India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2019 மக்களவைத் தேர்தலில், தென்காசி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தனுஷ் குமார் வெற்றிபெற்று எம்பியானார். இவர், மொத்தம் 4,76,156 (44.7%) வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார். சுயேச்சை வேட்பாளரான தங்கராஜ் என்பவர் 727 வாக்குகள் பெற்று கடைசி இடம் பிடித்தார். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! நம் ஓட்டு நமது குரல்!
தென்காசி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில் தென்காசி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், எஸ்பி சுரேஷ்குமார் ஆகியோர் உத்தரவு படி மாவட்டம் முழுவதும் தங்கும் விடுதிகளில் வெளியூர் மற்றும் வெளி மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் யாரேனும் தங்கி உள்ளனரா என்று காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் மாலை 7 மணி வரை தென்காசி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மக்களவைத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. அதன் பிறகு தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் வெளியேற வேண்டும் என தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் இன்று தொடங்கி உள்ளனர். வெள்ளிக்கிழமை காலை 7:00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
தென்காசி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு 100% வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு கட்ட விழிப்புணர்வுகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி வருகின்றனர். தென்காசியில் இன்று தென்காசி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கமல் கிஷோர் தலைமையில் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தும் வகையில் ஒரு லட்சம் விதை பந்துகள் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் மகளிர் குழுவினர் பங்கேற்றனர்.
தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும். இதன் காரணமாக இன்று தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் மாலை 7 மணி வரை தென்காசி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடையம், தோரணமலை முருகன் கோவில் நிர்வாகத்தின் சார்பில் சித்திரைத் திருவிழாவான நேற்று பல்வேறு பிரிவுகளில் 17 பேருக்கு தோரணமலையான் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தன்னூத்து குமரன், மந்திரமூர்த்தி, செல்வக்குமார், பரமசிவன், கோபாலகிருஷ்ணன், மாதவி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
தென்காசி, செங்கோட்டை பகுதியில் உள்ள விஸ்வகர்மா சமுதாய ஐந்தொழில் செய்யும் சமூக மக்களை ஒருங்கிணைத்து விஸ்வகர்மா ஜெகத்குரு ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சுவாமிகளின் ஆலோசனை படி தேர்தல் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.
இதில் மாநில ஐடி வின்ஸ் செயலாளர் வேலுச்சாமி, தென்காசி மாவட்ட செயலாளர் மாரியப்பன், ஏற்பாட்டில் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக செயல்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தென்காசி கலெக்டர் கூட்ட அரங்கில் இன்று தென்காசி மக்களவைத் தொகுதிக்கான தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தலைமை தாங்கினார். காவல்துறை பார்வையாளர் பங்கஜ் நயன் தேர்தல் செலவின பார்வையாளர் சதீஷ் குருமூர்த்தி, தென்காசி எஸ் பி சுரேஷ்குமார் காவல்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
தென்காசி மாவட்ட பாஜக அலுவலகத்தில் இன்று தென்காசி நகர அதிமுக 14 வார்டு நிர்வாகிகள் வார்டு செயலாளர் வார்டு தலைவர் இளைஞர் பாசறை செயலாளர் செயற்குழு உறுப்பினர் இளைஞர் அணி மகளிர் அணி மகளிர் பெண் பிரதிநிதி 15 பேர் அக்கட்டுரையில் இருந்து விலகி
தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் ராஜேஷ் ராஜா முன்னிலையில் பாஜகவில் கட்சியில் இணைந்தனர்.
Sorry, no posts matched your criteria.