Tenkasi

News March 20, 2025

தென்காசி மாவட்டத்திற்கு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

image

தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர்,நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.நெல்லை கோட்டத்தில் 362 ஓட்டுநர், நடத்துநர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம். இங்கு கிளிக் செய்து மார்ச்.21-ஏப்ரல்.21 வரை விண்ணப்பிக்கலாம். *ஷேர் பண்ணுங்க*

News March 20, 2025

தென்காசி மக்களுக்கு அடுத்த 4 தினங்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

தென்காசி மாவட்டம் முழுவதும் பரவலாக விட்டுவிட்டு கோடை மழை பெய்கிறது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் அடுத்த நான்கு தினங்களுக்கு கோடை மழை தொடர வாய்ப்பு உள்ளதாக தென்காசி வெதர்மேன் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார். பெரும்பாலான இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

News March 20, 2025

குண்டாறு அணை பகுதியில் 26 மில்லி மீட்டர் மழை பதிவு

image

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கோடை மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக குண்டாறு அணை பகுதியில் 26.20 மில்லி மீட்டர் மழையும், அடவி நைனார் அணை பகுதியில் 11 மில்லி மீட்டர் மழையும், கருப்பாநதி அணைப் பகுதியில் 8.50 மில்லி மீட்டர், ராமநதிப் பகுதியில் 8 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 20, 2025

தென்காசி அருகே தாறுமாறாக ஓடிய கனிம வள லாரி – விபத்து!

image

குற்றாலம் பகுதியில் இருந்து இன்று(மார்ச் 20) செங்கோட்டை நோக்கி சென்ற கனிமவள லாரி தாறுமாறாக ஓடி, வல்லம் ஊராட்சி சிலுவை மூக்கு அருகே சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டது. அப்பகுதியில் பேருந்துக்கு காத்திருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியதாக பெருமூச்சு விட்டனர். கனிம வளங்கள் கொண்டு செல்லும் கனரக லாரிகளின் போக்குவரத்தால் தொடர்ந்து தென்காசி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

News March 20, 2025

தென்காசி எஸ்.பி அலுவலகத்தில் குறை தீர்ப்பு கூட்டம்

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் புகார்களை விரைந்து விசாரணை செய்திட சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது

News March 19, 2025

தென்காசி: நீண்ட கால துன்பம் நீங்கும் ஆலயம்

image

தென்காசி கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு 16 திருக்கரங்களுடன் நரசிம்மர் காட்சி தருகிறார். இங்குள்ள நரசிம்ம தீர்த்தத்தில் நீராடினால் சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். நரசிம்மருக்கு பிரியமான பானகம் படைத்து வணங்கினால் அவரின் முழு அருளும் கிடைக்கும். நரசிம்மரை தியானம் செய்பவர்கள் தம் பகைவர்களை சுலபமாக வெல்லும் திறன் பெறுவர். நீண்ட கால துன்பங்கள் நீங்கும். SHARE IT

News March 19, 2025

தென்காசி: SC & ST  மாணவர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு 

image

ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் பிற இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் தமிழ்நாடு ஆதி திராவிட வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் சார்பில் அகில இந்திய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சி பெற தாட்கோ இணையதளத்தில் www.tahdco.com பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News March 19, 2025

தென்காசி மாவட்ட மழை அளவு விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று மாலை தொடங்கி நள்ளிரவு வரை கோடை மழை கொட்டியது. இன்று காலை 7 மணி வரை பெய்த மழை அளவு விவரம் வருமாறு: குத்பாஞ்சான் 55.2 மில்லி மீட்டர், நாராயணபுரம் (பகுதி 2 )54, சொக்கம்பட்டி 54, ஆவுடையானூர் 30, தென்காசி 18.4, குற்றாலம் 17.2, கடையநல்லூர் 12, ஆலங்குளம் 9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News March 19, 2025

கருப்பாநதி அணையில் 34 மில்லி மீட்டர் மழை பதிவு

image

தென்காசி மாவட்டத்தில் நேற்று கோடை மழை பரவலாக பல்வேறு பகுதிகளில் பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையின் காரணமாக கடையநல்லூரில் உள்ள கருப்பா நதி அணைப் பகுதியில் 34 மில்லி மீட்டர், கடையம் ராமநதி அணைப் பகுதியில் 3 மில்லி மீட்டர், அடவி நயினார் அணைப் பகுதியில் 4 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.

News March 19, 2025

தென்காசி கோவில் கும்பாபிஷேகம்: ஆணையர் பதிலளிக்க உத்தரவு

image

தென்காசியை சேர்ந்த முத்துராஜ் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கோயில் பணிகள் முழுமை பெறாமல் ஏப்ரல் 7ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்க வேண்டும் கூறியிருந்தார். இதனை நேற்று விசாரித்த நீதிபதிகள், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், இணை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

error: Content is protected !!