India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
போக்குவரத்து ஆணையரின் சுற்றறிக்கையின்படி, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறையின்படியும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள், அவசர நேர கதவுகள், முதலுதவி பெட்டிகள் உள்ளிட்டவைகள் இருக்கிறதா என்பது குறித்து வருகிற 11-ம் தேதி தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் ஆய்வு செய்யப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கம் சார்பாக, தஞ்சாவூர் மாவட்ட சதுரங்க சங்கம் ஏற்பாட்டில், கும்பகோணம் சட்டமன்ற தொகுதி, கோவிலாச்சேரியில் அமைந்துள்ள அன்னை பொறியியல் கல்லூரியில், 36வது தமிழ்நாடு மாநில அளவிலான 13 வயத்திற்குட்பட்டவர்களுக்கான “சதுரங்க சாம்பியன்ஷிப் 2024” போட்டி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் தொடங்கி வைத்து, வாழ்த்துரை வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று(மே 08) மதியம் 1 மணி வரை இடியுடன் கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெப்பம் அதிகரிகத்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது மக்களுக்கு சற்று மகிழ்ச்சியை தந்துள்ளது.
தஞ்சை விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வந்த கல்லணை கால்வாய், சுட்டெரிக்கும் வெயிலால் நீரின்றி வறண்டு கிடக்கிறது. இதனை பார்த்த இளைஞர்கள் கல்லணை கால்வாய்க்குள் இறங்கி உற்சாகமாக கிரிக்கெட் விளையாட தொடங்கி உள்ளனர். அவர்களுக்கு ஏற்றார்போல் கல்லணை கால்வாய்க்குள் ஆங்காங்கே சிமெண்டு தளம் போடப்பட்டுள்ளது. இதில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிகளவில் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஒன்றியம், உடையாளூர் கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் விவசாய நிலத்திற்கு தண்ணீர் செல்லும் வாய்க்காலில் மதில்சுவர் அமைப்பதை வன்மையாக கண்டிப்பதாக ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தஞ்சை ஆட்சியர் உடனடி நடவடிக்கை வேண்டும் எனவும் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளரும், ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தஞ்சாவூர், சாணூர்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஹரிகரன். நேற்று இரவு (மே.6) புதிய பேருந்து நிலையம் அருகே தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த மூன்று இளைஞர்களுக்கும் ஹரிஹரனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அந்த இளைஞர்கள் தாக்கியதில் ஹரிஹரன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இது குறித்து மருத்துவகல்லூரி காவல்துறையினர் மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகள் நேற்று(மே 6) வெளியானது. இதில் தஞ்சாவூர் மாவட்டம் 93.46% தேர்ச்சி பெற்றிருந்தது. இந்நிலையில் தஞ்சாவூர் தனியார் பள்ளியில் படித்த இரட்டையர்களான ஜெர்ஷன் – ஜாஸன் ஆகியோரும் பொதுத்தேர்வு எழுதி இருந்தனர். உருவத்தில் ஒரே மாதிரி இருக்கும் இவர்கள், மதிப்பெண்ணிலும் பிரியாமல் ‘506’ பெற்று அசத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல், உங்களை சுற்றி நடக்கும் உள்ளூர் நிகழ்சிகள், புகார்கள், கோரிக்கைகள், அரசியல் நிகழ்வுகளை செய்திகளாக பதிவேற்றி நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
பூதலூர் அருகே சித்திரக்குடியில் சத்தியா என்பவரின் நிலத்தில் நந்தி மற்றும் விஷ்ணு சிலைகள் பாதி புதைந்த நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன் பேரில், சரசுவதி மகால் நூலக தமிழ்ப் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணிமாறன் ஆய்வில் ஈடுபட்டார். அதில், இந்த சிலைகள் கி.பி. 9 முதல் 10ம் நூற்றாண்டை சேர்ந்ததாகவும், சோழர் காலத்தில் முக்கிய பகுதியாகவும் இருந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
தென்னிந்தியாவின் பழமையான தேவாலயங்களில் ஒன்றாக உள்ளது தஞ்சாவூர் ஸ்வார்ட்ஸ் சர்ச் ஆகும். 1779 இல் டேனிஷ் மிஷனரியான கிறிஸ்டியன் ஃபிரெட்ரிக் ஸ்வார்ஸ் என்பவரால் கட்டப்பட்டது. 1780 முதல் வழக்கமான வெகுஜனங்களை நடத்தினார். இதிலுள்ள சிலையை, லண்டனில் வாழ்ந்த இத்தாலிய சிற்பி ஜான் ஃபிளாக்ஸ்மேன் 1807இல் சரபோஜி மன்னரின் வேண்டுகோளிற்காக சிலையை செதுக்கியுள்ளார். இச்சிலை 1811 இல் தேவாலயத்தில் நிறுவப்பட்டது.
Sorry, no posts matched your criteria.