India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய்தடுப்பு திட்டத்தின் கீழ் இரண்டாவது சுற்று ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் 28.04.2025 முதல் 27.05.2025 வரை நடைபெறவுள்ளது. எனவே ஆடுகள் வளர்ப்போர் இத்தருணத்தை பயன்படுத்தி எவ்வித பாகுபாடின்றி தங்கள் ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையை சோ்ந்தவா் கா.லெட்சுமணன்(70). இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் இவரது சகோதரா் கா.குமரப்பெருமாள்(72)க்கும் நடைபாதை தொடா்பாக 20 ஆண்டு பிரச்னை இருந்து வந்ததாம். இந்நிலையில் வியாழக்கிழமை லெட்சுமணன் அந்தப் பாதையில் சென்றபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில், குமரப்பெருமாள் வீட்டிலிருந்து அரிவாளை எடுத்து லெட்சுமணனை வெட்டினாரம். அதைத் தடுக்க வந்த லெட்சுமணன் மனைவிக்கும் வெட்டு விழுந்ததாம்.
தென்காசி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து நேரிட்டு படுகாயமடைந்த நபர்களுக்கு நிவாரணத்தொகை, காலமான நபர்களின் வாரிசுகளுக்கு ரூ.2,00,000 ( Hit and Run Motor Accident Scheme )2022 திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. எனவே பாதிக்கப்பட்டவர்கள் விபத்து நேரிட்ட பகுதியிலுள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் குண்டாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையில் பல தமிழ் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
▶️முதல்வன்
▶️ஸ்ரீ பண்ணாரி அம்மன்
▶️தாஸ்
▶️வருஷமெல்லாம் வசந்தம்
▶️வேலை கிடைச்சுடுச்சு
▶️அண்ணன் காட்டிய வழி
▶️ஓ மானே மானே
▶️செவத்தப் பொண்ணு
▶️பூமணி
▶️ராஜ ராஜேஸ்வரி
லிஸ்டில் வராத உங்களுக்கு தெரிந்த படங்களை கமெண்ட் செய்து , நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்(30). இவருடைய மனைவி சீதாலட்சுமி (29). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில் சீதாலட்சுமிக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டது. கணவருக்கும் சரிவர வேலை இல்லாத நிலையில் தனக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டதை அறிந்து மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தமிழக அரசின் புதிய திட்டமான, தமிழக பேருந்துகளில், யு.பி.ஐ (UPI) மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தி பயணச் சீட்டு பெற்றுக் கொள்ளும் முறை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்திலும், தென்காசி, சங்கரன்கோவில் டிப்போவில் இருந்து வரும் பேருந்துகளில் UPI மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தி பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2025-2026ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விடுதிகளில் மாணவ / மாணவியர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இவ்விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. கடைசி நாள்:மே.5 மாலை 5 மணி ஆகும். தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகிரி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தலைமை காவலர் சுந்தர்ராஜ் மற்றும் இளையராஜா ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ராயகிரி அருகே TN 79 E 3274 என்ற எண் கொண்ட Tata Ace வாகனத்தில் 1300 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்பட்டது கண்டறியப்பட்டது. வாகனத்தை ஓட்டி வந்த துரைசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த குருசாமி என்பவர் மகன் கிருஷ்ணசாமி என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்ட திட்ட அலுவலரின் கீழ் கட்டுப்பாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்களில் உள்ள காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணிகளுக்கு நேரடியாக நியமனம் செய்யப்பட இருக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே (ஏப்.23) கடைசி நாள். <
தென்காசியில் இருந்து பண்பொழி போகும் ரோட்டில் தென்படுவது இந்த குத்துக்கல்தான். 30 அடி உயரம் கொண்ட இந்த கல்லை அடையாளமாக வைக்கப்பட்ட பிறகு இங்குள்ள கிராமத்திற்கு குத்துக்கல்வலசை கிராமம் என்ற பெயர் வந்தது. இப்பகுதியில், வலசை என்ற வார்த்தையில் முடியும் பல கிராமங்கள் இருந்தாலும், இந்த குத்துக்கல் வலசை பிரபலம். வலசை என்பதற்கு, வரிசை, பகுதி என்று அர்த்தமாகும். உங்க கருத்தை பதிவிட்டு Share பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.