India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென்காசி மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி ராஜவேல் தலைமை வகித்தார். இதில் தனியார் வங்கி தென்காசி, இலஞ்சி, வீராணம், கடையநல்லூர், பாவூர்சத்திரம், சுரண்டை வங்கி கிளைகளில் இருந்து வழக்கு தொடரப்பட்ட 29 வழக்குகள் சுமூகமாக முடித்து வைக்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில், ‘மக்களுடன் முதல்வர்’ 51 சிறப்பு முகாம்கள் 2ஆம் கட்டமாக வருகிற ஜூலை 11ஆம் தேதி முதல் அக்.29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 10 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 221 கிராம பஞ்சாயத்துகளில் நடைபெறும் இந்த முகாமில், கொடுக்கப்படும் மனுக்களுக்கு 30 நாட்களில் உரிய தீர்வு காணப்படும் என்றும், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் கனரக வாகனங்களை தடை செய்ய கோரி நாளை 7ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகின்றது. ஆனால் போராட்டம் நடத்த காவல்துறையினரிடம் எந்த ஒரு முறையான அனுமதியும் பெறவில்லை. உரிய அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் இன்று தெரிவித்துள்ளார்.

தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தென்காசி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற ஜூலை 16ஆம் தேதி அன்று மாவட்ட அளவில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டிகள் தென்காசி இசிஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொண்டு பரிசுகள் வெல்லுமாறு இன்று கேட்டுக் கொண்டார்.

தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தென்காசியில் முன்னாள் படைவீரர்கள், படைவீரர்களை சார்ந்தவர்கள் நலனை கருத்தில் கொண்டு கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் ஜூலை 10 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் படை வீரர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தென்காசியில் முன்னாள் படைவீரர்கள், படைவீரர்களை சார்ந்தவர்கள் நலனை கருத்தில் கொண்டு கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் ஜூலை 10 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் படை வீரர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ் அறிவுறுத்தலின்படி, தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றிய கவுன்சிலர் மாரி குமாரை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளராக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் நேற்று(ஜூலை 4) அறிவித்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதில் தென்காசியில் முன்னாள் படைவீரர்கள், படைவீரர்களை சார்ந்தவர்கள் நலனை கருத்தில் கொண்டு கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 10-ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் படை வீரர்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

தென்காசி மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி 2024 ஜனவரி முதல் ஜூன் வரை கஞ்சா, கொலை, கொலை முயற்சி, போக்சோ வழக்கு, கொள்ளை, வழிப்பறி, வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகள் படி 50 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தென்காசி கலெக்டர் கமல்கிஷோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் இம்மாவட்டத்தில் பொதுப்பணி துறை (ம) ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊரணி, குளம், கண்மாய்களில் விவசாய நிலங்களுக்கு தேவைப்படும் களிமண் (ம) வண்டல் மண் ஆகியவற்றை விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக எடுத்துச் செல்ல tnsevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக இன்று முதல் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.