Tenkasi

News April 11, 2025

தென்காசி மாவட்ட காவல்துறை உதவி எண்கள் அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் இன்று (ஏப்ரல்-10) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அலுவலர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் காவல்துறையினரின் அவசர உதவிகள் தேவைப்படும். பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த காவல்துறையினரை தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்று கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 10, 2025

புவிசார் குறியீடு பெற்ற புளியங்குடி எலுமிச்சை

image

தமிழ்நாட்டில் மிகப்பெரிய எலுமிச்சைச்சந்தை புளியங்குடியில் தான் அமைந்துள்ளது. இங்கு தினமும் சராசரியாக 2000க்கும் மேற்பட்ட விவசாயிகள் எலுமிச்சை ஏலத்தில் கலந்து கொள்கின்றனர். அதனால் இதற்கு லெமன்சிட்டி என்று பெயருண்டு. தற்போது புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார்குறியீடு வழங்கியுள்ளது. இதன்மூலம் புளியங்குடியில் கிடைக்கும் எலுமிச்சை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி. *ஷேர் 

News April 10, 2025

தென்காசிக்கு உள்ளூர் விடுமுறை

image

பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி நெல்லை மாவட்டத்திற்கு நாளை (ஏப்.11) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஏப்.26 சனிக்கிழமை அன்று வேலைநாள் என கலெக்டர் சுகுமார் அறிவித்துள்ளார். அதேபோல், பங்குனி உத்திரம், காசி விஸ்வநாதர் கோயில் திருவிழாவையொட்டி தென்காசி மாவட்டத்திற்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாற்றமின்றி நடைபெறும்.

News April 10, 2025

தென்காசி நகரப் பகுதியில் உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம்

image

தென்காசி தாலுகாவில் வரும் 16ஆம் தேதி காலை 9 மணி முதல் 17ஆம் தேதி காலை 9 மணி வரை உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகம் நடக்கிறது கலெக்டர் கமல் கிஷோர் தலைமையில் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு துறை அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். 16ஆம் தேதி தாலுகாவில் நடக்கும் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்கிறார். அன்றைய தினம் மாலை 6:00 மணி முதல் நகர, கிராம பகுதிகளில் கலெக்டர்ஆய்வு மேற்கொண்டு இரவு தங்குகிறார்.

News April 10, 2025

தென்காசி அக்னிவீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு

image

தென்காசி மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் விண்ணப்பிக்க இன்றே (ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வாகும் அக்னி வீரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படுகிறது.

News April 10, 2025

தமிழில் பெயர்கள் வைக்காத கடைகள் மீது நடவடிக்கை

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக, உணவு, தொழில் நிறுவனங்களின் பெயர் பலகையானது தமிழில் இருக்க வேண்டும். பிற மொழியும் தேவைப்படும் பட்சத்தில் தமிழில் முதன்மையாகவும். பெரியதாகவும், போதிய இடைவெளியுடன் மற்ற மொழிகளை விட பார்வைக்கு மேலோங்கியும் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் இரண்டாவதாகவும், பிற மொழிகளில் அடுத்ததாகவும் இடம் பெற வேண்டும். இல்லையேல் நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் கமல் கிஷோர்.

News April 10, 2025

இளைஞர்களுக்கு எம்பிராய்டரி பயிற்சி வழங்க ஏற்பாடு

image

தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் நேற்று விடுத்துள்ள செய்திக் குறிப்பில்: தென்காசி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன இளைஞர்களுக்கு டிப்ளமோ 6 எம்பிராய்டரி மற்றும் ஜவுளி யில் கையால் அச்சிடும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. 18 முதல் 30 வயதினர் விண்ணப்பிக்கலாம். tahdco.com. என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருவாய் 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

News April 10, 2025

தென்காசியில் சிறு கனிம குத்தகை உரிமம் பெற விண்ணபிக்கலாம்

image

தென்காசி மாவட்டத்தில் சிறு கனிம குத்தகை உரிமம் வழங்கும் நடைமுறையானது வரும் ஏப்ரல் 15ம் தேதி முதல் முழுவதுமாக இணைய வழியில் மட்டும் செயல்படுத்தப்படவுள்ளது. எனவே வரும் ஏப்ரல் 15ம் தேதி முதல் தென்காசி மாவட்டத்தில் குவாரி குத்தகை உரிமம் கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் அனைத்தும் https://mimas.tn.gov.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே பெறப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல்.

News April 9, 2025

தென்காசி மாவட்டத்தில் இரவு ரோந்து பணி காவலர்கள்

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்.9) இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News April 9, 2025

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

image

அம்பை, கல்லிடைக்குறிச்சி, தென்காசி, சங்கரன்கோவில் ,ராஜபாளையம் , சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, வழியாக இயங்கும் நெல்லையில் இருந்து வாரந்தோறும் ஞாயிறு அன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து வாரந்தோறும் திங்கள் கிழமையில் மே மாதம் முதல் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 10ம் தேதி முதல் 8 மணிக்கு முன்பதிவு துவங்கும்.

error: Content is protected !!