India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசிக்கு நாளை (மே.21) மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி, தென்காசியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது. தென்காசியின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழைபெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தென்காசி மாவட்ட பகுதியில் இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது .மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மலை பெய்து வருவதால் இந்த பகுதியில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு துறையின் மூலம் அனைத்து செல்போன் எண்ணிற்கும் தற்போது குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இன்றும் நாளையும் நமது மாவட்டத்தில் ரெட் அலர்ட் அதிக கன மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் பெயில் மற்றும் ஆப்சன்ட் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பிற்கு வர வேண்டாம் என மாணவர்களுக்கு தெரிவிக்கும் படி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு கேட்டுக்கொண்டார்.
தென்காசி, பழைய குற்றாலம் பகுதியில் கடந்த 4 தினங்களுக்கு முன்னர் பெய்த கன மழையால் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டது. சிறுவன் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். இங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை முதல் பழைய குற்றாலம் அருவி மற்றும் மலைப்பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்கிறது. இதனால் மீண்டும் நீர் வரத்து அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஒட்டப்பட்ட போஸ்டரில் கீழப்பாவூர் மற்றும் ஆவுடையானூர் பஞ்சாயத்து தலைவரின் முறைகேடுகள் அதிகாரிகள் தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துகேட்பு கூட்டத்தில் முடிவு என்ன? தலைவரை உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த போஸ்டரால் தற்போது பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டத்திற்கு இன்று(மே 20), நாளையும் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பேருந்துகளை இயக்கும் டிரைவர்கள் சாலை ஓரமாக செல்லக்கூடாது. சுரங்கப்பாதை மற்றும் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி இருந்தால் இயக்கக் கூடாது. சாலையில் மின் கம்பிகள் சாய்ந்து உள்ளனவா என கவனமுடன் பணியாற்ற வேண்டுமென நெல்லை போக்குவரத்து கழக அதிகாரி இன்று டிரைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தையை சேர்ந்தவர் பேச்சிக் குட்டி(24). ஓட்டுநர் தொழில் பார்க்கும் இவர், தனது வீட்டில் நேற்று(மே 19) நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது உள்ளே புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், இன்று (20.5.24) தென்காசி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு, அதவாது 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு இலங்கை கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன்படி தென்காசி, குமரி, நெல்லை, தேனி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் சென்னை வானிலை மையம் விடுத்த நிலையில் நாளை அதி கனமழை பெய்யும் என குறிப்பிட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சுதந்திர தின பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இந்த மாவட்டத்தில் இன்றும், நாளையும் அதிக கன மழை பெய்யலாம் என வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே கடையநல்லூர் அருகே உள்ள அச்சன்புதூர் பகுதியில் காலை முதல் சுமார் ஒரு மணி நேரமாக மிதமான மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் பல பகுதிகளில் மேக மூட்டமாக உள்ளது.
Sorry, no posts matched your criteria.