India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பனம்பட்டி மலையராமபுரத்தை சேர்ந்தவர் காளி ராஜா (24) கட்டிட தொழிலாளி ஆன இவர் நேற்று காலை வேலைக்கு செல்வதாக சென்றவர் பாவூர்சத்திரம் ரயில் நிலைய பயணிகள் நிழற்குடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பனம்பட்டி மலையராமபுரத்தை சேர்ந்தவர் காளி ராஜா (24) கட்டிட தொழிலாளி ஆன இவர் நேற்று காலை வேலைக்கு செல்வதாக சென்றவர் பாவூர்சத்திரம் ரயில் நிலைய பயணிகள் நிழற்குடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள யுஎஸ்பி கல்லூரியில் காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் ஆய்வினை மேற்கொண்டு காவல்துறையினருக்கு அறிவுரைகளை வழங்கினார். உடன் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உடனிருந்தார்.
தென்காசி மாவட்ட அளவில் உயர் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி 26 ஆம் தேதி பகல் 11 மணிக்கு தென்காசி இசிஇ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த கல்வியாண்டு 11,12 ஆம் வகுப்பு முடித்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தொழில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள கல்லூரி கல்வி பயில்வதற்கான வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தென்காசியில் 6 முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்ததை அடுத்து இன்று முதல் கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. பள்ளிகளில் விடுதியில் தங்கிப் படித்த மாணவ, மாணவிகள் விடுதியை காலி செய்து பெட்டி, படுக்கைகளுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இதன் காரணமாக நேற்றும், இன்றும் தென்காசி, சங்கரன் கோவில் பகுதிகளில் வெளியூர்களுக்கு இருந்து செல்லும் பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது.
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் தென்காசி மாவட்டத்தில் இதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. கேரள மாநில எல்லையான புளியரை சோதனை சாவடியில் சுகாதாரத் துறையினர் ஊரக வளர்ச்சித் துறையினர் முகாமிட்டு அங்கிருந்து வரும் வாகனங்களை தணிக்கை செய்கின்றனர். இன்று (ஏப்ரல் 24) வாகனங்களில் கிருமி நாசினி செலுத்தி பின்னர் அனுமதிக்கப்பட்டது.
தென்காசி அருகே உள்ள ரவண சமுத்திரம் மாலிக் நகரை சேர்ந்தவர் பிரம்ம நாயகம் (60) இவர் நேற்று வீட்டு அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது நெல்லையில் இருந்து செங்கோட்டை சென்ற ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து தென்காசி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோவிலில் சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு 23ம் தேதி காலை அபிஷேகம்,தீபாராதனை,நண்பகலில் உச்சிகால அபிஷேகம்,இரவில் சிறப்பு அபிஷேகம்,தீபாராதனை நடைபெற்றது.பின்னா், வில்லிசை நிகழ்ச்சி, இன்று அதிகாலையில் சித்திரைப் பெளா்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தொடா்ந்து, காலை 10.30 மணிக்கு தீா்த்தவாரி நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு கோயிலில் பக்தா்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் பறவைக் காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாவட்டத்தில் விரைந்து மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். இதில் அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
தென்காசி நகராட்சி, ஆணையாளர் ரவிச்சந்திரன் உத்தரவின் ,படியும் ,சுகாதார அலுவலர், மற்றும் ஆய்வாளர்கள் அறிவுரையின்படியும், இன்று காலையில் தென்காசி நகராட்சி பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில், தடை செய்யப்பட்ட நெகிழி கழிவுகள் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டு சுமார் 20 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.