India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டத்தில் அக்டோபா் மாதம் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் திமுக கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தென்காசி மக்களே உங்க பகுதியில் உள்ள அடிப்படை வசதிகள் போன்ற குறைகள் இருந்தால் முதல்வரிடம் மனு அளிக்க தயாராகுங்க.மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க
சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் திரு. மா.பாலசுப்ரமணியம் அவர்களின் செய்தி குறிப்பு நடுவக்குறிச்சி உபமின் நிலையத்தில் வரும் 18.09.2025 அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் அன்று பெரியகோவிலான்குளம். சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி மைனர், வேப்பங்குளம். சில்லிகுளம் சூரங்குடி ஆகிய ஊர்களுக்கு மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 26.08.2025 முதல் 12.09.2025 வரை மாவட்ட அளவிலான (ம) மண்டல அளவிலான போட்டிகள் பள்ளி பிரிவு, கல்லூரி பிரிவு, மாற்றுத்திறனாளிகள் பிரிவு, பொது மக்கள் பிரிவு, அரசு ஊழியர்கள் பிரிவு என ஐந்து பிரிவுகளில் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா தென்காசி மாவட்ட விளையாட்டு மையத்தில் (செப்.18) காலை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (16-09-25) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விபரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் -9884042100 ஐ தொடர்பு கொள்ளலாம்.
செங்கோட்டை – சென்னை சென்ட்ரல் மார்க்கமாக சிறப்பு அதிவிரைவு ரயில் வண்டி எண்(06121) செங்கோட்டையில் இருந்து ஒவ்வொரு வியாழன் கிழமையும் செப்- 24 முதல் அக்-23 வரை ஆயுதபூஜை & தீபாவளியை முன்னிட்டு இயங்க இருக்கிறது. இதற்கான முன்பதிவு விரைவில் தொடங்க உள்ளது. (நிறுத்தங்கள் : மதுரை , திண்டுக்கல், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், தென்காசி)
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், Specialist Officer பணிக்கு 127 காலியிடங்கள் உள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் (அ) BE., B.TECH., MBA., முடித்தவர்கள் 03.10.2025 ம் தேதிக்குள் இந்த லிங்கை <
தென்காசி மாவட்ட மக்களே, இனி உங்கள் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் வேலை வாய்ப்புகளை தெரிந்து கொள்ள இனி எங்கும் அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்காகவே தமிழக அரசு சார்பில் வேலைவாய்ப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கே <
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் மற்றும் அச்சன்புதூர் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அங்கிருந்து மின்விநியோகம் பெறும் பாவூர்சத்திரம், மேலப்பாவூர், கீழப்பாவூர், குறும்பலாச்சேரி, நாடார்பட்டி, ஆவுடையானூர், வெய்காலிபட்டி, சின்னநாடனூர், திப்பணம்பட்டி, பெத்தநாடார்பட்டி, வடகரை, அச்சன்புதூர், பண்பொழி உள்ளிட்ட சுற்று பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
இரயில்வே துறையில் Station Controller வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
▶️ காலியிடங்கள்: 368
▶️ வயது வரம்பு: 20 – 33
▶️ கல்வி தகுதி: Any Degree
▶️ பணிகள்: Station Controller
▶️ சம்பளம்: ரூ.35,400
▶️ பணியிடம்: தமிழ்நாடு
▶️ ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 15.09.2025
▶️ ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 14.10.2025
விண்ணப்பிக்க <
ஆலங்குளம் அருகே ஓடைமறிச்சானை சேர்ந்தவர் கனகராஜ். இவருக்குக் கடன் தொல்லை இருந்து வந்ததால், குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று மதுவில் விஷம் கலந்து குடித்ததில் உயிரிழந்தார். ஆலங்குளம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுக்குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
Sorry, no posts matched your criteria.