India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மே 12ஆம் தேதி தென்காசியில் கனமழை பெய்யக்கூடும். மேலும், மே 13ஆம் தேதி முதல் மே 15ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி மாவட்டத்தில் இன்று (மே.09) 4 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள மழை பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டை நகராட்சி பகுதியில் நிலவி வரும் குடிநீர் தட்டுபாட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில்
குண்டாறு அணையின் நீர்வழிப்பாதையான கருப்பசாமி கோவில் பகுதியில் இருந்து செங்கோட்டை நகராட்சி பகுதிக்கு குடிநீர் இணைப்பு அமைக்கும் பணிக்கான சாத்திய கூறுகள் குறித்து செங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் ரஹீம் இன்று ஆய்வு செய்தார்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு மருத்துவமனை தென்காசி மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா வழிகாட்டுதல் படி செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு இன்று மத்திய அரசின் காயகல்ப விருது ரூ.2 லட்சம் பரிசும் அறிவித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் சில பகுதிகளில் மாலை இரவு நேரங்களில் மெல்லிய தென்றல் காற்று வீச தொடங்கி உள்ளது. இந்த நிலையில் இன்று முதல் வெப்பம் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா அறிவித்துள்ளார். குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் சில பகுதிகளில் மிதமான மழை முதல் சற்று கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார்.
தென்காசியில் உள்ள குற்றால அருவிகளில் ஒன்றான ஐந்தருவி, சுற்றுலா பயணிகளிடையே அதிக கவனம் பெற்ற அருவியாகும். இது மூலிகை நிறைந்த நீராக கருதப்படுகிறது. இந்த அருவியில் நீர் ஐந்தாக பிரிந்து வருவதால் ஐந்தருவி எனப் பெயர் பெற்றுள்ளது. இந்த அருவியைச் சுற்றி பல கோயில்கள் உள்ளன. இந்த அருவி நீரை தேக்கி வைக்க அணைக்கட்டும் உள்ளது இது சுற்றியுள்ள பகுதிகளின் பாசனப் பயன்பாட்டிற்கு வழிவகுக்கிறது.
தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல் உங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், சம்பவங்கள், கோரிக்கைகளை செய்தியாக பதிவிட்டு நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். ஆர்வம் உள்ளவர்கள் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். செய்தியாளராக பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ஸ்ரீநிவாச சுப்பிரமணியம் என்பவர் சென்னை நீலாங்கரை பகுதியில் வசித்து வருபவர். தென்காசி மாவட்டத்தில் ஒரு கோயில் தற்போது மசூதியாக மாற்றப்பட்டு இருப்பது குறித்து சோஷியல் மீடியாவில் வந்த செய்தியை தனது ட்விட்டர் அக்கவுண்ட்டில் பகிர்ந்து உள்ளார். அசன் மைதீன் என்பவர் அளித்த புகாரின் பேரில் தென்காசி சைபர் கிரைம் போலீஸ் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
தென்காசி, பொட்டல்புதூரில் அதிமுக சார்பில் இன்று 11வது நாளாக தொடர்ந்து பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் நீர் ஆகாரங்கள் கோடை வெயிலை முன்னிட்டு வழங்கப்பட்டது. கடையம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். பாப்பான்குளம் கிளைச் செயலாளர் நல்லசிவன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.