India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென்காசி மாவட்டத்தில் 2026ம் ஆண்டு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழகத்தை சேர்ந்த ஹஜ் பயணிகளுக்கு சேவையாற்ற விரும்பும் தகுதி வாய்ந்தவர்கள் ஹஜ் ஆய்வாளர்கள் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் அளிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை, தகுதி, நியமன முறை ஆகியன மும்பை இந்திய ஹஜ் குழுவின் இணைய முகவரியான <

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க

தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் பாஜக நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் கடந்த அக்டோபர் 12ஆம் தேதி தொடங்கினார். இந்நிலையில் வரும் (நவ.20) தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சி பகுதியில் மாலை 4 மணி அளவில் உரையாற்றுகிறார். மேலும் நவம்பர் 21 காலை ஊத்துமலை பகுதிகளில் விவசாயிகள் பிடி தொழிலாளர்கள் நெசவாளர்கள் சந்தித்து அப்பகுதி மக்களின் குறைகளை கேட்க உள்ளார்.

தென்காசி மக்களே, நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து, நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம்.(அ) TamilNilam என்ற செல்போன் செயலி மூலமாகவும் அறியலாம். பட்டா விவரம் மட்டுமின்றி பிற விவரங்களையும் அறிய முடியும். SHARE IT

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை இல்லாத நிலை தற்போது நீடித்து வருகின்றது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள நீர் நிலைகளுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இன்னொரு பகுதியாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. சனிக்கிழமை குற்றாலம் மெயின் அருவியில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டிவருகிறது.

கடையம், சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்தவர் சிபி சக்கரவர்த்தி. இவரது தாய் சந்திராவுக்கு (55) பக்க வாத நோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிபி சக்கரவர்த்தி புதிய வீடு கட்டுவது தொடர்பான பிரச்சனையில் தாயிடம் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மகன் பேசாததால் மன வேதனையில் இருந்த சந்திரா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கடையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இத்தகவலை இல்லத்தரசிகளுக்கு ஷேர் பண்ணுங்க!

கடையம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (66). இவர் நேற்று மாட்டுத் தொழுவத்திற்கு சென்றார். அப்போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததார். அங்கிருந்த கல் மீது அவரது தலை மோதியது. இதில் படுகாயமடைந்த ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி,சங்கரன்கோவில்) பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (14-11-25) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100க்கு அழைக்கவும்.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார வெளியேறும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த யானை தோழர்கள் என்ற குழு உருவாக்கப்படுகிறது ஒவ்வொரு வன சரகத்தில் அதிகபட்சமாக நாலு நபர்கள் கொண்ட யானை தோழர்கள் குழு அமைக்கப்படும் குழு உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை வனக்குழு தீர்மானத்தின் அடிப்படையில் வழங்கப்படும் என்று வன அலுவலர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.