India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் இன்று தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியாக இரண்டாம் முறை கணினி மூலம் சுழற்சி முறையில் வாக்குச்சாவடிக்கு மின்னனு வாக்குபதிவு இயந்திரங்களை அனுப்பும் பொருட்டு ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது. இதில் தேர்தல் பொதுப் பார்வையாளர் டோபேஷ்வர் வர்மா, முன்னிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் பேசினார்.
தென்காசி மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களிப்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்றும், இன்றும் சிவகிரி வட்டார உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சிகளின் வீடு வீடாகச் சென்று தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்குவது மற்றும் ஸ்டிக்கர்கள் ஒட்டுதல் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
தென்காசி மாவட்டத்தில் கோடை வெயில் இப்போதே அக்னி நட்சத்திர தாக்கம் போல் கொளுத்துகிறது. இன்றும் (ஏப்ரல்.5) காலை முதல் வெயில் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. இன்று பிற்பகல் 1.15 மணிக்கு தென்காசி நகரப் பகுதியில் வெப்ப பதிவு 101 டிகிரியாக உயர்ந்தது. சுட்டெரித்த வெயிலில் சாலையில் நடந்து சென்றவர்கள் புழுக்கத்தில் தவித்தனர்.
தென்காசி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து திரைப்பட நடிகரும், திமுக பிரமுகருமான வாகை சந்திரசேகரன் நேற்று இரவு பிரச்சாரம் செய்தார். குத்துக்கல்வலசையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில், திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டார். மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
காசிநாத புரத்தைச் சேர்ந்த முருகன் மனைவி பிரேமா (41). இவர் கடந்த 30 ஆம் தேதி தனது மகன் மாரியுடன் பைக்கில் சென்று திரும்பியபோது, பைக்கில் இருந்து நிலை தடுமாறி விழுந்து படுகாயம் அடைந்தார். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் நாடளுமன்ற தேர்தல் ஏப்.19 இல் நடைபெற உள்ளது. தென்காசி மாவட்டத்தில் வாக்குபதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் கோடைகாலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் சூழல் உள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.அதில்,பள்ளியில் மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்ஸோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும்.ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்காசியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் பேசியதாவது. தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 8915 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். அமர் சேவா சங்கச் செயலாளர் சங்கர் ராமன் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக கடந்த பல ஆண்டுகளாக சேவைகளை செய்து வருகிறார் எனவே அவரை மாவட்டத்தின் சின்னமாக அறிவித்ததன் மூலம் சமூகத்தில் தேர்தல் தொடர்பான அதிக விழிப்புணர்வு ஏற்படும் என்றார்.
திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம் வழியாக இயக்கப்படும் சிறப்புரையில் மே மாதம் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி ஏப்ரல் 7, 14, 21, 28 மே 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.