Tenkasi

News September 16, 2025

தென்காசி: ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது

image

சமூக வலைத்தளங்களில் ஆயுதங்களுடன் வீடியோ, புகைப்படம் பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் என தென்காசி எஸ்பி அரவிந்த் எச்சரித்துள்ளார். அச்சன்புதூரில் பாலமுருகன் (20) ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டதால், ஆயுத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டார். சமூக வலைத்தள பயனர்கள் பொறுப்புடன், சட்ட அறிவுடன் செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது

News September 16, 2025

குற்றாலத்தில் பிரதமர் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

image

பிரதமர் நரேந்திர மோடி 75வது பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 17ம் தேதி பாஜக தெற்கு ஒன்றியம் சார்பில் குற்றாலம் திரு குற்றாலநாதர் திருக்கோவிலில் சிறப்பு பூஜையும் அதைத்தொடர்ந்து குற்றாலம் கோவில் அன்னதான கூடத்தில் பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் அன்னதானமும் வழங்கப்படுகிறது. திரளாக பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று குற்றாலம் திருமுருகன் கேட்டுக்கொண்டார்.

News September 15, 2025

தென்காசி மாவட்டம் இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரங்கள்

image

தென்காசி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இன்று (15.09.2025) தென்காசி மாவட்ட உட்கோட்ட பகுதியில் உள்ள ஊர்களான ஆலங்குளம் தென்காசி, புளியங்குடி சங்கரன்கோவில் போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இரவு காவல் துறை உதவி தேவைப்பட்டால் மேலே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News September 15, 2025

தென்காசி குறைதீர்க்கும் கூட்டத்தில் 530 மனுக்கள் பெறப்பட்டன

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (செப்.15) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமை வகித்தார். முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 530 மனுக்கள் பெறப்பட்டது.

News September 15, 2025

தென்காசிக்கு வருகை தரும் முதலமைச்சர்

image

சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் தென்காசி மாவட்டத்தில் நடைபெற உள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். அடுத்த வாரத்தில் எந்த தேதியில் கலந்து கொள்வார் என்பது தெரியவரும் என்றார்.

News September 15, 2025

தென்காசி : பட்டாவில் திருத்தமா??

image

தென்காசி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு மாவட்ட அதிகாரியை 0462-2500592 அணுகலாம். SHARE பண்ணுங்க!

News September 15, 2025

தென்காசி: நீங்க பட்டதாரியா? ரூ.35,000 வேலை ரெடி!

image

தென்காசி மக்களே, தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள் 7,972 அலுவலக உதவியாளர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்து 18 முதல் 28 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,000 வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து வருகிற 21ம் தேதிக்குள் விண்ணப்பியுங்க. டிகிரி முடித்தவர்களுகு SHARE செய்து உதவுங்க.

News September 15, 2025

தென்காசி: ஆசிரியை வீட்டில் திருட்டு

image

ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே வசிப்பவர் ஜெயா அற்புதமணி (90). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர், நேற்று செப்.14 காலை அருகில் உள்ள தேவாலயத்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது வீட்டின் கதவு திறக்கபட்டு பீரோவில் இருந்த 8 கிராம் தங்க நகை, ரூ. 5 ஆயிரம் திருடு போயிருந்தது. இதுக்குறித்த புகாரின்பேரில், ஆலங்குளம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

News September 15, 2025

தென்காசி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா??

image

தென்காசி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <>க்ளிக்<<>> செய்து தென்காசி மாவட்டம், சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க… இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும். கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவல்களுக்கு: 94987 94987 அழையுங்க.. இந்த அருமையான தகவலை உங்களுக்கு தெரிஞ்சுவங்களுக்கு SHARE பண்ணுங்க..

News September 15, 2025

தென்காசியில் அன்பு கரங்கள் திட்ட தொடக்க விழா

image

தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (செப்.15) அன்பு கரங்கள் திட்ட தொடக்க விழா நடைபெற உள்ளது. காலை 10.30 நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தென்காசி, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

error: Content is protected !!