India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <

தென்காசி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

தென்காசி மாவட்டம் இலஞ்சி குத்துக்கல்வலசை செல்லும் பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகே இன்று (நவ. 16) அடையாளம் தெரியாத நபர் ரயில் மோதி விபத்தில் உயிர் இழந்துள்ளார். தற்போது காவல்துறை விசாரணை செய்து வருகிறது. அடையாளம் தெரிந்தவர்கள் தென்காசி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

தென்காசி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <

சங்கரன்கோவில் அருகே திருமலைகொழுந்துபுரத்தில், விவசாயி பரமசிவம் (45) மல்லிகை செடிகளுக்கு மருந்து அடிக்க கிணற்றில் தண்ணீர் எடுக்கும்போது தவறி விழுந்து, காலில் கயிறு சிக்கி மூழ்கி உயிரிழந்தார். தீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர். காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கிறது. வாய் பேச முடியாத மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ள நிலையில், இந்த சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14967 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிபடையில் தேர்வு செய்யப்படும். மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க <

தென்காசி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) முகாம் இன்றும் (நவ. 16) நடைபெறுகிறது. இலஞ்சி தேவர் சமுதாய நலக்கூடம், மேலகரம் டவுன் பஞ்சாயத்து நலக்கூடம், தென்காசி எம்.கே.வி.கே. கல்யாண மண்டபம், தென்காசி முப்புடாதி அம்மன் கோவில் திருமண மண்டபம், பாவூர்சத்திரம் சமுதாய நலக்கூடம், கீழசுரண்டை ஸ்ரீ குறிஞ்சி மஹால் உள்ளிட்ட இடங்களில் SIR முகாம்கள் இன்று நடைபெறும். SHARE

புளியங்குடியில் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தமுமுக மருத்துவ அணி, சார்பில் மாபெரும் இலவச பொது மருத்துவம் முகாம் நாளை (16.11.25) காலை 9 மணி முதல் 2 மணி வரை காயிதே மில்லத் பள்ளியில் நடைபெறும். 26வது வார்டு தலைவர் பரூக், தலைமையில் மமக கட்சி நகர செயலாளர் முகைதீன் அப்துல் காதர் துவக்கி வைக்கிறார். பொது மருத்துவம் நோயாளிகளுக்கு வழங்கப்படும். ஷேர்

தென்காசி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தினந்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இன்று (15.11.25) இரவு காவல்துறை உதவி தேவைப்பட்டால் மேலே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது காவல்துறை உதவி எண் 100 ஐ அழைக்கலாம். காவல்துறை கட்டுப்பாட்டு தொலைபேசி எண் 9884042100 தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தை சார்ந்த உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்கம் மற்றும் மீனவர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள குடிமைப்பணிகளில் சேருவதற்கான ஆயத்த விண்ணப்பம் அளிக்கலாம். மீன்துறை ஆய்வாளர் அலுவலகம், பொதுப்பணித்துறை வளாகம், தென்காசி (இ) குற்றாலம் என்ற முகவரியிலும், 7010591852. 9788293060 ஆகிய கைப்பேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.