Tenkasi

News September 2, 2025

கல்குவாரிகளின் அளவீடு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

image

தென்காசி மாவட்டத்தில் கல் குவாரிகளை ட்ரோன் மூலம் ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரி, புளியறை ஜமீன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். 45 குவாரிகளில் 17 குவாரிகள் அளவீடு செய்யப்பட்டன. நீதிபதிகள், 17 குவாரிகளின் அறிக்கையை செப்.9க்குள் தாக்கல் செய்யவும், மீதமுள்ளவற்றை 4 வாரங்களுக்குள் அளவீடு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

News September 2, 2025

செங்கோட்டை ரயில் மாற்று பாதையில் இயக்கம்

image

செங்கோட்டை – மயிலாடுதுறை பயணிகள் ரயில் வண்டி எண்(16848) செப்டம்பர் மாதம் முழுவதும் பராமரிப்பு பணி காரணமாக மாற்றுப்பாதையில் செல்லவுள்ளது. புதன்கிழமை மட்டும் மதுரை வழியாகவும், மற்ற நாட்களில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, கீரனூர் , திருச்சி வழியாக செல்லும். இதை மற்றவர்களுக்கு *ஷேர் செய்யவும்.

News September 2, 2025

தென்காசி கம்மி விலையில் சொந்த வீடு வேணுமா??

image

ஒரு சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. அதன் விலை எட்டாத உயரத்தில் உள்ளதால் பலருக்கும் அது இன்று வரை எட்டாத கனவு. இதை மாற்ற ஒரு வழி இருக்கு தென்காசி மக்களே! தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வீடுகள் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ₹3 லட்சம், சொத்து இல்லாதவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இங்க <>கிளிக்<<>> செய்து விண்ணப்பியுங்க.SHARE பண்ணுங்க..

News September 2, 2025

தென்காசியில் அரசு வேலை APPLY NOW!

image

ஆலங்குளம், கடையம், கடையநல்லூர், கீழப்பாவூர், மேல நீலிதநல்லூர், சங்கரன்கோவில், செங்கோட்டை மற்றும் தென்காசி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றிய தலைப்பின் கீழ் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் அலுவலக உதவியாளர் இரவு காவலர் பணியிடங்களை இன சுழற்சி மூலம் பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. www.tnrd.gov.in என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது செப்டம்பர் 1ம் தேதி 31 வரை விண்ணப்பிக்கலாம்.

News September 2, 2025

தென்காசி – பெங்களூர் ரயில் சிறப்பு சேவை மேலும் நீட்டிப்பு

image

திருநெல்வேலி – தென்காசி – மதுரை வழியாக பெங்களூருக்கு சுதந்திர தினத்தை ஒட்டி விடப்பட்ட சிறப்பு ரயிலை (06103/04) நீட்டிக்க பாஜக தென்காசி மாவட்ட தலைவர் ஆனந்த் அய்யாசாமி விடுத்த கோரிக்கையை ஏற்று தென்னக இரயில்வே அடுத்த எட்டு வாரங்களுக்கு (செப்-07 – அக்.27) வரை ரயில் சேவையை நீட்டிக்க அறிவித்துள்ளது. (முன்பதிவு செப்- 02 ல் தொடக்கம்) *ஷேர் பண்ணுங்க

News September 2, 2025

தென்காசி இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரங்கள்

image

தென்காசி மாவட்டம், காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தினந்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இன்று தென்காசி மாவட்ட உட்கோட்ட பகுதியில் உள்ள ஊர்களான ஆலங்குளம், தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இரவு காவல் துறை உதவி தேவைப்பட்டால் மேலே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News September 1, 2025

தென்காசி: நாய் குறுக்கே வந்ததால் பைக் விபத்து

image

கடையநல்லூர் தாலுகா, வேலாயுதபுரத்தில் இருந்து மங்களாபுரம், கடையநல்லூர் செல்லும் சாலையில் சாம்பவர் வடகரை மேலூரை சேர்ந்த சீனிவாசன் என்ற முதியவரும் அவர் மனைவியும் இருசக்கர வாகனத்தில் வரும் போது நாய் குறுக்கே வந்து மோதியதால் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஏற்பட்டதால் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

News September 1, 2025

ஆதிதிராவிடர் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி

image

தென்காசி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு, சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படவுள்ளது
சேருவதற்கு தாட்கோ இணையதளத்தின் மூலம் www.tahdco.com பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப. அவர்கள் தகவல்.

News September 1, 2025

தென்காசி: இனி எளிதில் சான்றிதழ் பெறலாம்!

image

தென்காசி மக்களே; உங்களுக்கு தேவையான
▶️சாதி சான்றிதழ்
▶️வருமான சான்றிதழ்
▶️முதல் பட்டதாரி சான்றிதழ்
▶️கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
▶️விவசாய வருமான சான்றிதழ்
▶️சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
▶️குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த லிங்கில் <>CLICK <<>>செய்து அப்ளை செய்யவும் *மறக்காம ஷேர் பண்ணுங்க

News September 1, 2025

தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், பெற்றுக் கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், சார் ஆட்சியர் வைஷ்ணவி பால், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு.தண்டபாணி கலந்து கொண்டனர்.

error: Content is protected !!