Tenkasi

News September 5, 2025

புளியங்குடி பகுதியில் மின்தடை அறிவிப்பு

image

நாளை (செப்.6) சனிக்கிழமை புளியங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்படுகிறது.தி.நா.புதுக்குடி, திருவேட்டநல்லூர், வீரசிகாமணி,அரியலூர், சிங்கிலிபட்டி, சொக்கம்பட்டி, சிந்தாமணி, சுப்பிரமணியாபுரம், பாம்புக்கோவில், சந்தை நகரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 5, 2025

மேக்கரை கும்பாவூருட்டி அருவியில் குளிக்க தடை

image

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அடுத்துள்ள மேக்கரை பகுதி வழியாக அச்சன்கோவில் செல்லும் வனப்பகுதியில் அமைந்துள்ள கும்பாவூருட்டி அருவியில் ஓணம் பண்டிகை முன்னிட்டு நாளை சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விரிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்திலிருந்தும் சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News September 5, 2025

தென்காசி மாவட்டத்தில் வேளாண் குறித்த விழிப்புணர்வு

image

தென்காசி மாவட்டத்தில் வேளாண்மை உழவர்  சார்பில்வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தலைமையிலும் தோட்டக்கலை உதவி இயக்குநர் தலைமையிலும் (செப்.9) அச்சம்பட்டி, எஸ் எஸ் கிராண்ட் மஹாலில் வேளாண்மை உழவர் நலத்துறையில் 2025-2026ம் ஆண்டு அட்மா திட்டத்தின் கீழ் “அங்கக வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த தொழில் நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு” என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான கண்காட்சி நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சியர் தகவல்.

News September 4, 2025

தென்காசி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம்

image

தென்காசி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளின் குறைகளை தீர்க்கும் பொருட்டு (09.09.2025) அன்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முன்னிலையில் மாற்றுத் திறனாளிகள் குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப, தகவல். *ஷேர் பண்ணுங்க

News September 4, 2025

தென்காசி: 10th முடித்தால் விமான நிலையத்தில் வேலை.!

image

இந்திய விமான நிலையங்களில் 1,446 Ground Staff மற்றும் Loaders பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிகளுக்கு சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படுகிறது. 10th மற்றும் 12th முடித்தவர்கள் <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 21.09.2025 ஆகும். நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க. இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News September 4, 2025

தென்காசி: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK NOW

image

தென்காசி மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <>இந்த தளத்தில்<<>> உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து கிளிக் பண்ணவும். அதில், உங்கள் பெயர், ஊர், எந்த இடத்தில் நீங்க வாக்கு செலுத்த வேண்டும் என்ற அனைத்து விவரங்களும் நொடியில் தெரிந்துவிடும். உடனே CHECK பண்ணுங்க. இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News September 4, 2025

தென்காசிக்கு புதிய ரயில் இயக்க கோரிக்கை

image

தென்காசி ரயில் நிலையத்தில் நேற்று மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆய்வு செய்தார். அப்போது தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவர் பாண்டியராஜா, நிர்வாகிகள் சுப்புராஜ், சேர்மராஜா, செபாஸ்டின் உன்னத ராசா, குத்தாலிங்கம் ஆகியோர் தென்காசி மாவட்டம் சார்ந்த ரயில்வே கட்டமைப்பு மற்றும் புதிய ரயில் இயக்க கோரிக்கைகளை வழங்கினர்.

News September 4, 2025

தென்காசிக்கு புதிய ரயில் இயக்க கோரிக்கை

image

தென்காசி ரயில் நிலையத்தில் இன்று மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆய்வு செய்தார். அப்போது தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவர் பாண்டியராஜா, நிர்வாகிகள் சுப்புராஜ், சேர்மராஜா, செபாஸ்டின் உன்னத ராசா, குத்தாலிங்கம் ஆகியோர் தென்காசி மாவட்டம் சார்ந்த ரயில்வே கட்டமைப்பு மற்றும் புதிய ரயில் இயக்க கோரிக்கைகளை வழங்கினர்.

News September 4, 2025

தென்காசி இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி (செப்.3) இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News September 3, 2025

தென்காசி: ஊராட்சி துறையில் வேலை வாய்ப்பு

image

தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உட்கோட்ட பகுதியில் உள்ள ஊர்களான ஆலங்குளம், தென்காசி, கடையம், கடையநல்லூர், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில், செங்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவல் பணியிடங்கள் சுழற்சி முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.tnrd.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி தேதி:30.09.2025 . *ஷேர்

error: Content is protected !!