India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவையாறில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற டிப்பர் லாரி திங்களூர் ஆர்ச் மெயின் சாலையில் திரும்பியபோது திருவையாறு நோக்கி சென்ற அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த ஹரிஷ் குமார் (11), கற்பகம் (58) என்ற பெண், டிப்பர் லாரி டிரைவர் அரசு ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். மேலும், விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கடந்த 2018 ஆம் ஆண்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. பத்தாண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை காலமுறை ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே காலமுறை ஊதியம் உடனடியாக வழங்க கோரி தஞ்சை மாநகரத்தின் துணை சுகாதார அலுவலகம் முன்பு இன்று (ஜூலை- 29) பல கோரிக்கைகளை வலியுறுத்தி பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேட்டூர் அணை நிரம்பி வரும் நிலையில், அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட வாய்ப்புள்ளது. எனவே தஞ்சை மாவட்டத்திலுள்ள காவிரி, வெண்ணாறு, குடமுருட்டி, கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும் என்பதால் கரையோர மக்கள் எச்சரிக்கை இருக்கவும், குளிக்கவோ – செல்ஃபி எடுக்க கூடாது, கால்நடைகளை நீர்நிலைகளுக்கு அழைத்து செல்லக்கூடாது என ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரிடம், இன்ஸ்டாகிராம் மூலமாக தொடர்பு கொண்ட நபர், இணையதளம் மூலம் முதலீடு செய்தால் அதிகம் லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய அப்பெண் மர்ம நபர் கூறிய வங்கி கணக்குக்கு ரூ.19,75,087-யை பரிவர்த்தனை செய்துள்ளார். பின்னர் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுகுறித்து தஞ்சை சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனை பற்றிய உங்கள் கருத்து?
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள காவிரி தண்ணீரை ஆடிப்பெருக்கின் போது பாதுகாப்பாக கொண்டாடுவது, குளங்கள், ஏரிகளில் தண்ணீரை சேமிப்பது, அதிகப்படியாக தண்ணீர் வரும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.
பத்துகாடு விடுதியை சேர்ந்தவர் சின்னகுழந்தை (49). இவருக்கும் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அப்பெண்ணின் மருமகன் விஜயகுமார் தனது மாமியாரை கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று அப்பெண்ணை தேடி வந்த சின்னகுழந்தையை விஜயகுமார் கட்டையால் அடித்து கொலை செய்து உடலை செப்டிக் டேங்கில் மறைத்துள்ளார்.
தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி டெல்லியில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில், “தஞ்சையில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் ரயில் இயக்க வேண்டும். பட்டுக்கோட்டை பேராவூரணி வழியாக கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை வாரத்தின் 7 நாட்களும் இயக்க வேண்டும் திருச்சி – பாலக்காடு ரயிலை தஞ்சை வரை நீட்டிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சை வடக்கு மாவட்ட திமுக சார்பில், கும்பகோணம் காந்தி பூங்கா அருகில், தமிழ்நாட்டை வஞ்சித்த மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
தமிழகத்தின் இன்று 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது அடுத்த இரவு 7 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லணையில் இன்று காலை நிலவரப்படி கொள்ளிடத்தில் மட்டும் 45 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆகியவற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை. அது போல மேட்டூரில் 99.11 அடியாகவும், 63.693 தண்ணீர் இருப்பாவும் உள்ளது. அணைக்கு 93.828 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து 1004 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.