாமில் 8, 12ஆம் வகுப்பு, டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட நிரப்பபட உள்ளன. மேலும் விபரங்களுக்கு 04362-237037 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். வேலையில்லா உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிசயமங்கை கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மங்களநாயகி சமேத திருவிஜயநாதேஸ்வரர் கோயில். தேவார பாடல் பெற்ற இக்கோயிலில் விஜயநாதரை வணங்கினால் ஜெயம் கிட்டும் என்பதால் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற எடுத்த செயல்களில் வெற்றி அடைய ஏராளமான பக்தர்கள் வந்து தொழுகின்றனர். தொழிலில் முன்னேற வியாபாரம் சிறக்க வியாபார அபிவிருத்தி ஸ்தலமாக இக்கோயில் விளங்குகிறது. Share It
மயிலாடுதுறை மாவட்டம் நல்லாடை கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயில். பரணி நட்சத்திர பரிகார ஸ்தலமாக விளங்கும் இங்கு அர்த்தநாரீஸ்வரர் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். பார்வதி தேவியின் சாபத்தால் ஒளியை இழந்த சூரியன் இங்கு சாபவிமோசனம் பெற்றதாக ஐதீகம் குழந்தை வரம், கணவன் மனைவி ஒற்றுமை வேண்டி அக்னீஸ்வரரை வழிபட்டால் கை மேல் பலன் கிடைக்கும். நண்பர்களுக்கு பகிரவும், Share It
தஞ்சை கலெக்டர் பா.பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வரும் மார்ச்.14 காலை 10 மணியளவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100-க்கும் அதிகமான காலியிடங்களுக்கு நபர்களைத் தேர்வு செய்யவுள்ளனர். SHARE NOW!
குமரிக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (மார்ச்.12) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா ? கமெண்ட் செய்யவும்!
Sorry, no posts matched your criteria.