India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம் வங்கிகளில் காலியாக உள்ள 13,217 Manager, Assistant Manager உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு ரூ.35,000 முதல் 80,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வரும் செப்.28-க்குள், <
குற்றாலம் பேரூராட்சிக்குட்பட்ட திருகுற்றாலநாதர் கோயிலில் வரும் செப்டம்பர்.23ம் தேதி நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு அன்றைய தினம் மாலை 4மணிக்கு மேல் சித்திரை நட்சத்திரத்தில் திருவிழா துவங்குகிறது. மாலை 6 மணிக்கு மேல் அபிஷேகம் இரவு 8 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பராசக்தி பீடத்தில் அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது.
தென்காசியில் மழைக்கால மின்விபத்துகளை தடுக்க பாதுகாப்பு அறிவுரை:
1.அறுந்த கம்பிகள், கம்பங்கள் அருகில் செல்வதை தவிர்க்கவும்.
2.இடி, மின்னலின்போது வெட்டவெளி, மரத்தடி, செல்போன் பயன்படுத்த வேண்டாம்.
3.சுவர்களில் தண்ணீர் கசிவு இருந்தால் மின்சாதனங்களை தவிர்க்கவும்.
அவசர உதவிக்கு 9445859032, 9445859033, 9445859034 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாமந்தி, கேந்தி உள்ளிட்ட பல பூக்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. சிவகாமிபுரம் மலர் சந்தைக்கு வரும் பூக்களின் வரத்து அதிகரித்ததால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஓணம் பண்டிகையின்போது கிலோ ரூ.90-க்கு விற்கப்பட்ட கேந்திப் பூ, தற்போது ரூ.10-க்கும் கீழே குறைந்துள்ளது. இதனால், வியாபாரிகள் கொள்முதல் செய்த கேந்திப் பூக்களை சாலை ஓரம் கொட்டிச் சென்றனர்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகா பண்பொழி கிராமத்தில் கணக்குப்பிள்ளை வலசைக்கு செல்லும் சாலையில் வடம் என்கின்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகின்றது. இந்த நிலையில் அந்த படத்தின் கதாநாயகன் நடிகர் விமல் மறைந்த நடிகர் ரோபோ சங்கர் நினைவாக 1000 மரக்கன்றுகள் நடுவதற்கான இலக்கை நிர்ணயம் செய்து தினமும் 200 மரக்கன்றுகள் நடும் பணியை நேற்று தொடங்கி வைத்தார்.
தென்காசி மாவட்டம், குற்றால அருவி பகுதியில் கரடி ஒன்று சுற்றித்திரிவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, பழைய குற்றால அருவியில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதி வழங்கபட்டுள்ளது என வனக்கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளார். எனவே சுற்றுலாப் பயணிகள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தென்காசி மக்களே, கேஸ் சிலிண்டரை புக் செய்ய போனில் இருந்து SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் REFILL என டைப் செய்து 7718955555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், HP சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு அனுப்பி கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இனி கேஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல தேவையில்லை. SHARE பண்ணுங்க.
தென்காசி மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின் பேரில், தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட கடையநல்லூர், செங்கோட்டை, புளியரை, சிவகிரி, சுரண்டை, சேர்ந்தமரம் உள்ளிட்ட காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர்கள் 17 பேர்கள் பணியிடை மாற்றம் செய்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
தென்காசி மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் EMRS பள்ளிகளில் பல்வேறு பணிகளுக்கு இந்தியா முழுவதும் 7267 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 12th, டிப்ளமோ, டிகிரி, நர்சிங் என அந்தந்த பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி கொண்டிருக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை. கடைசி தேதி – செப். 23 ஆகும். மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும். இப்பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.
உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க.
1.தென்காசி – 9445000383
2.சங்கரன்கோவில் – 9445000382
3.செங்கோட்டை- 9445000384
4.சிவகிரி- 9445000385
5.ஆலங்குளம்- 9445000390
இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.