India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திடஉத்தேசிக்கப்பட்டுள்ளது செப்.6ம் தேதி கீழ்கண்ட ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தளம் பாறை, திரவியநகர், ராமச்சந்திர பட்டணம், மேலமெஞ்ஞானபுரம் ஆகியன, *ஷேர்
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள 2ம் நிலை காவலர், 2ம் நிலை சிறை காவலர், தீயணைப்பாளர் தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளது. விருப்பம் உடையவர்கள் 04633213179 என்ற தொலைபேசி எண் வாயிலாக (அ) மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் சென்று பதிவு செய்து பயன்பெறவும்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி அதிகம் பயன்படுத்தினால் உடல்நல பாதிப்பு ஏற்படும் என எச்சரித்துள்ளார். மேலும், தேசிய தோட்டக்கலை திட்டத்தில் ஹெக்டருக்கு ரூ.1500 மதிப்பில் உயிர் உரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். தென்னைக்கு மஞ்சள் ஒட்டும் பொறி, ஒட்டுண்ணி அட்டைகள் மானியத்தில் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
1.<
2.உங்கள் பெயர், கல்வித்தகுதி, இமெயில் ஐடி பதிவு செய்யுங்க
3.பின்னர் LOGIN செய்து உங்கள் ஆவணங்களை Upload பண்ணுங்க.
4 கல்வி சான்றிதழ்களை பதிவு செய்யுங்க, இனி வேலை வாய்ப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும்.
(குறிப்பு: டிகிரி முடித்தவர்கள் மட்டுமல்ல 8, 10, 12ம் வகுப்பு படித்தவர்களுக்கும் தான்) எல்லோருக்கும் பயனுள்ள தகவல். உடனே SHARE பண்ணுங்க
▶️மனித உரிமைகள் ஆணையம் – 22410377
▶️போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
▶️போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
▶️குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
▶️முதியோருக்கான அவசர உதவி -1253
▶️தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
▶️ரத்த வங்கி – 1910
▶️கண் வங்கி -1919
▶️விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989
இந்த பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே ஊத்துமலை வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்ட மூவரை வனத்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடியைச் சேர்ந்த ரஞ்சித் சிங், நாகர்கோவிலைச் சேர்ந்த ராஜலிங்கம், பொன்ஆனந்த் ஆகியோர் கைதாகினர். திமுக பிரமுகர் முகேஷை வனத்துறையினர் தேடி வருகின்றனர். அஜாக்கிரதையாக செயல்பட்ட உதவி வன அலுவலர் மகாதேவபாண்டியனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அதிகாரி அகில்தம்பி உத்தரவிட்டார்.
தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று (செப்.2) இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில், ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தென்காசி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் சார்பாக பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநர் (அப்ரண்டீஸ்) மேளா சேர்க்கை முகாம் (செப்.08) அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. தொழில் பழகுநர் சேர்க்கை முகாமில் ஐ.டி.ஐ இரண்டாண்டு மற்றும் ஒராண்டு தொழிற்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் தொழில் பழகுநர் பயிற்சி மேளா முகாமில் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தகவல்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் விவசாயத்தில் பூச்சிகொல்லி மருந்துகளை குறைவாக பயன்படுத்த வேண்டும். விவசாயிகள் பயிர் உற்பத்தியின் போது பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லிகளை அதிக அளவில் பயன்படுத்தும் பொழுது அதன் நச்சுப்பொருட்கள் பயிர்களின் இலைகள் மற்றும் காய்களில் தங்கி இருப்பதால் அதனை உட்கொள்ளும் போது உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் வேண்டுகோள்.
தென்காசி மாவட்டத்தில் கல் குவாரிகளை ட்ரோன் மூலம் ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரி, புளியறை ஜமீன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். 45 குவாரிகளில் 17 குவாரிகள் அளவீடு செய்யப்பட்டன. நீதிபதிகள், 17 குவாரிகளின் அறிக்கையை செப்.9க்குள் தாக்கல் செய்யவும், மீதமுள்ளவற்றை 4 வாரங்களுக்குள் அளவீடு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
Sorry, no posts matched your criteria.