India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்று வருகை தந்த தமிழ்நாடு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை,தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் ஈ.ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்
சங்கரன் கோவில் சேர்ந்த ஆறுமுகம் மனைவி லட்சுமி (70) என்ற மூதாட்டி பொதிகை தெப்பக்குளத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராவிதமாக குளத்தில் தவறி விழுந்து பலியானார். தகவல் அறிந்த சங்கரன்கோவில் போலீசார் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.இது குறித்து சங்கரன்கோவில் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியா கூட்டணி சாா்பில் தென்காசி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் ராணி ஸ்ரீகுமாா் அறிமுகக் கூட்டம் இன்று காலையில் தென்காசியில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் பழனிநாடாா் எம்எல்ஏ தலைமை வகித்துப் பேசினாா். இந்த நிகழ்ச்சியில் நகரத் தலைவா் மாடசாமி ஜோதிடா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான சாஸ்தா கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா நாளை (மார்ச் 25 ) நடைபெறுகிறது. பெரும்பாலான கோயில்களில் இன்று மாலை திருவிழா தொடங்குகிறது. இதை முன்னிட்டு சாஸ்தா கோயில்கள் சுத்தப்படுத்தப்பட்டு வர்ணம் பூசப்பட்டு தயார் நிலையில் உள்ளன சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு மற்றும் ஆன்மீக கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று தேர்தல் விழிப்புணர்வு குறும்படத்தை தென்காசி மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் கமல் கிஷோர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி மகளிர் திட்ட இயக்குனர் இந்திரா பிரியதர்ஷினி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தென்காசியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற செயலாளர் வர்கீஸை கடையம் ஒன்றிய செயலாளர் ஆதித்தமிழன் அன்பழகன் மற்றும் ஒன்றிய மாணவரணி நிர்வாகி கார்த்திக் நாடார், ஆழ்வை நகரச் செயலாளர் தங்கராஜா, தென்காசி ரீகன் குமார் ஆகியோர் சந்தித்து பேசினர்.
அப்போது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற ஆலோசனை செய்தனர்.
தென்காசி,மைப்பாறை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. விருதுநகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது.ஆலைக்கு அருகே அறுவடை செய்த மக்காச்சோளத்தில் தீப்பிடித்து பரவி வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவலின் பேரின் தீயணைப்பு வீரர்களின் உதவியோடு தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கம் இன்று (23.03.2024) நடைபெற்றது. கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு குறித்த குறும்படத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வெளியிட்டார்.
தென்காசி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ராணி தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ புளியங்குடி நகர திமுக செயலாளர் அந்தோணிசாமி ஆகியோர் புளியங்குடி நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்திற்கு வருகை தந்தனர் நகரத் தலைவர் அப்துல்ரகுமான் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது நகர செயலாளர் ஷேக் காதர் மைதீன் அனைவரையும் வரவேற்றார்.
தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மக்களவை பொதுத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் கிராமப் பகுதிகளில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாம்கள், சிறப்பு முகாம்கள் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.