Tenkasi

News April 18, 2025

தென்காசி : கடவுளின் தலைவலியை போக்கும் தைலம்

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலநாதர் கோயில் சைவ சமய பெரியோர், நாயன்மார்களால் பாடல் பெற்ற பழமை வாய்ந்த கோயில் ஆகும். இக்கோயிலில் மூலவர் குற்றாலநாத சுவாமிக்கு ஏற்படும் தலைபாரத்தை நீக்க ஒவ்வொரு ஆண்டும் 48 மூலிகைகளால் தயாரிக்கப்படும் சந்தனாதி தைலம் காய்ச்சப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தைலம் விற்பனை செய்யப்படுவதால் ஏராளமான மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.

News April 18, 2025

தென்காசி மாவட்ட பிரதான அணைகளின் நீர்மட்ட நிலவரம்

image

தென்காசி மாவட்டம் மேக்கரையில் 132 அடி முழு கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் 32.50அடி ,72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பா நதி அணை நீர்மட்டம் 25 . 92 அடி ,36 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை நீர்மட்டம் 24 அடி , 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 54 அடி .85 முழு கொள்ளளவு கொண்ட கடனா அணையின் நீர்மட்டம் 52 அடி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.

News April 18, 2025

ஆலங்குளத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்

image

ஆலங்குளம் ஆலடி அருணா லிபரல் கலை, அறிவியல் கல்லூரியில் கோடை கால விளையாட்டு சிறப்பு பயிற்சி முகாம், விளையாட்டு போட்டிகள் ஏப்.21 முதல் மே 5 வரை நடைபெறவுள்ளது. 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு கபடி, கைப்பந்து, கிரிக்கெட் இலவசமாக பயிற்சியளிக்கப்படவுள்ளது. 63691107840, 9585713337, 9486511103 என்ற எண்ணில் முன்பதிவு செய்திடும் படி கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 18, 2025

தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட பி. எம். கிசான் திட்டவிவசாயிகள், இதர விவசாயிகளுக்கு விவசாயம் தொடர்பான திட்டங்களின் பயன்களை எளிதாக பெற ஆதார் எண் , நில உடைமை விபரங்களை சரிபார்த்து தனி அடையாள எண் வழங்க கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது ஏப்.30 க்குள் அனைத்து விவசாயிகளும் தங்கள் கிராமங்களில் நடக்கும் முகாம்களில் உரிய விபரங்களை கொடுத்து பதிவு செய்ய ஆட்சியர் கமல் கிஷோர் கேட்டுக் கொண்டுள்ள

News April 18, 2025

தென்காசி மக்களுக்கு சூப்பர் APP

image

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை, மருத்துவ உதவி உட்பட பல்வேறு இன்னல்களுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. *RAIL MADDED* என்ற அப்ளிகேஷனை இந்த <>லிங்க் <<>>மூலம் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம். தமிழ் உட்பட 12 மொழிகளில் இந்த செயலி செயல்படுகிறது. புகார்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து உதவவும்.

News April 18, 2025

காதல் திருமணம் செய்தவர் தந்தை மீது தாக்குதல்

image

கடையம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் முப்புடாதி (25) இவர் கீழ கடையம் பகுதியை சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .இந்த நிலையில் பெண்ணின் உறவினர்கள் முப்புடாதியின் தந்தையை அவதூறாக பேசி அடித்து தாக்கினர் .இதுகுறித்து சுந்தரம் அளித்த புகார் அடிப்படையில் பெண்ணின் உறவினர்கள் பாலா ,ஷங்கர் ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர் ஒருவரை தேடி வருகின்றனர்.

News April 17, 2025

மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை அனுப்ப மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களது புகார்களை மாநில ஆணையர், எண்.05, காமராஜர் சாலை, லேடி வெலிங்கடன் மகளிர் கல்லூரி வளாகம், சென்னை-600005 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது tnscpwdcircuitcourt@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ (30.04.2025) ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 9499933236 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 17, 2025

தென்காசியில் கோடைகால பயிற்சி முகாம் 

image

தென்காசி இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 21 நாட்கள் கோடைகால பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவர்கள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண் 04633-212580 / 86100 37399 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

News April 17, 2025

புளியங்குடி அருகே யோகா மாஸ்டர் மர்ம சாவு

image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து புளியங்குடி செல்லும் சாலையில் உள்ள இருமன்குளத்தை சேர்ந்தவர் மருதையா என்ற யோகா மருதையா (50). யோகா மாஸ்டரான இவர் நேற்றிரவு புதிய வீடு கட்டும் இடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து புளியங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது .

News April 17, 2025

தென்காசி மாவட்ட உதவி எண்கள் அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களின் உதவிக்காக தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1070
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 0462 –2501035
▶️காவல் -100
▶️விபத்து -108
▶️தீ தடுப்பு – 101
▶️குழந்தைகள் பாதுகாப்பு -1098
▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு – 1091
▶️பேரிடர் கால உதவிக்கு – 1077
உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும். அபத்தில் உள்ளவர்களுக்கு இது பெரிய உதவியாக இருக்கும்.

error: Content is protected !!