Tenkasi

News April 22, 2025

தென்காசி: வாகனங்கள் ஏலம் ஆட்சியர் தகவல்

image

தென்காசி அலகு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் ஏப்ரல் 26. காலை 11.00 மணிக்கு தொடங்கி மாலை 5.00 மணி வரை ஏலம் நடத்தப்பட உள்ளது. ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 23.04.2025 முதல் 25.04.2025 வரையிலான நாட்களில் தென்காசி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை சார்பு ஆய்வாளர் கட்டுப்பாட்டின் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிடலாம்

News April 22, 2025

தென்காசி: சுற்றுலா செல்வதற்கு சிறந்த இடங்கள்

image

தென்காசியில் விடுமுறையை கழிக்க சிறந்த சுற்றுலாத்தலங்கள்
▶அகஸ்தியர் நீர்வீழ்ச்சி
▶குற்றாலம் அருவிகள்
▶காசி விஸ்வநாதர் கோயில்
▶தென்காசி முருகன் கோயில்
▶ஐந்தருவி நீர்வீழ்ச்சி
▶சித்ர சபை
▶குதிரையார் அணை
▶தென்காசி கோட்டை
தென்காசியில் உள்ள இந்த இடங்களுக்கு செல்ல விரும்பும் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்

News April 22, 2025

தென்காசி தமிழக அரசு வழங்கும் உடனடி லோன் மேளா

image

தென்காசி மாவட்டத்தில் திருநெல்வேலி மத்திய கூட்டுறவு வங்கி மூலம் உடனடி லோன் மேளா அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசு திட்டம் சார்ந்த கடன் மற்றும் விவசாயம் சார்ந்த லோன் மேளா சேமிப்பு கணக்கு துவங்கப்பட்டு உடனடியாக கடன் வழங்கப்படும். தென்காசியில் வருகின்ற (28-4-2025) அன்று குத்துக்கல் வலசை S.R மஹாலில் காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. பணம் தேவைபடுவோருக்கு SHARE செய்து உதவவும்.

News April 21, 2025

தென்காசி: அரசு நிலத்தில் வசிப்பவர்களுக்கு அறிவிப்பு 

image

தென்காசியில் 5 ஆண்டுகளுக்கு மேலாக அரசு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வரும் மக்கள் ஆதார் கார்டு, மின்னணு குடும்ப அட்டை, மின் இணைப்பு இரசீது, வீட்டுத் தீர்வை இரசீது. சமையல் எரிவாயு அடையாள அட்டை/வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களுடன்  வட்டாட்சியர் அலுவலகத்தில் (30-04-2025)-தேதிக்குள் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர்  தெரிவித்துள்ளார்.

News April 21, 2025

தென்காசி : மத்திய அரசு சான்றிதழுடன் கூடிய இலவச பயிற்சி

image

இலத்தூர் ஹைலேண்ட் சிட்டி பகுதியில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், பெண்களுக்கான மத்திய அரசின் சான்றிதலுடன் கூடிய ஆரி ஒர்க், எம்ராய்டிங் மற்றும் பூந்தையல் தைப்பதற்கான இலவச பயிற்சி வகுப்பு ஏப்ரல் 28ஆம் தேதி தொடங்க உள்ளது. மேலும் விவரங்களுக்கு 7502596668 என்று தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். உடனே ஷேர் செய்யவும்

News April 21, 2025

தென்காசி : குத்தகை ஏலம் தேதி அறிவிப்பு

image

நீர்த்தேக்கங்களை குத்தகைக்கு எடுக்க விருப்பமுள்ளவர்கள். இணையவழி ஏலத்தில் ஒப்பந்தப்புள்ளியானது வரும் 22042025-ம் தேதி பிற்பகல் 200 மணி வரை சமர்ப்பிக்கலாம். மேலும் ஏலம் தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் adfishtirunelveliz@gmail.com என்ற அலுவலக மின்னஞ்சல் மூலமாகவோ (அ) மீன்துறை ஆய்வாளர் அலுவலகம் பொதுப்பணித்துறை வளாகம், தென்காசி (இ) குற்றாலம் என்ற முகவரியில் நேரில் அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

News April 21, 2025

தென்காசி: இது தான் கடைசி தேதி- ஆட்சியர் அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் இதுவரை சுமார் 50600 விவசாயிகள் மட்டுமே  பி.எம்.கிசான் திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். பல விவசாயிகள் பதிவு செய்யாமல் உள்ளனர். தகுதியான விவசாயிகள் பி.எம்.கிசான் திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற இந்த பதிவு அவசியமாகும். எனவே, 30.04.2025-க்குள் அனைத்து விவசாயிகளும் தங்கள் கிராமங்களில் நடக்கும் முகாம்களில் உரிய விபரங்களை கொடுத்து பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News April 21, 2025

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

image

தென்காசி, கடையம் மேற்கு தொடர்ச்சி மலையில் 84 அடி முழு கொள்ளளவு கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 53.25 அடி. 85 அடி முழு கொள்ளளவு கொண்ட கடனா அணை நீர்மட்டம் 51.20 அடி, 72 அடி முழு கொள்ளளவு கொண்ட கருப்பா நதி அணையின் நீர்மட்டம் 25.92 அடி. 36 அடி கொள்ளளவு கொண்ட குண்டார் அணையின் நீர்மட்டம் 25 அடி, 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் 30.25 அடி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 21, 2025

தென்காசி மாவட்ட வட்டாட்சியர் அலுவலக எண்கள்!

image

▶️திருவேங்கடம் வட்டாட்சியர் 04636-264400

▶️சங்கரன்கோவில் வட்டாட்சியர் 04636-222270

▶️சிவகிரி வட்டாட்சியர் 04636-250223

▶️ஆலங்குளம் வட்டாட்சியர் 04633-270899

▶️வீரகேரளம்புதூா் வட்டாட்சியர் 04633-277140

▶️ கடையநல்லூா் வட்டாட்சியர் 04633-245666

▶️ செங்கோட்டை வட்டாட்சியர் 04633-233276

▶️ தென்காசி வட்டாட்சியர் 04633-222262

உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News April 21, 2025

டிராக்டரிலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

image

திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்த தம்பதி முனியாண்டி – பெரியநாயகி (48). இவா்கள் ஜெயபால் என்பவருடன் சோ்ந்து தென்காசி மாவட்டம் ராயகிரியில் கரும்பு அரைவை ஆலை நடத்தி வருகின்றனா். இத்தம்பதி டிராக்டரில் கரும்பு ஏற்றுவதற்காக சென்றனர். அப்போது வேகத்தடையில் டிராக்டா் ஏறி இறங்கியபோது, பெரியநாயகி தவறி கீழே விழுந்து காயமடைந்தார். அவரை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

error: Content is protected !!