Thanjavur

News April 5, 2025

சுய உதவி குழுக்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆட்சியர்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மகளிர் சுய உதவி குழுக்களில் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு விலை நிர்ணயம் (அ) சந்தைப்படுத்தல் உருவாக்கும் வகையில் மண்டல பொது வசதி மையம் துவங்கப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தில் பயன்பெற தகுந்த ஆவணங்களுடன் வரும் 8ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை வழங்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 5, 2025

கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் வேலை

image

தஞ்சாவூர் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தஞ்சை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் உரிய ஆவணங்களுடன் வருகிற 10ஆம் நாஞ்சிக்கோட்டையில் உள்ள ஆவின் தலைமையிடத்தில் நடைபெறும் நேர்காணலில் பங்கு பெறுமாறு தெரிவித்துள்ளார். (SHARE பண்ணுங்க)

News April 5, 2025

தஞ்சை: வயலில் கிடந்த பச்சிளம் குழந்தை 

image

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள விஷ்ணம்பேட்டை கிராமத்தில் நேற்று வயலில் பச்சிளம் பெண் குழந்தை உயிருடன் கிடந்துள்ளது. பிலோமினாள் என்ற பெண், குழந்தையின் அழுகுரல் கேட்டு அருகில் சென்று பார்த்துள்ளார். உடனடியாக அவர் தனது கணவருடன் குழந்தையை திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தார். குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 4, 2025

தஞ்சையில் இலவச பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு

image

தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து நடத்தும் TNPSC IV தேர்விற்கான கட்டணமில்லா இலவச பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம், திருப்பனந்தாள், திருவோணம், கும்பகோணம் ஆகிய இடங்களில் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு பதிவு செய்ய ஆன்லைன் இணைய முகவரி ஆட்சியர் வழங்கியுள்ளார். மேலும் அறிய <>இங்கு க்ளிக்<<>> செய்யவும்.

News April 4, 2025

பட்டுக்கோட்டையில் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குரூப்-4 தேர்வு ஜூலையில் நடைபெற உள்ளது. இதனால் பட்டுக்கோட்டை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த போட்டி தேர்வாளர்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் பட்டுக்கோட்டை அறிவுசார் மையத்தில் வரும் 9ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது என்று கூறியுள்ளார். இதை போட்டி தேர்வுக்கு தயாராவோருக்கு SHARE செய்து பயன்பெற உதவுங்கள்…

News April 4, 2025

தஞ்சை மாவட்டத்தில் ரூ.15,000 சம்பளத்தில் வேலை

image

தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளர் (Assistant Manager) பணிக்கான 100 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.15,000 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுடைவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்..

News April 4, 2025

கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர்கள் நேர்காணல்

image

மத்திய அரசின் அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு வணிகம் செய்வதற்காக நேரடி முகவர்கள் மற்றும் பல அலுவலர்கள் சேர்க்கைக்கான நேர்காணல் ஏப்ரல் 23ஆம் தேதி தஞ்சை கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், 24ஆம் தேதி பாபநாசத்திலும், 25ஆம் தேதி மன்னார்குடி தலைமை தபால் நிலையத்திலும் நடைபெற உள்ளது. இதற்கு 18 வயது நிரம்பியவர்களாகவும், குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருத்தல் அவசியம்.

News April 3, 2025

தஞ்சையில் மின்துறை சிறப்பு முகாம்

image

மின்துறை பற்றிய புகார்களுக்கு தீர்வு காணும் வகையில் ஏப்ரல் 05ஆம் தேதி சிறப்பு முகாம் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுகோட்டை, ஒரத்தநாடு, அனைத்து கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மின் நுகர்வோர்கள் மின் கணக்கீடு சம்மந்தமாகவும், மீட்டர் பழுது சம்மந்தமாகவும், மின் கம்பங்கள் சேதம் அடைந்தது பற்றியும். புகார்களை தெரிவிக்கலாம் என ஆட்சியர் செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார்.

News April 3, 2025

தஞ்சையில் வேலை வாய்ப்பு

image

தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Sales Executive) உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள்<> இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News April 3, 2025

சொத்து வரி செலுத்தினால் 5% ஊக்கத்தொகை

image

தஞ்சை மாநகராட்சி 2025-26 நிதியாண்டின் முதலாம் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல்.30ஆம் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு 5% ஊக்கத்தொகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வரியை வரி வசூல் மையம் மூலமாகவோ அல்லது கியூ.ஆர் கோடு, யூபிஐ, கூகுள் பே போன்ற செயலிகள் மூலமாகவோ செலுத்தலாம் என தஞ்சை மாநகராட்சி அறிவித்துள்ளது.(SHARE பண்ணுங்க)

error: Content is protected !!