Thanjavur

News April 12, 2025

தஞ்சையில் ஆதார் சிறப்பு முகாம் 

image

தஞ்சை கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் தங்கமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சித்திரை திருவிழாவையொட்டி ஆதார் மற்றும் சர்வதேச தபால் சேவை சிறப்பு முகாம் வருகிற 15ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி தஞ்சை கோட்டத்தில் உள்ள தஞ்சை, மன்னார்குடி, பாபநாசம் தலைமை தபால் அலுவலகங்கள் மற்றும் ஆதார் சேவை மையம் உள்ள துணை தபால் அலுவலகங்களில் நடக்கிறது.

News April 12, 2025

தஞ்சை: டிகிரி முடித்தவர்களுக்கு வேலை

image

தஞ்சையில் உள்ள தனியார் நிறுவனத்தில் Assistant Manager பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.15,000 ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்.

News April 11, 2025

தஞ்சையில் கடற்கரையா ?

image

தஞ்சையின் இப்படி ஒரு இடமா என்று வியக்கவைக்கும் இடம் தான் மனோரா. தஞ்சாவூரில் இருந்து 65 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தான் மனோரா கோபுரம். பெரும்பாலும் தஞ்சை என்றதும் விவசாய பூமி,தஞ்சை கோவில் தான் நியாபம் வரும் ஆனால் பலருக்கும் தெரியாத உண்மை என்னவென்றால் தஞ்சையில் மனோரா கடற்கரை என்ற இடம் உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வரலாற்று கோபுரத்தையும் கடற்கரை அழகையும் வியந்து பார்க்கின்றனர். ஷேர் பண்ணுங்க

News April 11, 2025

ரேஷன் கார்டில் திருத்தும் செய்யணுமா?

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களை இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை. ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE செய்து உதவவும்.

News April 10, 2025

தஞ்சை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்கள்

image

தஞ்சை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசு உதவி எண்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04362-230121, மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077, விபத்து அவசர வாகன உதவி – 102, குழந்தைகள் பாதுகாப்பு – 1098, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் – 1800 425 3993, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் – 18004250111, காவல் கண்காணிப்பாளர் – 04362-277110. பிறரும் தெரிந்து கொள்ள இதை SHARE செய்யவும்.

News April 10, 2025

தஞ்சை: சத்துணவு மையத்தில் வேலை

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். உங்க நண்பர்களுக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க…

News April 10, 2025

ராணுவத்தில் சேர கடைசி வாய்ப்பு-APPLY NOW!

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டிற்குரிய அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பணிகளுக்குஅதிகாரப்பூர்வ <>இணையத்தில் <<>>ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில், இன்றே கடைசி நாள் என்பதால் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உடனே APPLY செய்து, உங்க நண்பர்களுக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க…

News April 10, 2025

தஞ்சையில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை

image

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் நாளை (வியாழன்) அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள், உரிமம் பெற்றுள்ள மதுபான கடைகளும், மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினம் யாரும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 10, 2025

தஞ்சையில் முதலைகள் பாதுகாப்பு மையம், அமைச்சர் அறிவிப்பு

image

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தஞ்சை மாவட்டம் அணைக்கரை பகுதியில் முதலைகள் அதிகம் இருப்பதால் இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக் கூடாது எனும் காரணத்தினால் முதலைகள் பாதுகாப்பு மையம் அமைக்க ரூபாய் 32 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இன்று அமைச்சர் க. பொன்முடி தெரிவித்தார்.

News April 9, 2025

கோடி நலம் தரும் தஞ்சை கோடியம்மன் ஆலயம்

image

தஞ்சை – திருவையாறு செல்லும் வழியில் இந்த கோடியம்மன் ஆலயம் உள்ளது. இங்குள்ள அம்மன் கோடி அவதாரம் எடுத்து அரக்கர்களை வதம் செய்ததால் இந்த அம்மனுக்கு கோடியம்மன் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. திருமண தடை, மகப்பேறு கிடைக்க பெண்கள் வழிபடுகின்றனர். மேலும் இந்த அம்மனை வணங்கினால் கண் திருஷ்டி, பணக் கஷ்டம் போன்ற அனைத்தும் நீங்கும் என கூறுகின்றனர். இதை SHARE செய்யவும்.

error: Content is protected !!