India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மக்களே, உங்களை முன்னறிவிப்பின்றி வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம். அதன்படி, வீட்டு வேலை செய்பவர்கள் நலவாரியம் – 04428110147, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் – 044-28264950, 044-28264951, 04428254952, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் – 044-28110147. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!
தென்காசி பாவூர்சத்திரம் கடையம் வழியாக செங்கோட்டை சென்னை சென்ட்ரல் இடையே இன்று முதல் சிறப்பு ஏசி ரயில் இயக்கப்படுகின்றன. சென்னை செங்கோட்டை சிறப்பு ரயில் புதன்கிழமை தோறும் சென்னையில் இருந்தும் வியாழக்கிழமை தோறும் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும் இந்த வழித்தடத்தில் முதல்முறையாக அனைத்து பெட்டிகளும் முழு குளிர்சாதன வசதி பெட்டிகளாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்காசி மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்த 23 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள், <
தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்திற்குள் அரசாணை எண் 84 (G.O.MS) No.84, Environment and Forest (Ec2) Department : 25.06.2018 – ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் (பிளாஸ்டிக் சீட்டுகள், பிளோட்டுகள், டீகப்புகள், டம்ளர்கள், ஸட்ரா. கேரிபேக்ஸ்) போன்றவை கோயில் வளாகத்தில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வேதம் புதூர் கிராமத்தில் வசித்து வருபவர் சாமிநாதன் என்பவரது மகன் திருமலை குமார் ஆட்டோ ஓட்டுனர். இவர் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசார்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. தென்காசி போலீசார் விரைந்து சென்று ஆய்வு செய்த பொழுது அவரது வீட்டில் 10 கஞ்சா செடிகள் வளர்ப்பது கண்டறியப்பட்டு அவரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி நகராட்சி பகுதிகளில் வருகிற அக்.2, காந்தி ஜெயந்தியையொட்டி இறைச்சி விற்பதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி நகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அரசாணையின் படி கால்நடைகளை வதை செய்தல், அனைத்து விதமான இறைச்சி மற்றும் மீன் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் இறைச்சி கடை திறந்து வைக்க கூடாது என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (23-09-25) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விபரம்.அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் -9884042100ஐ தொடர்பு கொள்ளலாம்.
தென்காசி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் மக்களாட்சி கட்சி பதிவு செய்யப்பட்ட முகவரி 57 ஜக ஜீவன் ராம் தெரு பரும்பு ஆழ்வார்குறிச்சி என்று இருக்கும் நிலையில் மக்களாட்சி கட்சியின் தலைவர் அல்லது பொதுச் செயலாளர் அக்டோபர் ஒன்பதாம் தேதி உரிய ஆவணங்களுடன் தலைமை தேர்தல் அலுவலர் முன் ஆஜராக வேண்டும் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இரவு 7 மணி வரை தென்காசி மக்கள் மழையினை கவனத்தில் கொண்டு தங்களது பணிகளை திட்டமிடும் படி அறிவுறுத்தல். *ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.