Tenkasi

News April 27, 2024

தென்காசி அருகே 10 முறை வட்டமடித்த விமானம்

image

தென்காசி அடுத்த குத்துக்கல்வலசை பகுதியில் இன்று காலை வானில் ஒரு விமானம் தொடர்ந்து வட்டமடித்த வண்ணம் இருந்தது. ஒரே இடத்தில் 10 முறைக்கும் மேல் சுற்றி சுற்றி வந்த விமானத்தால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்நிலையில், வானில் வட்டமடித்தது பயிற்சி விமானம் என தகவல் தெரிந்ததால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

News April 27, 2024

தென்காசி அணைகளின் இன்றைய நிலவரம்

image

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து இறங்கி வருகிறது. கடனா அணை நீர் இருப்பு இன்று (ஏப்ரல் 27) 28 அடியாக உள்ளது. ராமநதி அணை நீர் இருப்பு 42 அடியாக சரிந்துள்ளது. கருப்பாநதி நீர் இருப்பு 40 அடியாக உள்ளது. குண்டாறு அணை 15 அடியாக குறைந்துள்ளது. அடவிநயினார் அணை நீர் இருப்பு 62 அடியாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் எங்கும் மழை இல்லை.

News April 27, 2024

திமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்.

image

தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியக் குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ் கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார்.இவரோடு கழகத்தினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று பொதுச்செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்

News April 26, 2024

தென்காசி: கோடை கால சிறப்பு முகாம்

image

தென்காசி,ஐந்தருவி அருகே உள்ள சூழல் பூங்காவில் இன்று தமிழ்நாடு வனத்துறை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இணைந்து நடத்திய கோடைகால இயற்கை பாதுகாப்பு முகாமில் கலந்து கொண்டு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் பரிசுகளையும், மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வழங்கினார்.இதில் மாணவ, மாணவிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

News April 26, 2024

ரூ.1.50 மதிப்புள்ள புகையிலை பறிமுதல்

image

சங்கரன்கோவிலில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து டிஎஸ்பி சுதீர் உத்தரவின் பேரில் நேற்று இன்ஸ்பெக்டர் மனோகர் தலைமையில், போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது கோமதிபுரம் தெருவில் உள்ள கடையில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள 135 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

News April 26, 2024

வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

image

முதலியார்பட்டியில் தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.    கூட்டத்திற்கு தலைவர் கட்டி அப்துல் காதர் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சுலைமான், பொருளாளர் பாக்யராஜ் முன்னிலை வகித்தனர். செயலாளர் நவாஸ்கான் வரவேற்றார். கடையம், பொட்டல்புதூர் நகருக்குள், கனிமவள வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும், சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News April 25, 2024

தென்காசி கலெக்டர் முக்கிய வேண்டுகோள்

image

தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் விடுத்துள்ள அறிக்கையில் தென்காசி மாவட்டத்தில் தற்போது கடுமையாக வெப்பம் மற்றும் வெப்ப அலை இருந்து வருகிறது. எனவே பொதுமக்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஓஆர்எஸ், எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்க வேண்டும். மதியம் 11 மணி முதல் மூன்று முப்பது மணி வரை தேவை இல்லாமல் வெளியே செல்லக்கூடாது.

News April 25, 2024

தென்காசியில் கலெக்டர் தகவல்

image

தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,  கோடை காலத்தை அடுத்து பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் காய்ச்சல், சளி இருமல், வயிற்றுப்போக்கு, வாந்திபேதி, தோலில் ஏற்படும் கொப்பளங்கள், அம்மை , மஞ்சள் காமாலை, மனிதர்கள் பறவைகளுக்கு ஏற்படும் அசாதாரணமாக உயிரிழப்புகள் போன்ற தகவல்களை கீழ்காணும் https://ihip.mohfw.gov.in/cbs/-1 என்ற இணையதளத்தில் பதிவேற்றலாம் என்றார்.

News April 25, 2024

தென்காசி: சென்னைக்கு தினசரி ரயில்

image

நெல்லையில் இருந்து தென்காசி வழியாக சென்னைக்கு தினசரி நேரடி ரயிலை இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் தென்னக ரயில்வேக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தென் மாவட்டங்களில் அதிக வருவாயை தென்காசி ரயில் நிலையம் ஈட்டி தர தொடங்கியுள்ளது. கோடை விடுமுறையாக இருப்பதால் இந்த ரயில் மார்க்கத்தில் கோடைகால சிறப்பு ரயில்களையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News April 25, 2024

தென்காசியில் எச்சரிக்கை விழிப்புணர்வு

image

தென்காசி நகராட்சியில் இன்று சுவாமி சன்னதி பஜாரில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிகள் விற்பனை செய்யும் மொத்த விற்பனைக் கடைகள் மற்றும் சாலையோர பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்தக் கூடாது என்று விழிப்புணர்வு செய்யப்பட்டது.மேலும் மஞ்சப்பை உபயோகத்தை வலுப்படுத்த வேண்டும் என எச்சரிக்கை விழிப்புணர்வு வழங்கப்பட்டு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

error: Content is protected !!