India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு மருத்துவமனை தென்காசி மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா வழிகாட்டுதல் படி செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு இன்று மத்திய அரசின் காயகல்ப விருது ரூ.2 லட்சம் பரிசும் அறிவித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் சில பகுதிகளில் மாலை இரவு நேரங்களில் மெல்லிய தென்றல் காற்று வீச தொடங்கி உள்ளது. இந்த நிலையில் இன்று முதல் வெப்பம் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா அறிவித்துள்ளார். குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் சில பகுதிகளில் மிதமான மழை முதல் சற்று கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார்.
தென்காசியில் உள்ள குற்றால அருவிகளில் ஒன்றான ஐந்தருவி, சுற்றுலா பயணிகளிடையே அதிக கவனம் பெற்ற அருவியாகும். இது மூலிகை நிறைந்த நீராக கருதப்படுகிறது. இந்த அருவியில் நீர் ஐந்தாக பிரிந்து வருவதால் ஐந்தருவி எனப் பெயர் பெற்றுள்ளது. இந்த அருவியைச் சுற்றி பல கோயில்கள் உள்ளன. இந்த அருவி நீரை தேக்கி வைக்க அணைக்கட்டும் உள்ளது இது சுற்றியுள்ள பகுதிகளின் பாசனப் பயன்பாட்டிற்கு வழிவகுக்கிறது.
தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல் உங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், சம்பவங்கள், கோரிக்கைகளை செய்தியாக பதிவிட்டு நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். ஆர்வம் உள்ளவர்கள் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். செய்தியாளராக பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ஸ்ரீநிவாச சுப்பிரமணியம் என்பவர் சென்னை நீலாங்கரை பகுதியில் வசித்து வருபவர். தென்காசி மாவட்டத்தில் ஒரு கோயில் தற்போது மசூதியாக மாற்றப்பட்டு இருப்பது குறித்து சோஷியல் மீடியாவில் வந்த செய்தியை தனது ட்விட்டர் அக்கவுண்ட்டில் பகிர்ந்து உள்ளார். அசன் மைதீன் என்பவர் அளித்த புகாரின் பேரில் தென்காசி சைபர் கிரைம் போலீஸ் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
தென்காசி, பொட்டல்புதூரில் அதிமுக சார்பில் இன்று 11வது நாளாக தொடர்ந்து பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் நீர் ஆகாரங்கள் கோடை வெயிலை முன்னிட்டு வழங்கப்பட்டது. கடையம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். பாப்பான்குளம் கிளைச் செயலாளர் நல்லசிவன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் கொடை வெயிலுக்கு பிரேக் கொடுக்கும் வகையில் அடுத்த இரு நாட்களுக்குத் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நாளை மற்றும் நாளை மறுநாள் தென்காசி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னத்துரை மற்றும் திருநங்கை நிவேதா ஆகியோரை தமிழக முதலமைச்சர் இன்று நேரில் அழைத்து புத்தகங்கள் பரிசளித்து பாராட்டினார். நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
செங்கோட்டை வட்டாரங்களில் உள்ள பழ தோட்டங்களில் கொய்யாப்பழம் விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் இவை தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் சில்லரை வியாபாரிகள் கொள்முதல் செய்து சாலை ஓரங்களில் விற்பனை செய்கின்றனர். ஒரு கிலோ கொய்யா 70 ரூபாய் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
முதலியார்பட்டியில் தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் இன்று நெல்லை அகர்வால் கண் மருத்துவமனை கடையம் அப்பல்லோ பார்மசி,
ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் இலவச சர்க்கரை அளவு கண்டறிதல், ரத்த அழுத்தம் கண்டறிதல் முகாம் நடந்தது. முகாமை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் கட்டி அப்துல் காதர் தலைமை வகித்து துவக்கி வைத்தார். முகம்மது நெய்னார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.