India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டத்திற்கு இரவு நேரம் ரோந்து அதிகாரிகள் தினமும் நியமிக்கப்படுகின்றனர் மேலும் இன்று (25.3.25) புளியங்குடி சங்கரன்கோவில் ஆலங்குளம் தென்காசி போன்ற பகுதிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளன. உங்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை மேற்கண்ட அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம் அல்லது 100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி உட்பட 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்பட்டுள்ள 315 காலிப் பதவியிடங்களுக்கும் தற்செயல்/இடைக்காலத் தேர்தல்களை எதிர்வரும் மே மாதத்தில் நடத்துவதற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது. மாவட்ட அளவில் மேற்படி தேர்தல் முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க தொடர்புடைய அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். *ஷேர்
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு (29.03.2025) அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் உலக தண்ணீர் தின கருப்பொருள் மற்றும் ஊராட்சி செலவினம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் இதில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே கேளையாப்பிள்ளையூர் கிராமத்தில், தங்கள் முன்னோர்கள் கூறியதற்கு இணங்க கடந்த 6 தலைமுறைகளுக்கும் மேலாக பொங்கல் கொண்டாடாமல் உள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும், தை மாதம் மூன்றாம் வாரத்தில் உச்சினி மாகாளி அம்மன் கோவிலில் பொங்கல் வைத்து தாங்கள் கொண்டாடுவதாகவும், வீடுகளுக்கு முன் பொங்கல் வைப்பதில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
தென்காசி மாவட்டத்தில் மார்ச் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11:00 மணிக்கு ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து வட்டார விவசாயிகளும் கலந்து கொண்டு மனுக்களை அளிக்குமாறு ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்
தமிழகத்தில்அரசு பிளஸ் ஒன்,பிளஸ் டூ வகுப்பு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வாசுதேவநல்லூர் கோட்டை தெருவை சேர்ந்த கவின் பிரதாப் (17) பிளஸ் ஒன் மாணவர் நேற்று நடைபெற்ற வணிகவியல் தேர்வு எழுதியபோது நெஞ்சுவலிஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் வாசுதேவநல்லூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழக கேரளா எல்லையான ஆரியங்காவு கடமான் பாறை வனப்பகுதியில் சந்தன மரங்களை வெட்டி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புளியரை கற்குடியை சேர்ந்த மணிகண்டன் ( 27 ), அஜித்குமார் (22), குமார் (35 ) ஆகிய மூன்று பேர் மரம் வெட்டி கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களை நேற்று போலீசார் கைது செய்து மரங்களை பறிமுதல் செய்தனர் .
நெல்லை மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில், ஆலங்குளம் ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்கள் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் இன்று [மார்ச்.24] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். அவசர உதவிக்கு 100யையும் தொடர்பு கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது
தென்காசி மாவட்டம் குற்றாலம் ஏழைகளின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழந்தோட்ட அருவி, சிற்றருவி, தேனருவி, செண்பகாதேவி அருவி, புலி அருவி, பழைய குற்றால அருவி என 8 அருவிகள் அமைந்துள்ளன. கடல் மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்தில் இருக்கும் தேனருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. *தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
தென்காசி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? மாபெரும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி வரும் மார்ச்-30 (ஞாயிறு) குத்துக்கல்வலசையில் அமைந்துள்ள SRR திருமண மஹாலில் நடைபெறுகிறது. இதில் அனைத்து மாணவ மாணவிகளும் கலந்து கொள்ளுமாறு இன்று கேட்டுக் கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். *மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு பகிரவும்*
Sorry, no posts matched your criteria.