India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் தென்காசி மாவட்டம் 14 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 88.42% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 80.97 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 94.05 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி தென்காசி மாவட்டத்தில் மாணவர்கள் 89.25% பேரும், மாணவியர் 96.31% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 93.02% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. மேல்வழி மண்டல கீழ அடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. மேலும் குமரி கடல் பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்காசி மாவட்டத்தில் மழை தீவிரமடைந்துள்ளது. நேற்று(மே 13) பரவலாக மழை பெய்த நிலையில் இன்றும்மஃ(மே14) சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு10 மணி வரை தென்காசி மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 7 மணி வரை தென்காசி மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று (மே.12) மழைப்பொழிவு பதிவான விவரத்தை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சிவகிரியில் 12 சென்டி மீட்டரும், தென்காசி நகரில் 2 சென்டி மீட்டரும், கடனா அணை ஆயிக்குடி, தென்காசி aws ஆகிய பகுதிகளில் தலா ஒரு சென்டி மீட்டரும் பதிவாகியுள்ளது. தென்காசியில் இன்னும் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு இருக்கக் கூடும் எனத் தெரிவித்துள்ளது.
குற்றாலம் அருகே உள்ள குடியிருப்பு அன்னை பாத்திமா அலி அன்பு இல்லத்தில் அன்னையர் தினத்தை முன்னிட்டு 12ம் தேதி ஆதரவற்ற முதியவர் இல்லத்தில் ஆலங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் நேரில் பார்வையிட்டு வாஷிங் மிஷின் வழங்கினர்.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் இ.சீலா, பர்சார் என். சரவணன் மற்றும் ஆங்கில உதவி பேராசிரியர் லதா மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தை ஒட்டிய மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடும் பகுதி நிகழ்கிறது. இதன்படி தென்காசி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று(மே 13) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் பல இடங்களில் கன மழை பெய்தது. இதன் காரணமாக குற்றாலம் அருவிகளில் நீண்ட இடைவேளைக்கு பின் தண்ணீர் கொட்ட தொடங்கியுள்ளது. இதை அறிந்த சுற்றுலா பயணிகள் இன்று அதி காலையிலேயே குற்றாலம் அருவிகளுக்கு படையெடுத்தனர். அவர்கள் மெயின் அருவியில் நீண்ட நேரம் நீராடி கோடை வெப்பத்தை தணித்துக் கொண்டனர்.
செங்கோட்டை நூலகத்தில் குரூப் 4 மாதிரி தேர்வு12′ ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் தென்காசி செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பாட்டாளர்கள் கேள்வித்தாளில் கொடுக்கப்பட்டு தேர்வு எழுதிய பின் தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு மாணவர்களிடம் வழங்கப்பட்டது. 150 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்து ஐந்து மாணவர்களுக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.