Tenkasi

News August 27, 2025

தென்காசி மாவட்ட கடன் திட்ட அறிக்கை புத்தகம் வெளியீட்டு விழா

image

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தென்காசி மாவட்டத்தின் 2025-2026 நிதி ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கை புத்தகம் வெளியீட்டு விழா இன்று நடந்தது.
விழாவிற்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் கடன் திட்ட அறிக்கை புத்தகத்தை வெளியிட்டார். இதில் வங்கி அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News August 26, 2025

தென்காசி ஆம்னி பேருந்தில் அதிக கட்டணமா??

image

நாளை விநாயகர் சதுர்த்தியை கொண்டாட தென்காசி மக்களே உங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வெளியூரில் இருந்து புறபட்டு இருப்பீர்கள்! சொந்த ஊர்க்கு புறபட்ட உங்களுக்கு ஆம்னி பேருந்தின் கட்டண உயர்வு அதர்ச்சியை கொடுக்கிறதா? ஆம்னி பேருந்தின் கட்டணம் அதிகம் வசூலித்தால் 9043379664 எண்ணில் ஆதாரத்துடன் புகாரளியுங்க… (குறிப்பு: நீங்கள் சொந்த ஊரில் இருந்து வெளியூர் திரும்பும் போது இந்த எண் பயன்படும்) SHARE பண்ணுங்க!

News August 26, 2025

தென்காசி: விநாயகரை வரவேற்கும் 6 படிகள்!

image

தென்காசி மக்களே! நாளை விநாயகர்சதுர்த்தி அன்று செய்ய வேண்டியவை
1. வீட்டை சுத்தம் செய்யுங்க.
2. விநாயகர் சிலையை நிறுவுங்க.
3. பூ,மாவிலையால் அலங்காரம்.
4. ஓம் ஸ்ரீ கணேஷாய நமஹ – மந்திரத்தை 108 முறை சொல்லுங்க.
5. கொழுக்கட்டை, சுண்டல் முதலிய நைவேதியம்.
6. தீபம், கற்பூரம் காட்டி ஆரத்தி
குடும்பத்துடன் சென்று நமது காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள வெற்றி விநாயகர் தரிசனம் செய்யுங்க. SHARE பண்ணுங்க..

News August 26, 2025

தென்காசியில் நாளை பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கம்

image

தென்காசி நகரத்திற்கு உட்பட்ட அரசு உதவி பெறும் பள்ளியான காட்டுபாவா நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தினை நாளை (26/08/25)  செவ்வாய்கிழமை காலை 8 மணியளவில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் நகர்மன்ற தலைவர் சாதிர் ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர். இந்த நிகழ்வில் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

News August 26, 2025

தென்காசி: ரேஷன் கடை குறித்த புகாரா?

image

தென்காசி: மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். ஆனால் சில காரணங்களால் மக்களுக்கு சரிவர பொருட்களை வழங்காமலும், கடையினை திறக்காமலும் ஊழியர்கள் செயல்படுவதாக புகார் எழுகிறது. இதுபோன்ற சம்பவம் உங்கள் பகுதியில் நடைபெறும் பட்சத்தில் தென்காசி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் – 04633-212114 எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க.

News August 26, 2025

தென்காசியில் தொடர் 6 நாட்களுக்கு ரயில்கள் ரத்து

image

தண்டவாள புதுப்பிப்பு பணிகள் காரணமாக, ரயில் எண்.16845 (ஈரோடு – செங்கோட்டை) ஆக. 27-30 வரை ஈரோடு – திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும், ரயில் எண்.16846 (செங்கோட்டை – ஈரோடு) ஆக.28-31 வரை செங்கோட்டை – திண்டுக்கல் ரத்து, மதுரை-செங்கோட்டை இடையே சிறப்பு ரயில்கள் 06845/06846 இயக்கப்படும். ரயில் எண்.16848 (செங்கோட்டை-மயிலாடுதுறை) ஆக.28 – செப்.3 வரை சில நிறுத்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

News August 26, 2025

தென்காசி: பிரபல கோயில்களின் வழிபாட்டு நேரம்

image

▶️சித்திரசபை – காலை: 6 – 11 மணி , மாலை 4 – 8 மணி வரை.
▶️மதுரவாணி அம்பாள் கோயில், சாம்பவர் வடகரை – காலை 5 – 10 மணி, மாலை 5 – 8 மணி வரை.
▶️திருமலை கோவில் – காலை 6 – 1 மணி, மாலை 5 – 8:30 மணி வரை.
▶️திருக்குற்றாலநாதர் கோவில் – காலை 6 – 12 மணி, மாலை 4:30 – 8:00 மணி வரை.
▶️காசி விஸ்வநாதர் கோயில் – காலை: 6 – 11 மணி , மாலை 4 – 8 மணி வரை.

*ஷேர் பண்ணுங்க

News August 26, 2025

தென்காசியில் நீர்நிலைகள் கணக்கெடுக்கும் பணி

image

தென்காசி மாவட்டத்தில் பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையின் மூலம் 7-வது சிறுபாசனக் கணக்கெடுப்பு மற்றும் 2-வது நீர்நிலைகள் கணக்கெடுப் புணி நடைபெற்று வருகிறது. 2வது நீர்நிலைகள் கணக்கெடுப்பு பணியானது கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள், நகர்புறங்களில் நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 26, 2025

தென்காசி: ஆக.29ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

தென்காசி மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் ஆக.29 அன்று காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்கிறார்கள். எனவே, அனைத்து வட்டார விவசாயிகளும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News August 25, 2025

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி

image

தென்காசி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தினந்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இன்று (25.08.2025) தென்காசி மாவட்ட உட்கோட்ட பகுதியில் உள்ள ஊர்களான ஆலங்குளம், தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இரவு காவல் துறை உதவி தேவைப்பட்டால் மேலே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!