India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டத்தில் இன்று முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணை பொதுச் செயலாளர், எம்பியுமான ஆ.ராசா இன்று வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். இதில் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என முன்னாள் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை அழைப்பு விடுத்துள்ளார்.
ஆலங்குளம் அருகே செல்ல பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்த சாத்தா குட்டி மகன் சிவமுருகன் (22).சென்னையில் உள்ள தனியார் கடையில் கேசியராக பணி புரிந்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த 33 வயது பெண்ணிடம் பழகி அவரது ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் கடையம் இன்ஸ்பெக்டர் மேரி ஜெனிதா நேற்று சிவமுருகனை கைது செய்தனர்.
தென்காசி மாவட்டத்தில் நாளை (மே.15) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தென்காசி மின் பகிர்மான வட்ட அதிகாரிகள் இன்று (மே 14) விடுத்துள்ள செய்தி குறிப்பு:தென்காசி மாவட்டத்தில் கோடை மழை காற்று, இடியுடன் பரவலாக பெய்ய தொடங்கியுள்ளது. இந்த நேரங்களில் பொதுமக்கள் மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மற்றும் மின் பகிர்வு பெட்டிகள் அருகே நிற்பதை தவிர்க்க வேண்டும். மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் அருகே உள்ள மின்வாரிய அலுவலகத்தில் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
தென்காசி மாவட்டத்தில் குத்துக்கல்வலசை இயிலிருந்து இலஞ்சி செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலம் பணி நடைபெற்று வருகிறது.அதில் இருசக்கர வாகனம் செல்வதற்கு பாதை இருந்தது. தற்போது மழை பெய்து வருவதால் அந்த பாதையும் பாதுகாப்பு கருதி இன்றுமுதல் அடைக்கப்பட்டுள்ளது.எனவே பொதுமக்கள் அனைவரும் மாற்று வழிப் பாதையை பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்
தமிழக கேரள எல்லையான புளியரை பகுதியில் சிறுமி பேரி நீர் தேக்கம் அமைந்துள்ளது. இந்த நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வழிந்தோடும் பகுதிகளில் கேரளாவிற்கு மாடுகளை ஏற்றி சென்று விட்டு வரும் வாகனங்கள் அதன் கழிவுகளை நீர் தேசத்தினுடைய நீர் வழிந்தோடும் பகுதிகளில் கொட்டி வருகின்றனர். இன்று அந்த பகுதியில் கொட்டி செல்லப்பட்ட கழிவுகளில் தீ வைத்து எரித்துள்ளதால் நோய் வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் தென்காசி மாவட்டம் 14 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 88.42% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 80.97 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 94.05 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி தென்காசி மாவட்டத்தில் மாணவர்கள் 89.25% பேரும், மாணவியர் 96.31% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 93.02% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. மேல்வழி மண்டல கீழ அடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. மேலும் குமரி கடல் பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்காசி மாவட்டத்தில் மழை தீவிரமடைந்துள்ளது. நேற்று(மே 13) பரவலாக மழை பெய்த நிலையில் இன்றும்மஃ(மே14) சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு10 மணி வரை தென்காசி மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.