India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான தென்காசி, குமரி, கோவை, தூத்துக்குடி மற்றும் நெல்லையில் இன்று மாலை 5 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
செங்கோட்டை விஸ்வநாதபுரத்தை சேர்ந்த பீடித் தொழிலாளி ஸ்டெல்லாவின் மகள் இன்பா சிவில் சர்வீஸ் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இன்று அவரை சிபிஐ எம்எல் மற்றும் தென்காசி மாவட்ட ஜனநாயக பீடி தொழிலாளர் சங்கம் சார்பாக தென்காசி மாவட்ட செயலாளர் புதியவன் (எ) சுப்பிரமணியன் தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர் வேல்முருகன், துணை தலைவர் தம்பித்துரை உள்ளிட்டோர் நேரில் சென்று பாராட்டினர்.
தென்காசி தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வேட்பாளர்கள் முன்னிலையில் அறைக்கு சீல் வைக்கப்பட்டது. தென்காசி பாராளுமன்ற தொகுதியில் தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் இன்று தெரிவித்துள்ள தகவலில், கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படும் நிலையில், தமிழக – கேரளா எல்லையான புளியரை பகுதியில் கால்நடைத் துறையினர் முறையான சோதனை சாவடிகள் அமைத்து கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்காசி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 7 மணி வரை) இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் மக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்களான விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டியில் உள்ள வாக்குச் சாவடியில்
இன்று வாக்காளர்களுடன் வரிசையில் காத்திருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது வாக்கை பதிவு செய்தார். இதில் ஏராளமான பொதுமக்களும் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று வாக்கு செலுத்தினார்.
மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, தனது சொந்த ஊரான சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டியில் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்றினார். மதிமுக தலைமை நிலைய செயலாளரும் திருச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான துரை.வைகோ தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.
தென்காசி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது செய்தியின் தலைப்பையோ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.
சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் காந்திஜி நூற்றாண்டு நினைவு காய்கறி சந்தையானது தற்காலிகமாக இயங்கி வருகிறது. இந்நிலையில் நாளை நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காந்திஜி நூற்றாண்டு நினைவு தினசரி சந்தைக்கு ஒரு நாள் விடுமுறை என பதாகை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் வியாபாரிகள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்று விடுமுறை அளித்ததாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.