Tenkasi

News April 11, 2024

தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு பணி ஒதுக்கீடு

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியாக கணினி மூலம் சுழற்சி முறையில் நுண் பார்வையாளர்கள் பணி ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.
இதில் தேர்தல் பொதுப் பார்வையாளர் டோபேஷ்வர் வர்மா முன்னிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ஏ.கே. கமல்கிஷோர் பணி ஒதுக்கீடு செய்தார்.

News April 11, 2024

முன்னாள் அமைச்சர் வாக்கு சேகரிப்பு

image

சங்கரன்கோவிலில் புனித ரமலான் திருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஊர்வலமாக சென்ற இஸ்லாமியர்களிடம் இன்று தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக கூட்டணி வேட்பாளர் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமிக்கு அதிமுக மகளிர் அணி துணை செயலாளர், முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி தலைமையிலான அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

News April 10, 2024

தென்காசி: வாக்குப்பதிவு அலுவலர் பயிற்சி முகாம் அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் மக்களவை பொதுத் தேர்தலில் பணிபுரியும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான தொடர் பயிற்சி வகுப்பு 13ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இந்த பயிற்சி வகுப்பில் தலைமை அலுவலர்கள் கையேடுடன் ஆஜராக வேண்டும். கடந்த முறை பங்கேற்க தவறியவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News April 10, 2024

தென்காசியில் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு

image

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று மாற்றுதிறனாளி வாக்காளர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் நடந்தது. இதில் தென்காசி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான ஏ.கே.கமல்கிஷோர் தலைமை வகித்து கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

News April 10, 2024

வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள் அறிவிப்பு

image

நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே வாக்காளர் விழிப்புணர்வு கவிதை போட்டி வரும் 12 ஆம் தேதி கடையநல்லூர் அரசு கலைக் கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது. போட்டி தலைப்பு தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா, எனது வாக்கு விற்பனைக்கு அல்ல, எனது ஓட்டு எனது உரிமை (ஏதேனும் ஒன்று) என தென்காசி கலெக்டர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News April 10, 2024

தென்காசி: மோசடி செய்த இருவர் கைது

image

கிளாங்காட்டை சேர்ந்த செந்தில்குமார், இந்து அறநிலையத்துறையில் வேலை வாங்கித் தருவதாக புதுக்கோட்டை வினோத் என்பவரிடம் ரூ.6 லட்சம் வாங்கியுள்ளார். இந்நிலையில் வினோத்குமார் தனது பணத்தை திருப்பி கொடுக்கும்படி கேட்டதால் செந்தில்குமார், அழகு மற்றும் குணா ஆகியோர் சேர்ந்து வினோத்குமாருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரில் காவல் ஆய்வாளர் ஹரிஹரன் விசாரணை நடத்தி 2 பேரை கைது செய்தார்.

News April 10, 2024

போதையில் மனைவிக்கு மிரட்டல் – கணவன் கைது

image

தென்காசி, கொத்தடப்பட்டியைச் சேர்ந்த தம்பதி அய்யனார், வாசுகி. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். தொடர்ந்து பெரியவர்களின் மத்தியஸ்தத்தால் சேர்ந்தனர். இந்நிலையில், அய்யனார் போதையில் மீண்டும் தகராறு செய்ததால் வாசுகி தனது தாய் வீட்டிற்கு சென்றார். இதையடுத்து நேற்று அங்கு சென்ற அய்யனார், வாசுகிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில் சிவகிரி போலீசார் அவரை கைது செய்தனர்.

News April 9, 2024

தென்காசி: தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பணி

image

தென்காசி மக்களவைத் தொகுதிக்கு வருகிற 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 100 சதவீதம் வாக்களித்தல் மற்றும் நேர்மையாக வாக்களித்தல் வலியுறுத்தி தென்காசியில் உள்ள அனைத்து பஸ்கள் மற்றும் வாகனங்களில் விழிப்புணர்வு வாசகம் அடங்கி ஸ்டிக்கர் ஒட்டும் பணி இன்று நடைபெற்றது. கீழப்பாவூர் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்ட உதவி அலுவலர்கள் சிவக்குமார் மாரீஸ்வரன் பங்கேற்றனர்.

News April 9, 2024

தென்காசியில் நோன்பு பெருநாள் தர்மம் 

image

தென்காசி நகர தமிழக முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பாக நேற்று தென்காசி தமுமுக அலுவலகத்தில் வைத்து 250க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நோன்பு பெருநாள் தர்மம் தென்காசி நகர தலைவர் அபாபில் மைதீன் தலைமையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆதம்பின் ஆசிக் களஞ்சியம்பீர் , சாகுல்ஹமீது, ஜாபர்சரிப் முஸவ்வீர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News April 9, 2024

தென்காசி:தபால் வாக்குகள் வீடு தேடி வந்து பெறப்படும்.

image

தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வீட்டிலிருந்து தபால் வாக்கும் செலுத்தும் பணி நடந்து வருகிறது தென்காசி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை 10ம் தேதி முதல் 3 நாட்கள் தபால் ஒட்டுகள் பெறப்படுகிறது. இதற்காக தபால் ஓட்டு செலுத்தக்கூடிய வாக்காளர்கள் இல்லங்களில் தயாராக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்.

error: Content is protected !!