India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மிலாடி நபி வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபான கூடங்கள் மூடப்பட்டிருக்கும். 17ஆம் தேதி அன்று மதுபானம் விற்பனை ஏதும் நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று தெரிவித்துள்ளார்.

தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் போக்குவரத்து வசதி இல்லாத பகுதிகளுக்கு மினி பேருந்துகள் இயக்குவதற்கு தகுதியான வழித்தடங்களை கண்டறிந்து சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நேரில் அணுகி விவரங்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

தென்காசி மாவட்டம் தலைவன் கோட்டையை சேர்ந்த மு.ஜெயகணேசன் கோகிலா என்பவர்களின் மகள் J.முவித்ரா(7) ஸ்கேட்டிங் போட்டியில் மாநில அளவில் விளையாட தகுதி பெற்றுள்ளார். அவருக்கு இன்று பயிற்சியாளர், சமூக ஆர்வலர்கள், உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

தென்காசி மாவட்டத்தில் குரூப் 2 தேர்வுக்காக 20,870 பேர் வின்னப்பித்திருந்தனர். இந்நிலையில், நேற்று(செப்.14) நடைபெற்ற குரூப் 2 தேர்வில் 16,191 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 4,679 பேர் பங்கேற்கவில்லை. இந்த தேர்வானது தென்காசி மாவட்டத்தில் 82 தேர்வு மைங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆழ்வார்குறிச்சி பரம கல்யாணி மருத்துவமனை, பரம கல்யாணி கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் தென்காசி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் நிதி உதவியுடன், நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் வருகிற 17ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பரம கல்யாணி மருத்துவமனையில் நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ளுமாறு இன்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது பல்வேறு வலைதளங்களில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன; சைபர் குற்றவாளிகளால் நீங்கள் ஏமாற்றப்பட்டால், உடனடியாக 1930 என்று எண்ணை தொடர்பு கொள்ளவும்; அல்லது <

தென்காசி_கிளைச்சிறையில் இருந்து கைதி ஒருவர் இன்று தப்பி ஓடினார். தென்காசி சப் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் மற்றும் இரண்டாம் நிலை காவலர் மாடசாமி ஆகியோர் ஒரு மணி நேரத்தில் கைதியை விரட்டி பிடித்து சிறையில் அடைத்தனர். துரிதமாக செயல்பட்டு கைதியை பிடித்த போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் பாராட்டினார்.

தென்காசி மாவட்டம், செய்யது ரெசிடென்சியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில், இன்று ( செப்டம்பர்14) தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – II (தொகுதி-II & IIA பணிகள்) – இல் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தருமபுரி மாவட்டம் கெட்டூர் பகுதியை சேர்ந்தவர் மாது(55). இவர் நெல்லையில் தங்கி, கோழிகளை மொத்தமாக எடுத்து சந்தைகளில் கொண்டு விற்பனை செய்து வந்தார். இந்நிலையில், இவர் இன்று(செப்.,14) காலை ஆலங்குளம் மாறாந்தை பகுதியில் பைக்கில் கோழிகளை விற்பனைக்காக கொண்டு சென்றபோது எதிர்பாராத விதமாக பைக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் கொலை வழக்கின் குற்றவாளிகளான ராமநாதபுரம் வண்டலூர் கிழக்கு தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் அருண் பாஸ்கர்(25) மற்றும் வடக்கு தெருவை சேர்ந்த அமல்ராஜ் என்பவரின் மகன் முத்துக்குமார்(25) ஆகியோரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்பி பரிந்துரையின் பேரில் ஆட்சியர் உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.