India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்
பொது மக்கள், அரசு அலுவலங்களில் கொடுக்கும் மனுக்கள், கோரிக்கைகள் சம்பந்தமாக அரசு வேலையை செய்வதற்கு, அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டாலும் அரசு அலுவலர்கள் அவர்களது பெயரிலோ அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ அபரிமிதமான மற்றும் வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் இருந்தாலும், லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்யலாம்.
தென்காசி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் ஆலங்குளம் அரிமா சங்கம், திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து 217வது இலவச கண் சிகிச்சை முகாம் வருகிற ஜூன் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆலங்குளம் காவல் நிலையம் அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு இன்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் இவர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தவர். தேர்தலுக்காக பணியை ராஜினாமா செய்தவர். வெற்றி பெற்றதும் இன்று 5-ம் தேதி ராணி ஸ்ரீகுமார் தான் பணியாற்றிய அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்கள் பணியாளர்கள் ஆகியோருடன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
தென்காசி தொகுதியில் அதிமுக கூட்டணியில் கிருஷ்ணசாமியும், பாஜக கூட்டணியில் ஜான்பாண்டியனும் களமிறங்கி கவனத்தை ஈர்த்தனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இருவரும் தோல்வியைத் தழுவினர். இத்தொகுதியில் களம் கண்ட திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் வெற்றியைக் கைப்பற்றினார். இத்தொகுதியில் இதுவரை திமுக 1 முறையும், காங்கிரஸ் 9 முறையும், அதிமுக 3 முறையும், சிபிஐ 2 முறையும், தமாக 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் விளையாட்டு துறையில் சாதனை படைத்தவர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதில் விளையாட்டு துறையில் சாதனை புரிந்த தகுதி வாய்ந்த நபர்கள் https://padmaawards.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்றார்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள தாலுகாக்களில் வருகிற 8ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இதில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள அசல் வழக்குகள்,தொழிலாளர் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், காசோலை உள்ளிட்டவை சமரச பேச்சுவார்த்தைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது என சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளர் தெரிவித்துள்ளார்.
தென்காசி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட அமைப்பு செயலாளர் கட்டி அப்துல் காதர், முஸ்லீம் லீக் தலைமை கழக பேச்சாளர் முகமது அலி ஆகியோர் இன்று சென்னையில் உள்ள முஸ்லிம் லீக் மாநில தலைமையகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் முகைதீனை நேரில் சந்தித்து ராமநாதபுரம் வெற்றி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
2024 மக்களவைத் தேர்தல்:
*திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் – 4,25,679 வாக்குகள்
*புதிய தமிழகம் வேட்பாளர் கிருஷ்ணசாமி – 2,29,480 வாக்குகள்
*தமமுக வேட்பாளர் ஜான் பாண்டியன்- 2,08,825 வாக்குகள்
*நாதக வேட்பாளர் இசைமதிவாணன்- 1,30,335 வாக்குகள்
தென்காசி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நேற்று யூஎஸ்பி கல்லூரியில் நடந்தது.இந்நிலையில் பதிவான தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிந்து நேற்று மாலையில் அறிவிக்கப்பட்டது அதில் பதிவான மொத்த வாக்குகள் 9132 தபால் வாக்குகள் செல்லாதவை1320 திமுக வேட்பாளர் 2654, அதிமுக வேட்பாளர் 1190, பாஜக வேட்பாளர் 1843 நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 1585 வாக்குகளை பெற்றனர்
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட ஜான் பாண்டியன் இன்று 7 மணி நிலவரப்படி இரண்டு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார் 420823, அதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி 227328, பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியன் 205569, நாதக வேட்பாளர் இசை மதிவாணன் 128049 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.