India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பள்ளிக்கூட தெருவில் குடியிருக்கும் சங்கரன் மனைவி கோமு(90). இவர் வயது முதிர்வு காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரை அடக்கம் செய்துவிட்டு இரவில் வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் கணவர் சங்கரனும்(95) அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்தார். கணவன் மனைவி இருவரும் ஒரே நாளில் இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
தென்காசி மாவட்ட முன்னாள் படைவீரர்கள், அவர்களிடம் குடும்பத்தினர் நலனுக்காக சுகாதார மருத்துவ விழிப்புணர்வு முகாம் (20.03.2025) அன்று முற்பகல் 11.00 மணிக்கு தென்காசி மலையான் தெருவில் உள்ள நகர்புற சுகாதார நிலையத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில், மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தென்காசி தேசிய நலவாழ்வு குடும்பம் திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு இயன்முறை மருத்துவர், பார்வை மருத்துவர், உளவியலாளர், ஒலியியல் நிபுணர், பேச்சு சிகிச்சை நிபுணர், ஆய்வக நுட்பனர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க தென்காசி கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மாதம் ஊதியம் ரூ-13,000 முதல் ரூ-23,000 வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க <
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனா அணை உச்ச நீர்மட்டம் – 85 அடி, நீர் இருப்பு – 62.20 அடி; ராமநதி அணை உச்ச நீர்மட்டம் – 84 அடி, நீர் இருப்பு – 52.50அடி; கருப்பா நதி அணை உச்சநீர் மட்டம் – 72 அடி, நீர் இருப்பு – 29.53அடி; குண்டாறு அணை உச்சநீர் மட்டம் – 36.10, நீர் இருப்பு 27.12 அடி; அடவிநயினார் அணை உச்சநீர் மட்டம் – 132 அடி, நீர் இருப்பு 37.50 அடியாக உள்ளது.
தமிழகத்தில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 22ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் கன்னியாகுமரியில் இன்று(மார்ச் 17) மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. SHARE IT.
தென்காசி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து இரவு நேர ரோந்து அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். இன்று (16.03.25) தென்காசி புளியங்குடி ஆலங்குளம் சங்கரன்கோவில் போன்ற பகுதிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைக்கு மேற்கொண்டு அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் அல்லது 100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
தென்காசி, வாசுதேவநல்லூரில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சிவனும் பார்வதியும் அர்த்தநாரீஸ்வர கோலத்தில் காட்சி கொடுக்கின்றனர். மூலவர் சிந்தாமணிநாதர் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தின் விருட்சம் புளியமரம். இம்மரத்தின் பழங்கள் இனிப்பு, புளிப்பு என இரட்டைச் சுவையுடன் இருப்பது சிறப்பம்சம்.பிரிந்திருக்கும் தம்பதியர் இங்கு வந்து வேண்டினால் மீண்டும் இணைவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை. *ஷேர் பண்ணுங்க*
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளின் இன்றைய நிலவரம் 16.03.2025: கடனா: உச்ச நீர்மட்டம் 85 அடி, நீர் இருப்பு 62.40 அடி,ராமநதி: உச்ச நீர்மட்டம் 84 அடி, நீர் இருப்பு 52.50அடி,கருப்பா நதி :உச்சநீர் மட்டம் 72 அடி, நீர் இருப்பு 30.18அடி,குண்டாறு :உச்சநீர் மட்டம் 36.10,நீர் இருப்பு 27.50அடி,அடவிநயினார்: உச்சநீர் மட்டம் 132அடி, நீர் இருப்பு 38.00 அடியாக இருக்கிறது.
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டு ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, அக்னி வீரர் டெக்னிக்கல், அக்னி வீரர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு இங்கே <
Sorry, no posts matched your criteria.