Tenkasi

News May 7, 2025

தென்காசி மாவட்ட காவல்துறையின் விழிப்புணர்வு பதிவு

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம், சமூக வலைதளத்தில் இன்று ஸ்கேம் அலர்ட் வெளியிட்டுள்ளது. இந்திய ராணுவத்திற்கு உடனடி நிதி உதவி தேவை என பொய்யான மோசடி செய்தி பரவுவதாக எச்சரித்துள்ளது. பொதுமக்கள் இத்தகைய மோசடி செய்திகளை நம்ப வேண்டாம், பகிர வேண்டாம் எனவும், சந்தேகத்திற்குரிய செய்திகளை உடனடியாக காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.

News May 7, 2025

தென்காசி மாவட்ட அணைகள் நீர் இருப்பு நிலவரம்

image

தென்காசி மாவட்டம் கடனா அணையில் இன்று காலை 7 மணி நிலவரப்படி 47 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு 2 கன அடி நீர் வருகிறது. 18 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ராமநதி அணை நீர் இருப்பு 51 அடி. 4 கன அடி நீர் வருகிறது. 10 கண அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கருப்பாநதி நீர் இருப்பு 24 அடி. நீர் வரத்து இல்லை குண்டாறு அணை நீர் இருப்பு 23 அடி. அடவிநாயனார் அணை நீர் இருப்பு 21 அடியாக உள்ளது.

News May 7, 2025

திருமணத்தடை நீங்க எங்கே செல்ல வேண்டும் தெரியுமா

image

கோயில் 1500 ஆண்டுகளுக்கும் மேலானது கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. பால்வண்ண நாதர் கோயில் அதன் முக்கியத்துவத்தில் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குச் சமமாக கருதப்படுகிறது. சங்கரன்கோவிலை சுற்றி அமைந்துள்ள பஞ்ச பூத ஸ்தலங்களில் இக்கோவில் ஒன்றாகும். இந்த கோவில்கள் ஐந்து முக்கிய கூறுகளை குறிக்கின்றன: நிலம், நீர், காற்றுவானம் மற்றும் நெருப்பு. என்று குறிக்கிறது

News May 7, 2025

தென்காசி: அரசு பேருந்து டெப்போ கிளை மேலாளர்கள் புகார் எண்கள்

image

தென்காசி மாவட்ட அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், கிளை மேலாளர்கள் அலுவலர்கள் எண்கள்
▶️ பொது மேலாளர் -9487599051
▶️ துணை மேலாளர் (வணிகம்) – 9487599053
▶️ சங்கரன்கோவில் – 9487599062
▶️ புளியங்குடி – 9487599061
▶️ தென்காசி – 9487599060
▶️ பாபநாசம் – 9487599059
உங்கள் ஊரில் பேருந்துகள் நிற்கவில்லை என்றாலோ, பேருந்தில் ஏற்ற மறுத்தாலோ இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

News April 30, 2025

தென்காசியில் ஓசியில் சிகரெட் கேட்டு அடித்துக் கொலை

image

தென்காசி மாவட்டம் அடைச்சாணியைச் சேர்ந்த மாரிமுத்து (30), துப்பாக்குடி டாஸ்மாக் கடையில் மது அருந்தும் போது வேல்முருகன், பட்டுசாமி, ராஜபாண்டி ஆகிய 3 பேர் அவரிடம் சிகரெட் கேட்டு தகராறு செய்தனர். தகராறு கைகலப்பாக மாறியதில், மூவரும் மதுபாட்டிலால் மாரிமுத்துவைத் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். காயமடைந்த பட்டுசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 29, 2025

தென்காசியில் குடைவரை கோவிலா.? எங்கு தெரியுமா?

image

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள திருமலாபுரத்தில் மலையை குடைந்து பசுபதிசுவரர் குடைவரை கோவில் உள்ளது .இந்த கோவில் 1200 ஆண்டுகள் பழமையானதாக கூறப்படுகிறது.இந்த கோவிலில் லிங்க வடிவத்தில் சிவன் காட்சியளிக்கிறார்.பௌர்ணமி மற்றும் பிரதோஷ நாட்களில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது .இந்த கோவில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 29, 2025

நான்கு சக்கர வாகன வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

image

தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக நான்கு சக்கர வாகன வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் நலச் சங்கம் சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் போக்குவரத்து துறையில் புதிய சட்டத்தின்படி, ஆர்சி புத்தகத்தை தபாலில் வழங்குவதை ரத்து செய்து பழைய சட்டத்தின்படி, ஆர்சி புத்தகத்தை நேரில் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

News April 29, 2025

தென்காசி மக்கள்அறிந்துகொள்ள வேண்டிய காவல்துறை எண்கள்

image

தென்காசி மக்களே கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய காவல் நிலைய எண்கள்
▶️அச்சன்புதூா் – 04633-237152
▶️ஆலங்குளம்- 04633-270140
▶️ஊத்துமலை- 04633-247140
▶️குருவிகுளம்- 04632-251940
▶️ சுரண்டை- 04633-261110
▶️ஆய்க்குடி- 04633-267153
▶️ இலத்தூா்- 04633-280123
▶️காிவலம்வந்தநல்லூா்- 04633-285132
▶️ குற்றாலம்- 04633-283137
▶️செங்கோட்டை- 04633-233274
உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

News April 29, 2025

தென்காசி மக்கள்அறிந்துகொள்ள வேண்டிய காவல்துறை எண்கள்

image

தென்காசி மக்களே கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய காவல் நிலைய எண்கள்
▶️அச்சன்புதூா் – 04633-237152
▶️ஆலங்குளம்- 04633-270140
▶️ஊத்துமலை- 04633-247140
▶️குருவிகுளம்- 04632-251940
▶️ சுரண்டை- 04633-261110
▶️ஆய்க்குடி- 04633-267153
▶️ இலத்தூா்- 04633-280123
▶️காிவலம்வந்தநல்லூா்- 04633-285132
▶️ குற்றாலம்- 04633-283137
▶️செங்கோட்டை- 04633-233274
உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

News April 29, 2025

சங்கரன்கோவிலில் சித்திரை திருவிழா மே 1ல் தொடக்கம்

image

சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் சித்திரை திருவிழா மே 1-இல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நாளை ஏப். 30 யானை பிடி மண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது .பெருங்கோட்டூர் கிராமத்திற்கு கோவில் யானை கோமதியுடன் சென்று பிடி மண் எடுத்து விட்டு கோவிலுக்கு திரும்புவர். 9ம் திருநாளான மே 9 இல் தேரோட்டம் நடைபெற உள்ளது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டக படித்தார்கள் செய்து வருகின்றனர்.

error: Content is protected !!