India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று (மார்ச்-15) இரவு தென்காசி, புளியங்குடி சங்கரன்கோவில், ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தென்காசி தேசிய நலவாழ்வு குடும்பம் திட்டத்தின் கீழ் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு உளவியலாளர் (Psychologist) பணிக்கு விண்ணப்பிக்க கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குழந்தை பருவ உளவியலாளர் அல்லது குழந்தை உளவியல் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மாதம் ஊதியம் 23,000 வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க <
தென்காசி மாவட்டம் கடனா அணையில் இன்று (மார்ச் 15) 62.60 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு 16 கன அடி நீர் வருகிறது. 29 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ராமநதி அணை நீர் இருப்பு 52 அடியாக உள்ளது. கருப்பாநதி அணை நீர் இருப்பு 72 அடியாக உள்ளது இந்த அணையில் இருந்து 25 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. குண்டாறு அணை நீர் இருப்பு 28 அடியாக உள்ளது. அடவி நயினார் அணை நீர் இருப்பு 38.50 அடியாக உள்ளது.
தென்காசி மாவட்டத்திற்கு மார்ச் 4ஆம் தேதி அன்று சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி அவதார நிகழ்ச்சியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக இன்று(15.3.25) அனைத்து பள்ளி கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் நிறுவனங்கள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று பள்ளி கல்லூரிகள் அரசு அலுவலகங்களை செயல்பட்டு வருகின்றன.
தென்காசி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையின் சார்பில் நாட்கள் துணை சுகாதார நிலையம் மற்றும் அங்கன்வாடி மையங்களில் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் A திரவம் வழங்கப்பட உள்ளது. முகாமானது மார்ச் 17முதல் மார்ச் 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அழைத்துச் சென்று பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமானது மார்ச் 21ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் தென்காசி மாவட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் நேற்று(மார்ச் 14) செய்தி வெளியிட்டுள்ளார். SHARE IT.
தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல்துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று 14.03.2025 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-9884042100 ஐ தொடர்புகொள்ளலாம்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரலிங்கசுவாமி சன்னதியின் கன்னி மூலையில் சர்ப்ப விநாயகர் வீற்றிருக்கிறார். இவர் 6 அடி உயர திருமேனியுடன் சர்ப்பத்தின் மேல் அமர்ந்து தனது இடது கையால் சர்ப்பத்தின் தலையை பிடித்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவரை வழிபாடு செய்பவர்கள் சர்ப்ப தோஷத்திலிருந்து விடுபட்டு, திருமணத்தடை நீங்கி வாழ்க்கையில் மேன்மை அடைகின்றனர் என்பது இக்கோவிலின் ஐதீகம். *ஷேர் பண்ணுங்க*
தமிழ்ப் பண்பாட்டின் சிறப்புகளை உலகறியச் செய்திடும் முயற்சியின் தொடர்ச்சியாக, எதிர்வரும் 2025-26 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட உள்ளதாக தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 31 முதல்வர் மருந்தகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் ஜெனரிக் சித்தா ஆயுர்வேதம் என அனைத்து வகை மருந்துகளும் சந்தை விலையை விட 20 முதல் 90% வரை குறைவான விலைக்கு விற்கப்படுகின்றன. மேலும் 25 சதவீதம் வரை கூடுதலாக தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
Sorry, no posts matched your criteria.