India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி, கொத்தடப்பட்டியைச் சேர்ந்த தம்பதி அய்யனார், வாசுகி. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். தொடர்ந்து பெரியவர்களின் மத்தியஸ்தத்தால் சேர்ந்தனர். இந்நிலையில், அய்யனார் போதையில் மீண்டும் தகராறு செய்ததால் வாசுகி தனது தாய் வீட்டிற்கு சென்றார். இதையடுத்து நேற்று அங்கு சென்ற அய்யனார், வாசுகிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில் சிவகிரி போலீசார் அவரை கைது செய்தனர்.
தென்காசி மக்களவைத் தொகுதிக்கு வருகிற 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 100 சதவீதம் வாக்களித்தல் மற்றும் நேர்மையாக வாக்களித்தல் வலியுறுத்தி தென்காசியில் உள்ள அனைத்து பஸ்கள் மற்றும் வாகனங்களில் விழிப்புணர்வு வாசகம் அடங்கி ஸ்டிக்கர் ஒட்டும் பணி இன்று நடைபெற்றது. கீழப்பாவூர் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்ட உதவி அலுவலர்கள் சிவக்குமார் மாரீஸ்வரன் பங்கேற்றனர்.
தென்காசி நகர தமிழக முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பாக நேற்று தென்காசி தமுமுக அலுவலகத்தில் வைத்து 250க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நோன்பு பெருநாள் தர்மம் தென்காசி நகர தலைவர் அபாபில் மைதீன் தலைமையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆதம்பின் ஆசிக் களஞ்சியம்பீர் , சாகுல்ஹமீது, ஜாபர்சரிப் முஸவ்வீர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வீட்டிலிருந்து தபால் வாக்கும் செலுத்தும் பணி நடந்து வருகிறது தென்காசி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை 10ம் தேதி முதல் 3 நாட்கள் தபால் ஒட்டுகள் பெறப்படுகிறது. இதற்காக தபால் ஓட்டு செலுத்தக்கூடிய வாக்காளர்கள் இல்லங்களில் தயாராக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்.
தென்காசி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் , கலெக்டர் கமல் கிஷோர் நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்த வாக்காளர்கள் படிவம் 12 டி-யில் குறிப்பிட்டுள்ள முகவரியில் வருகிற 10, 11,12 ஆகிய தினங்களில் வீடுகளுக்கு வந்து வாக்கு பதிவு செய்யப்படும் எனவே சம்மந்தப்பட்ட நபர்கள் வீடுகளில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு கோடை காலம் தொடங்கியது முதல் பதிவாகி வரும் வெப்பநிலைகள் அனைத்தும் அதிகபட்சமாக இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக, இன்று இரவு தென்காசியில் 7 மணி முதல் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்காசி நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கிருஷ்ணசாமி இன்று புளியரை காவல் சோதனை சாவடி அருகில் இருந்து கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும் கனிம வள கனரக லாரிகளின் அணி வகுப்பை பார்வையிட்டார். அப்போது, அவருடன் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர். கிருஷ்ணசாமியை இயற்கை வள பாதுகாப்பு சங்க செயலர் ஜமீன் சந்தித்தார்.
தென்காசியில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7ம் தேதி மாவட்ட எஸ் பி சுரேஷ்குமார் உத்தரவின் பேரில். பேருந்து நிலையங்கள், இரயில் நிலையம், மக்கள் கூடும் முக்கிய அனைத்து இடங்களிலும் காவல்துறை வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவு சோதனை செய்து அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் நாளை 08.04.24 மற்றும் நாளை மறுநாள் 09.04.24 தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த 2 மாதமாக கோடை வெயில் கொளுத்துகிறது. குற்றாலம் மலைப்பகுதிகளிலும் இதே நிலைமை நீடிக்கிறது. இதன் காரணமாக குற்றாலம் பிரதான அருவிகளில் தண்ணீர் முழுமையாக வற்றி விட்டது. பிரதான அருவி பாறையாக காட்சி அளிக்கிறது. இன்று (ஏப்ரல்.7) ஞாயிறு விடுமுறை கொண்டாட குற்றாலம் வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
Sorry, no posts matched your criteria.