India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தென்காசி தேசிய நலவாழ்வு குடும்பம் திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு இயன்முறை மருத்துவர், பார்வை மருத்துவர், உளவியலாளர், ஒலியியல் நிபுணர், பேச்சு சிகிச்சை நிபுணர், ஆய்வக நுட்பனர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க தென்காசி கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மாதம் ஊதியம் ரூ-13,000 முதல் ரூ-23,000 வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க <
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனா அணை உச்ச நீர்மட்டம் – 85 அடி, நீர் இருப்பு – 62.20 அடி; ராமநதி அணை உச்ச நீர்மட்டம் – 84 அடி, நீர் இருப்பு – 52.50அடி; கருப்பா நதி அணை உச்சநீர் மட்டம் – 72 அடி, நீர் இருப்பு – 29.53அடி; குண்டாறு அணை உச்சநீர் மட்டம் – 36.10, நீர் இருப்பு 27.12 அடி; அடவிநயினார் அணை உச்சநீர் மட்டம் – 132 அடி, நீர் இருப்பு 37.50 அடியாக உள்ளது.
தமிழகத்தில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 22ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் கன்னியாகுமரியில் இன்று(மார்ச் 17) மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. SHARE IT.
தென்காசி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து இரவு நேர ரோந்து அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். இன்று (16.03.25) தென்காசி புளியங்குடி ஆலங்குளம் சங்கரன்கோவில் போன்ற பகுதிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைக்கு மேற்கொண்டு அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் அல்லது 100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
தென்காசி, வாசுதேவநல்லூரில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சிவனும் பார்வதியும் அர்த்தநாரீஸ்வர கோலத்தில் காட்சி கொடுக்கின்றனர். மூலவர் சிந்தாமணிநாதர் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தின் விருட்சம் புளியமரம். இம்மரத்தின் பழங்கள் இனிப்பு, புளிப்பு என இரட்டைச் சுவையுடன் இருப்பது சிறப்பம்சம்.பிரிந்திருக்கும் தம்பதியர் இங்கு வந்து வேண்டினால் மீண்டும் இணைவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை. *ஷேர் பண்ணுங்க*
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளின் இன்றைய நிலவரம் 16.03.2025: கடனா: உச்ச நீர்மட்டம் 85 அடி, நீர் இருப்பு 62.40 அடி,ராமநதி: உச்ச நீர்மட்டம் 84 அடி, நீர் இருப்பு 52.50அடி,கருப்பா நதி :உச்சநீர் மட்டம் 72 அடி, நீர் இருப்பு 30.18அடி,குண்டாறு :உச்சநீர் மட்டம் 36.10,நீர் இருப்பு 27.50அடி,அடவிநயினார்: உச்சநீர் மட்டம் 132அடி, நீர் இருப்பு 38.00 அடியாக இருக்கிறது.
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டு ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, அக்னி வீரர் டெக்னிக்கல், அக்னி வீரர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு இங்கே <
தென்காசி, கடையநல்லூர் சவல் விலை 3வது தெருவை சேர்ந்த முருகன்(35) என்பவர் தனது மனைவியை கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தார். இது குறித்து போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது, முருகன் மனைவி செல்வி யாருடனோ அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். அவர் கண்டித்தும் திருமணம் தாண்டிய உறவை மறுத்ததால் முருகன் கொலை செய்ததாக நேற்று(மார்ச் 15) வாக்குமூலம் அளித்ததாக தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கணவர் இறந்தால் மனைவியும் சிதையில் விழுந்து உயிர் துறக்கும் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்து வந்தது. உடன்கட்டை ஏறும் பெண்ணின் நினைவாக சதிக்கல் நடப்பட்டன. இந்நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவ மாணவிகள் தென்காசி ரயில் நிலையம் அருகே நேற்று(மார்ச் 15) சதிக்கல் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த சதிக்கல் 200 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.