India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பட்டுக்கோட்டை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-24ம் கல்வியாண்டிற்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு மாணவ மாணவிகள் சேர்க்கைக்கான முன்பதிவு வரும் 29ம் தேதி தொடங்குகிறது. இந்த பயிற்சி செப்டம்பர் மாதம் தொடங்கப்படுகிறது. பயிற்சி காலம் ஓர் ஆண்டு ஆகும். தமிழில் மட்டுமே பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். 17 வயது நிரம்பி, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நீலகண்டப் பிளையார் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் கடைசி விழாவாக தெப்ப உத்ஸவம் நேற்று(ஏப்.25) நடைபெற்றது. இதில், கோயில் அருகிலுள்ள திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வள்ளி – தெய்வானையுடன் முருகன் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.
தஞ்சை அருகே உள்ள வெள்ளாம்பெரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் புகழேந்தி (43). இவர் மருவூர் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார். மாமியாரின் மருத்துவ செலவிற்காக பலரிடம் கடன் வாங்கியிருந்தார். கடனை திருப்பி செலுத்த முடியாமல் (விஷம்) சாப்பிட்டார். தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று (ஏப்,24) இறந்தார். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சையில் நம்மாழ்வார் மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் அருகேயுள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நம்மாழ்வார் திருவிழா வரும் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் நடத்தப்படுகிறது. இதில், பாரம்பரிய உணவுப் பொருள்கள் கொண்ட கண்காட்சியும் இடம்பெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாத திருக்கோவில் சித்திரை திருவிழா சித்திரை 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தினந்தோறும் சுவாமி காலை மாலை பல்வேறு வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. 9ம் திருநாளான இன்று காலை சுவாமி அம்பாள் திருத்தேரில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா, அரோகரா என்று முழக்கமிட்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
முல்லைவனநாதர் கோவில், காவிரி தென்கரையில் அமைந்துள்ள சிவதலமாகும். புராணத்தின் படி முல்லை கொடி சூழ்ந்த இக்கோவில், 18ஆவது தேவராப்பாடல் பெற்ற தலமாகும். மேலும், பஞ்ச ஆரண்ய தலங்களில் ஒன்றான முல்லைவனத் தலமாகும். குறிப்பாக வைகறை, காலை, நண்பகல், மாலை, அர்த்த சாமம் ஆகிய காலங்களில் வழிபடும் பழக்கம் இன்றும் வழக்கில் உள்ளது கூடுதல் சிறப்பாகும். இக்கோயிலில் ரதவடிவிலான சபாமண்டபம் உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள அண்டக்குடி, தியாகசமுத்திரம், அலவந்திபுரம், புள்ளபூதங்குடி, கூனஞ்சேரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரம் ஏக்கரில் நெல், பருத்தி, உளுந்து உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். மும்முனை மின்சாரம் சரிவர வழங்காததால், இந்த பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் கருகி நாசமாகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன் தினம் காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு போன் செய்த ஒருவர் பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயில் தெப்பக்குளம் அருகே வெடிகுண்டு உள்ளதாக கூறியுள்ளார். இதனால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நேற்று தொலைபேசி எண்ணை ஆய்வு செய்த போலீசார் மயிலாடுதுறையை சேர்ந்த சிங்காரவேலு என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் போதையில் செய்து உள்ளார்.இன்று (ஏப்,24) கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே வேம்பக்குடி கீழத்தெருவை சேர்ந்தவர்கள் ஜெகன்(30), பாக்யராஜ்(39). இவர்கள் இருவரும் நேற்று(ஏப்.23) பைக்கில் தஞ்சை-விக்ரவாண்டி நெடுஞ்சாலையில் சென்றனர். அப்போது, வேம்பக்குடி அருகே வந்தபோது எதிரே திருச்சியில் இருந்து கும்பகோணம் சென்ற சரக்கு ஆட்டோ மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கும்பகோணத்தில் இருந்து இன்று(ஏப்.24) காலை தஞ்சாவூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்து, அய்யம்பேட்டை ஸ்டார் லைன் கல்லூரி அருகே வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் லட்சுமி(50) என்பவர் உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.