Tenkasi

News March 24, 2025

புளியங்குடி: மூளைச்சாவு அடைந்தரின் உறுப்புகள் தானம்

image

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்த அருணாச்சலம்(58) என்பவர் வீட்டின் தகர கூரையில் கால் வைத்தபோது கீழே விழுந்து, தலையில் அடிபட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்ற மூளைச்சாவு அடைந்ததால் உறவினர்கள் ஒப்புதலுடன் அவரது உடல் உறுப்புகள் நேற்று(மாரச் 23) இரவு தானம் பெறப்பட்டன. இன்று அரசு சார்பில் இறுதி மரியாதை செய்து அவரது உடல் ஒப்படைக்கப்பட உள்ளது.

News March 24, 2025

தென்காசி: இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று (மார்ச்-23) இரவு தென்காசி, புளியங்குடி சங்கரன்கோவில், ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News March 23, 2025

தென்காசி: திருமணத்தடை நீங்கும் ஆலயம்

image

புளியறையில் அமைந்துள்ள சதாசிவ மூர்த்தி திருக்கோயிலில் மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். சிவனுக்கு வலது பின் திசையில் நவநீத கோபாலர், சுற்றுப்பிரகாரத்தில் சதாசிவமூர்த்தி, சண்டிகேஸ்வரர், சனீஸ்வரன், சுப்பிரமணியர், பைரவர், நாகர்சந்திரன், சப்த கன்னிகள் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். திருமணத்தடை நீங்க, கல்வி, வேலை வாய்ப்பு, வியாபாரத்தில் சிறந்து விளங்க இங்கு வேண்டலாம். *ஷேர் பண்ணுங்க*

News March 23, 2025

16 வகை செல்வங்கள் தரும் கோயில்

image

தென்காசி மாவட்டம் செங்கோட்டையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் திருமலை முத்துக்குமார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள திருமலைக் குன்றின் மீதும் ஒரு உச்சிப்பிள்ளையார் எழுந்தருளியிருக்கிறார். இங்குள்ள உச்சிப்பிள்ளையார் சன்னதிக்குச் செல்ல 16 படிக்கட்டுக்கள் உள்ளன. இந்த 16 படிகளை ஏறி இவரை வணங்குபவர்களுக்கு 16 வகை செல்வங்களும் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. *மற்றவர்களுக்கும் பகிருங்கள்*

News March 23, 2025

சிறப்பு அலங்காரத்தில் அரசரடி விநாயகர்

image

தென்காசி மாவட்டம் இலஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட அரசரடி விநாயகர் திருக்கோவிலில் மண்டலபிஷேகம் நடைபெற்றது. இதில் இலஞ்சி வாய்க்கால் அருகே அமைந்துள்ள அரசரடி விநாயகர் திருக்கோயிலில் இன்று காலை கணபதி ஹோமம், சிறப்பு பூஜை, சிறப்பு ஆராதனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

News March 23, 2025

மலைப்பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்பு வீரர்கள்

image

சுரண்டை அருகே உள்ள வெள்ளகாலில் இன்று மலைப்பாம்பு உயிருடன் பார்த்த பொதுமக்கள் சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சுரண்டை தீயணைப்பு அலுவலர் ரமேஷ் தலைமையில் நிலைய அலுவலர்கள்  பாலசந்தர், ரவீந்திரன், சாமி, திலகர், நாண்முகராஜன் எட்வின் பொன்ராஜ் ஆகியோர் விரைந்து சென்று மலைப்பாம்பை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பொதுமக்கள் தீயணைப்பு துறையினரை பாராட்டினர்.

News March 23, 2025

காசி விஸ்வநாதர் கோவில் மகா கும்பாபிஷேகம்; அன்னதானம் ஏற்பாடு 

image

தென்காசி் காசி விஸ்வநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம் ஏப்ரல்.7ம் தேதி நடைபெற உள்ளது. இங்கு வருகை தரும் பக்தர்களுக்கு சிவ பக்தர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இதற்காக தென்காசி தெப்பக்குளம் பகுதியில் தற்காலிக உணவு அருந்தும் கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. 50 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகசிவ பக்தர் வைரமுத்து இன்று தெரிவித்தார். *ஷேர்

News March 23, 2025

சங்கரன்கோவில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு

image

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரன் நாராயணர் கோவிலில் ஆண்டு தோறும் மார்ச், செப். மாதங்களில் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை மூன்று நாட்கள் அதிகாலையில் சூரிய உதயத்தின் போது சூரிய ஒளி மூலவர் மீது விழும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அதேபோன்று மூலவர் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு நடைபெற்றது. இதனை காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். *ஷேர்

News March 22, 2025

தென்காசி: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

தென்காசி மாவட்டத்திற்கு தினந்தோறும் காவல் துறை கண்காணிப்பாளர் அதிகாரிகள் சார்பில் இன்று (22.03.25)இரவு நேர ரோந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளன மேலும் உங்களது தேவையான உதவிகள் மற்றும் குறைகளை மேற்கண்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் அல்லது 98840 42100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 22, 2025

குழந்தை வரம் தரும் ஆலயம்

image

கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரத்தில் அபய ஹஸ்த ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தனி சன்னதியில் 6அடி உயர திருமேனியுடன் அபய ஹஸ்த ஆஞ்சநேயர் மிக கம்பீரமாக எழுந்தருளி இருக்கிறார். திருப்பாதங்கள் பக்தர்களை நோக்கி ஆசி வழங்குவது போல் உள்ளது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்குள்ள குளத்தின் படியில் படிப்பாயாசம் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம். *மற்றவர்களுக்கு பகிருங்கள்*

error: Content is protected !!