India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென்காசி தொகுதியில் பாராளுமன்ற திமுக வேட்பாளர் ஸ்ரீ ராணி குமார் மற்றும் திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் ஆகியோர் வெற்றி பயணத்திற்கு உறுதுணையாக இருந்த
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலனை இன்று ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், பொறியாளர் அணி நிர்வாகி மணிகண்டன் ஆகியோர் பாராட்டி மாலை அணிவித்தனர்.

தென்காசி பாராளுமன்ற தொகுதி 16 ஆவது சுற்றில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி ராணி ஸ்ரீகுமார் (திமுக) – 353392, டாக்டர் கிருஷ்ணசாமி (அதிமுக) – 188018, ஜான்பாண்டியன் (பா.ஜ.க) – 163229, இசை.மதிவாணன் (நா.த.க) – 102694 வாக்குகள் பெற்றுள்ளனர்.
இதில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் 165374 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

தென்காசி தொகுதியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் 3,73,991 வாக்குகள் பெற்றுள்ளார். இவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி 2,16,198 வாக்குகள் பெற்றுள்ளார். இதில் திமுக வேட்பாளர் 1 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி உறுதியானது.

புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி 1998 ,1999, 2004, 2009, 2014 ,2019 ஆகிய ஆறு முறை தென்காசி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டார். இந்த ஆறு தேர்தலிலும் அவர் தோல்வியை தழுவினார். தொடர்ந்து இந்த முறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 2024 மக்களவை தேர்தலில் தென்காசி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். ஏழாவது முறையான இந்த தேர்தலிலும் அவர் தோல்வியை தழுவ வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

தென்காசி தொகுதியில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் அதிக வாக்குகள் பெற்று வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கும் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமாரை தென்காசி வடக்கு மாவட்டம் திமுக செயலாளர் சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா ஈஸ்வரன் மற்றும் திமுக நிர்வாகிகள் இன்று நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

தென்காசி தொகுதி 15 ஆவது சுற்றில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி ராணி ஸ்ரீகுமார் (திமுக) – 308077, டாக்டர் கிருஷ்ணசாமி (அதிமுக) – 168015, ஜான்பாண்டியன் (பா.ஜ.க) – 148040, இசை.மதிவாணன் (நா.த.க) – 90250, திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் 140062 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் 129379 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

தென்காசி பாராளுமன்ற தொகுதி 14வது சுற்றில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி ராணி ஸ்ரீகுமார் (திமுக) – 287506, டாக்டர் கிருஷ்ணசாமி (அதிமுக) – 15812, ஜான்பாண்டியன் (பா.ஜ.க) – 138354, இசை.மதிவாணன் (நா.த.க) – 84130 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் 129379 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

தென்காசி பாராளுமன்ற தொகுதி 13வது சுற்றில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, திமுக – ராணிஸ்ரீகுமார் – 2,68,096, அதிமுக- கிருஷ்ணசாமி – 1,46,898 பாஜக, ஜான்பாண்டியன்- 1,28,085, நாத இசை மதிவாணன் –
76930 தொடர்ந்து திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் 1,21,198 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

தென்காசி நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆய்க்குடி தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. காலை முதலே அனைத்து தொகுதிகளிலும் திமுக முன்னிலையில் உள்ளது. தற்போது 10வது சுற்றின் முடிவு வெளியானது. வாக்கு வித்தியாசம்,107432, திமுக, 211738 அதிமுக,104306, பாஜக,100685, நாம் தமிழர்,57996 வாக்குகள் பெற்றுள்ளனர்.

தென்காசி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்று தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தற்போது 3.10 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார் 240533, அதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி 124703, பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியன் 114069, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவாணன் 68326 வாக்குகளை பெற்றுள்ளனர்.அதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி கடும் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
Sorry, no posts matched your criteria.