India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி இன்றைய பருவமழை நிலவரம் குறித்த தகவலை தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார்.இதன்படி
தென்காசியில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.தென்காசி குற்றாலம் பகுதியில் இன்றும் மிதமான மழை பெய்யும். இதமான தென்றல் காற்றுடன் தென்காசியின் வெப்பநிலை 28°c ஒட்டியே பதிவாகும். குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து உள்ளது. குற்றாலம் களைகட்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.
தென்காசி நகராட்சி பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் மற்றும் நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனர் ஆகியோரது உத்தரவின் பேரில் தென்காசி நகராட்சியில் பருவமழை காலத்திற்கு முன்பான இன்றைய கழிவு நீர் வாருகால் தூர்வாரும் பணி இன்று நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், சேர்மன் சாதிர் ஏற்பாட்டில் 12வது வார்டு எல் ஆர் எஸ் பாளையம் பகுதியில் நடைபெற்றது.
தென்காசி, ரெட்டியார்பட்டி அன்னை சத்யா அம்மையார் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துனர்கள் மூலம் மதிப்பூதியம் அடிப்படையில் சேவை வழங்க ஆணை வந்துள்ளது. இந்த பணிக்கு தகுதி உள்ளவர்கள் வரும் 24ம் தேதிக்குள் தென்காசி பெருமாள் கோவில் தெருவில் உள்ள மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று கேட்டுக்கொண்டார்.
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோரின் நேர்முக உதவியாளர் செரஸ்தார் அழகப்ப ராஜாவின் இல்ல நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு வருகின்றனர். இதில் மாஜி தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாதன் நேரில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். இது திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் அனைத்து வகையான பள்ளிகளும் இன்று (ஜூன் 10ஆம் தேதி) திறக்கப்பட்டன. இதை முன்னிட்டு அதிகாலையிலேயே விடுதியுடன் இணைந்த பள்ளிகளில் விடுதிகள் திறக்கப்பட்டன. பெட்டி படுக்கையுடன் வந்த மாணவ மாணவிகள் தங்களுக்குரிய விடுதிகளில் காலையிலேயே சென்று தங்கினார்.காலை 7:00 மணி முதல் பள்ளிகள் மற்றும் விடுதிகள் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு பின் ‘களை’ கட்ட தொடங்கின.
தமிழகத்தில் இந்த ஆண்டு ஆயுதபூஜை 11, விஜயதசமி 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தென்காசி மாவட்டங்களில் உள்ள ரயில்வே நிலையத்தில் அக் 9ம் தேதி செல்பவர்கள் நாளை 11 தேதி முன் பதிவுகளை மேற்கொள்ளலாம். அக் பத்தாம் தேதி செல்பவர்கள் 12ஆம் தேதி முன்பதிவு மேற்கொள்ளலாம். அக் 11ஆம் தேதி செல்பவர்கள் 13ஆம் தேதி அன்று முன்பதிவுகளை மேற்கொள்ளலாம் என நேற்று தெரிவிக்கப்பட்டது.
தென்காசி கோட்ட செயற்பொறியாளர் திருமலை குமாரசுவாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மங்கம்மாள் சாலை உப மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடப்பதால் தென்காசி புதிய பேருந்து நிலையம்,மங்கம்மாள் சாலை பகுதிகள்,சக்தி நகர்,காளிதாசன் நகர்,ஹவுசிங் போர்டு காலனி மற்றும் கீழப்புலியூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் இருந்து பாபநாசம் கூட்டு குடிநீர் தண்ணீர் கடையம், மாதாபுரம், பொட்டல் புதூர் வழியாக தென்காசி, செங்கோட்டை நகரங்களுக்கு நாள்தோறும் விநியோகம் செய்யபட்டு வருகிறது. இந்த நிலையில் மாதாபுரத்தில் செல்லும் தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. இதனை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் இன்று கோரிக்கை விடுத்தனர்.
தென்காசி மாவட்ட மின்வாரிய துறையினர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் மின்சார திருட்டை நாம் அனைவரும் சேர்ந்து தடுக்க வேண்டும்.மின் திருட்டு என்பது நாம் அனைவரும் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டிய ஒரு சவாலாக உள்ளது. மின் திருட்டிற்கு யாரும் துணை போக கூடாது. மின் திருட்டு பற்றி தகவல் தெரிந்தால் 9445857591 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்காசி மாவட்டத்தில் அயலக தமிழர் நல வாரிய அடையாள அட்டை இணைவதற்கு இணைய வழி வாயிலாக பதிவு செய்யலாம். ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.https://nrtamils.tn
gov.in என்ற இணையதளத்தில் வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம் என்றார்.
Sorry, no posts matched your criteria.