India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆலங்குளம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் பள்ளி வாகனங்களின் இயங்கும் முறைகள் குறித்து ஆய்வு பணி இன்று நடைபெற்றது. இதில் 23 பள்ளிகளில் உள்ள 58 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கனகவல்லி தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 41 வாகனங்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன மற்ற வாகனங்களின் குறைகளை இந்த மாத இறுதிக்குள் சரி செய்ய அறிவுறுத்தப்பட்டது.
தென்காசி மாவட்டம் கேசவபுரம் பகுதியைச் சேர்ந்த சுடலை முத்து(23) என்ற இளைஞர் கையில் ஆயுதங்கள் வைத்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில், அவர் மீது புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரண மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர் வைத்திருந்த ஆயுதத்தை கைப்பற்றியது. அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சங்கரன்கோவில் இன்று தேவர்குளம் காவல் நிலைய விவகாரத்தில் அடுத்தகட்ட போராட்டம் தொடர்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தினர் இன்று ஆலோசனை நடைபெறுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.இந்த ஆலோசனை கூட்டம் நடத்த தடை விதித்து சங்கரன்கோவில் காவல் துணை கண்காணிப்பாளர் உத்தரவிட்டார் .
தென்காசி மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள எச்சரிக்கை: மாணவ, மாணவியரின் பெற்றோருக்கு போன் செய்து அரசின் கல்வி உதவித்தொகை வழங்குவதாகவும் Gpay QR code scan செய்யுமாறு கூறினால் யாரும் நம்பி ஏமாற வேண்டாம். நீங்கள் QR code scan செய்வதன் மூலம் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்பட வாய்ப்புள்ளது. மக்கள் விழிப்புடன் இருக்க தென்காசி மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
தென்காசி மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள எச்சரிக்கை: மாணவ, மாணவியரின் பெற்றோருக்கு போன் செய்து அரசின் கல்வி உதவித்தொகை வழங்குவதாகவும் Gpay QR code scan செய்யுமாறு கூறினால் யாரும் நம்பி ஏமாற வேண்டாம். நீங்கள் QR code scan செய்வதன் மூலம் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்பட வாய்ப்புள்ளது. மக்கள் விழிப்புடன் இருக்க தென்காசி மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
ஆலடிப்பட்டி சுடலைமாடன் கோயில் திருவிழாவில் போலீசார் ரோந்து சென்றபோது, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 2 பெண் உள்பட 4 பேரை பிடித்து விசாரித்தனர். உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த குரும்பன்(60). அவரது மனைவி முனியம்மாள்(50) பிச்சையா (59) மொக்கத்தாய் (55) ஆகியோர் என்பதும், திருவிழா சமயங்களில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நூதன முறையில் திருடுவதும் தெரியவந்ததை தொடர்ந்து அவர்களை இன்று கைது செய்தனர்.
தென்காசி மாவட்டத்தில் நாளை (மே.12) மழைப் பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை தென்காசி உட்பட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சங்கரன்கோவில் திமுக எம்எல்ஏ ராஜா இன்று (மே 10) மாலை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார். பின்னர் அவர் கூறுகையில், “சங்கரன் கோவில் அருகே உள்ள தேவர்குளம் பகுதியில் நடந்த சம்பவத்திற்கு காரணமான காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும். அந்தப் பகுதியில் பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என கலெக்டரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “குழந்தை திருமணம் தடை சட்டத்தின்படி குழந்தை திருமணம் நடைபெறுவது கண்டறியப்பட்டால் தொடர்புடையவர்களுக்கு 2 வருடம் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். எனவே திருமணம் நடத்தி வைக்கும் மதகுருமார்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Sorry, no posts matched your criteria.