Thanjavur

News April 2, 2025

தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும்ரூ.538 கோடி கூட்டுறவு கடன் 

image

2024-25ம் ஆண்டுக்கு 585 கோடி நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டில் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் கடந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 24 வரை ரூ.538.10 கோடி வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் நடப்பு சாகுபடி பருவத்திற்கு 4312 19 டன் உரங்கள் தற்பொழுது இருப்பில் உள்ளதாக கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News April 2, 2025

தஞ்சையில் சோழர்கள் ஆட்சி புரிந்த இடத்தில் ஒருநாள் சுற்றலா

image

சுற்றுலா வளர்ச்சி துறை, தஞ்சாவூர் மாவட்டம் இணைந்து ஒரு நாள் இன்பச் சுற்றுலா வரும் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் சோழர்கள் ஆட்சி புரிந்த திருபழனம், திருவைகாவூர், திருபுறம்பியம், சோழன் மாளிகை, பட்டீஸ்வரம், உடையாளூர், தாராசுரம் ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்லப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் 9489129765 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பகிரவும்

News April 2, 2025

தஞ்சாவூர் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளர் (Assistant Manager) பணிக்கான 100 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.15,000 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

News April 2, 2025

நினைத்ததை நடத்தும் சாய்பாபாவின் திருக்கோவிலின்

image

சாய்பாபா பக்தர்களுக்கு ஒரு முறையாவது சீரடிக்கு சென்று சாய்பாபாவை பார்த்து விட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அந்த வாய்ப்பு எட்டாக்கனியாகவே இருக்கிறது. திருச்சி அக்கரைப்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சீரடி சாய்பாபா கோவிலானது அச்சு அசலாக சீரடி கோவில் போலவே கட்டப்பட்டுள்ளது. சீரடி செல்ல முடியாதவர்கள் இந்த கோவிலிக்கு சென்று வந்தால் சீரடிக்கு சென்று வந்த அனுபவத்தை பெறலாம். ஷேர் பண்ணுங்க

News April 2, 2025

தஞ்சாவூர்: சாதி பெயர் பயன்படுத்த தடை?

image

ஒரத்தநாட்டைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஓன்று தாக்கல் செய்தார்.அதில் குறிப்பிட்ட சாதியின் பெயரோ, சமுதாய குழுக்களின் பெயரோ கோவில் திருவிழாக்களில் இடம்பெறக் கூடாது என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள், இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கினை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

News April 1, 2025

BREAKING: கும்பகோணம் வெற்றிக்கு புவிசார் குறியீடு

image

தஞ்சை, கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது என அறிவுசார் சொத்துரிமை அட்டார்னி சங்கத் தலைவர் சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார். காவிரி ஆற்றுப் படுகையில் விளைவதால் கும்பகோணம் வெற்றிலை தனி சிறப்பு பெற்று விளங்குகிறது. தஞ்சையில் ஏற்கனவே தஞ்சாவூர் தட்டு, ஓவியம், வீணை, தலையாட்டி பொம்மை, சுவாமிமலை வெண்கல சிலை உள்பட 9 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க..

News April 1, 2025

அங்கன்வாடி பணிக்கு ரெடியா?

image

தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இலவசமாக, அங்கன்வாடி ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதிற்கு அதிகமான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் மூலம் தகுதிபெறுபவர்களுக்கு தொடக்கமே மாதம் ரூ.7,500 முதல் ரூ.20,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களை இங்கு <>கிளிக் <<>>செய்து அறியலாம். பிறர் பயன்பெற SHARE செய்து உதவுங்கள்..

News April 1, 2025

மன வளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞர் கைது

image

கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மன வளர்ச்சி குன்றிய பெண்ணிற்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில் அப்பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தயாரிடன் சைகையில் கூறி அழுதுள்ளார். அதன்பின் திருவிடைமருதூர் மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில், சன்னகுளம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News March 31, 2025

தஞ்சாவூர்ல உங்க வீட்டு குட்டீஸ்க்கு செம ட்ரீட் கொடுக்க தயாரா?

image

விடுமுறை தொடங்கிய நிலையில் மக்கள் பல்வேறு இடங்களுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். அதன்படி தற்போது தஞ்சாவூரில் மட்டும் இருக்கும் சூப்பர் பிளேஸ் (பொழுதுபோக்கு இடங்கள்) 1.சிவகங்கை பூங்கா 2.கல்லணை டேம் 3.தஞ்சாவூர் நாயக்கர் அரண்மனை, 4.சமுத்திரம் ஏரி பூங்கா 5. மனோரா பாயிண்ட் கலங்கரை விளக்கம் போன்ற இடங்கள் தஞ்சை மாவட்டத்தில் இருக்கிறது. குட்டிஸ்க்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க அனைவருக்கும் Share பண்ணுங்க..

News March 31, 2025

பேராவூரணியில் ஒரு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

image

இன்று (மார்ச்.31)பேராவூரணியில் ஒரு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதனை யாம் வெளியீட்டகமும் ஆயர் சமூக அறக்கட்டளையும் இணைந்து நடத்தியது. இந்நிகழ்வின் சிறப்புபயிற்சியாளராக சிவா அய்யணன்,பெரி,கபிலன் பிரகாஷ் ,பாஸ்கர்,முத்துக்குமார், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் .நீலகண்டன், சாரதி ,காளிதாஸ், மணிகண்டன் மற்றும் பயனாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.

error: Content is protected !!