India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடையம், தோரணமலை முருகன் கோவில் நிர்வாகத்தின் சார்பில் சித்திரைத் திருவிழாவான நேற்று பல்வேறு பிரிவுகளில் 17 பேருக்கு தோரணமலையான் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தன்னூத்து குமரன், மந்திரமூர்த்தி, செல்வக்குமார், பரமசிவன், கோபாலகிருஷ்ணன், மாதவி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
தென்காசி, செங்கோட்டை பகுதியில் உள்ள விஸ்வகர்மா சமுதாய ஐந்தொழில் செய்யும் சமூக மக்களை ஒருங்கிணைத்து விஸ்வகர்மா ஜெகத்குரு ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சுவாமிகளின் ஆலோசனை படி தேர்தல் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.
இதில் மாநில ஐடி வின்ஸ் செயலாளர் வேலுச்சாமி, தென்காசி மாவட்ட செயலாளர் மாரியப்பன், ஏற்பாட்டில் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக செயல்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தென்காசி கலெக்டர் கூட்ட அரங்கில் இன்று தென்காசி மக்களவைத் தொகுதிக்கான தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தலைமை தாங்கினார். காவல்துறை பார்வையாளர் பங்கஜ் நயன் தேர்தல் செலவின பார்வையாளர் சதீஷ் குருமூர்த்தி, தென்காசி எஸ் பி சுரேஷ்குமார் காவல்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
தென்காசி மாவட்ட பாஜக அலுவலகத்தில் இன்று தென்காசி நகர அதிமுக 14 வார்டு நிர்வாகிகள் வார்டு செயலாளர் வார்டு தலைவர் இளைஞர் பாசறை செயலாளர் செயற்குழு உறுப்பினர் இளைஞர் அணி மகளிர் அணி மகளிர் பெண் பிரதிநிதி 15 பேர் அக்கட்டுரையில் இருந்து விலகி
தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் ராஜேஷ் ராஜா முன்னிலையில் பாஜகவில் கட்சியில் இணைந்தனர்.
தென்காசி தொகுதி வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீ குமாருக்கு ஆதரவாக நேற்று சுரண்டையில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அப்போது, விபத்தில் பலியான திமுக பிரமுகர் கலிங்கப்பட்டி சுப்பிரமணியன் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. உடன், மாவட்ட செயலாளர் இராம உதயசூரியன், சதன் திருமலை குமார் எம்எல்ஏ, ஏடி நடராஜன், ராமகிருஷ்ணன், துரைமுருகன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பெரிய சாமியாபுரம் சேர்ந்தவர் விவசாயி கருப்பசாமி. இவர் தனக்கு சொந்தமான இடத்தை பட்டா மாற்ற விண்ணப்பித்துள்ளார். இந்த நிலையில், ஈச்சந்தா விஏஓ விஜயகுமாரிடம் பட்டா மாற்ற ரூ.13,000 லஞ்சமாக கேட்டுள்ளார். இதுகுறித்து கருப்பசாமி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்ததின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் லஞ்சம் வாங்கிய விஏஓ நேற்று இரவு அதிரடி கைது செய்தனர்.
தென்காசி மாவட்டத்திற்கான நேற்றைய (ஏப்.12) மழைப்பொழிவு விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அணைப் பிரிவு, ஆயிக்குடி ஆகிய பகுதிகளில் 3 செ.மீட்டரும், தென்காசி, கருப்பாநதி அணை ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டர் மழை அளவும் பதிவாகியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வந்தது. அந்த வகையில் தமிழகத்தில் தென்காசி மாவட்டம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு இன்று மாலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே பூலாங்குடியிருப்பு கிராமத்தில் தோப்பு காவலாளியாக வேலை செய்து வந்த கேரளா பத்தனபுரத்தைச் சேர்ந்த உதயன் (50) என்பவர் இன்று காலையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது சம்மந்தமாக புளியரை போலீசார் வழக்கு பதிவு செய்து, வல்லம் பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
புளியங்குடி இந்திரா காலணியில் மது பாட்டில்கள்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்துவந்த புளியங்குடி மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ராமையா மகன் கார்த்தி (22) என்பவரை இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து ரூபாய் 18000 மதிப்புள்ள 92 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.