Tenkasi

News April 1, 2024

தென்காசி தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்

image

தென்காசி மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலர் கமல் கிஷோர் விடுத்துள்ள அறிக்கை: தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பணம், பிற பொருட்கள் கையிருப்பில் வைத்திருக்கும் பொதுமக்கள், அதற்கான தகுந்த ஆதாரங்களை, சமர்ப்பித்தும் பணம் சோதனை அலுவலர்களால் கைப்பற்றபட்டால் 7305089505 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.

News April 1, 2024

திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த துணை சேர்மன்

image

புளியங்குடி நகர திமுக சார்பில் நகர்மன்ற துணை தலைவர் அந்தோணிச்சாமி தலைமையில் இன்று புளியங்குடி 3, 4, 5, 6, 7 ஆகிய வார்டுகளில் தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராணிஸ்ரீகுமார் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கோரி வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த தேர்தல் பரப்புரையில் அவைத்தலைவர் வேல்சாமி பாண்டியன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News April 1, 2024

தென்காசி: கலெக்டர் அதிரடி ஆய்வு 

image

இலஞ்சி டிடிடிஏ துவக்க பள்ளியில்‌ நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையத்தின் முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்று காலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் நேரடியாக சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் வாக்குச்சாவடிக்கான வசதிகள், வாக்காளர்களுக்கான தேவைகள் குறித்த விபரங்களை கேட்டறிந்தார்.

News April 1, 2024

தென்காசி:வெடிகுண்டு தயாரித்த 4 பேர் கைது.

image

வீராணம் சாலையில் சார்பு ஆய்வாளர் கௌசல்யா தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.அப்போது சுரேஷ் என்பவரை பிடித்து அவரது இருசக்கர வாகனத்தை சோதனைசெய்தபோது வெடிகுண்டு வைத்திருந்தது தொடர்பாக விசாரணை நடத்தி மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில் வீராணம் சுரேஷ்(34),கார்த்திக்(25)மனோசங்கர் (19) மற்றும் சுரண்டை நாகராஜா (35) ஆகியோர் மீது வழக்கு பதிவுசெய்து,கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

News March 31, 2024

தென்காசியில் இன்று பதிவான வெப்பம் எவ்வளவு தெரியுமா?

image

தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. அருகே உள்ள கேரளாவிலும் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் இங்கும் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக 99.5 டிகிரி பதிவானது. இதனால் பகல் நேரத்தில் இருசக்கர வாகனங்களிலும் நடந்து சென்றவர்கள் சிரமப்பட்டனர்.

News March 31, 2024

தென்காசியில் கிருஷ்ணசாமி பெயரில் இருவர் போட்டி

image

தென்காசி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். இவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவரது பெயர் வேட்பாளர் பட்டியலில் முதலிடத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த தொகுதியில் கிருஷ்ணசாமி பெயரில் மேலும் 2 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு தலா தொலைக்காட்சி பெட்டி மற்றும் கணினி ஆகிய சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

News March 31, 2024

தென்காசியில் வைகோ பிரச்சார நிகழ்ச்சிகள் அறிவிப்பு

image

இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரச்சார நிகழ்ச்சி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மக்களவைத் தொகுதியில் அவர், 13 ஆம் தேதி மாலை 4 மணிக்கு திருவேங்கடம் பகுதியில் பேசுகிறார். 5 மணிக்கு சங்கரன் கோவில், 6 மணிக்கு புளியங்குடி, 7 மணிக்கு கடையநல்லூரில் உரையாற்றுகிறார்.

News March 31, 2024

தென்காசி சிபிஐ எம்எல் தேர்தல் ஆலோசனை கூட்டம்

image

தென்காசி மாவட்ட சிபிஐ கட்சி எம்எல் ஊழியர் கூட்டம் இன்று ரோஸ் மஹாலில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார் சிபிஐ எம்எல் நிர்வாகிகள் சுப்பிரமணியன், பழ ஆசைத்தம்பி, சங்கரபாண்டியன், வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தேர்தல் வெற்றி குறித்து ஆலோசனை நடத்தினர்.

News March 31, 2024

தென்காசி: 6 பெண்கள் உட்பட 10 பேர் கைது

image

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் அப்பகுதியை சேர்ந்த சிலர் பழைய தீயணைப்பு நிலையம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலில் பேரில் வாசுதேவநல்லூர் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைத்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 6 பெண்கள் உட்பட 10 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News March 30, 2024

தென்காசி: கத்தியால் குத்திக் கொலை.. ஒருவர் கைது

image

மேலக்கடையநல்லூரை சேர்ந்த மாரியப்பன் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் வீட்டில் தண்ணீர் பிடிக்க சென்றபோது, தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லட்சுமணன் மாரியப்பனை நேற்று கத்தியால் குத்தியதில் மாரியப்பன் மயங்கி கீழே விழுந்துள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனை செல்லும் வழியில் மாரியப்பன் உயிரிழந்துள்ளார்.இதுகுறித்த புகாரில் போலீசார் லட்சுமணனை கைது செய்தனர்.

error: Content is protected !!