Tenkasi

News June 11, 2024

தென்காசி எம்.பி உதயநிதியை சந்தித்து வாழ்த்து

image

தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ராணி ஸ்ரீகுமார். இவர் எதிர்த்து போட்டியிட்ட அதிமுக, பா.ஜ.க. வேட்பாளர்களை விட 1.96 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் இன்று 11ம் தேதி சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவருடன் அமைச்சர்கள் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News June 11, 2024

நெல்லை: ஜமாபந்தி நிகழ்ச்சியில் ஆட்சியர் பங்கேற்பு

image

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு தாலுகாக்களில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது .இந்த நிலையில் இன்று ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை மனுவாக கேட்டு எழுதி வாங்கினார். இந்நிகழ்வில் ஆலங்குளம் வட்டாட்சியர் கிருஷ்ணவேணி, உதவி இயக்குனர் இயக்கியப்பன் பலர் கலந்து கொண்டனர்.

News June 11, 2024

தென்காசி: மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

தென்காசி நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில், மீண்டும் மஞ்சப்பை பயன்பாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவில் வாசல் ரதவீதிகளில் நடைபெற்றது. இதில் வணிக நிறுவனங்கள் மற்றும் அங்கு வரும் பொது மக்களுக்கு நெகிழி பைகள் பயன்படுத்துவதை தவிர்த்து, அதற்கு மாற்றாக மஞ்சப்பை தான் பயன்படுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

News June 11, 2024

தென்காசி மக்களே உஷார்..!

image

தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா இன்று ஜூன் 11 மாலை விடுத்துள்ள வானிலை அறிக்கையில், அடுத்த 1 மணி நேரத்தை பொறுத்தவரை குற்றாலம், பழைய குற்றாலம், ஐந்தருவி,  செங்கோட்டை, புளியரை மூன்று வாய்க்கால், கண்ணுப்புள்ளி,  மெட்டுபுதூர், கட்டளைக்குடியிருப்பு, பூலான்குடியிருப்பு,  புதூர், நாகல்காடு ,வல்லம் ஆகிய இடங்களில் சற்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளய்தாக தெரிவித்துள்ளார்.

News June 11, 2024

ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி 

image

தென்காசி  மாவட்டம் ஆலங்குளம் வட்டாட்சியர்  அலுவலகத்தில் இன்று(ஜூன் 11) 1433-ம் பசலிக்கான  ஜமாபந்தியில்  மாவட்ட ஆட்சித்தலைவர் / வருவாய்த் தீர்வாய அலுவலர் ஏ.கே.கமல்கிஷோர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை  பெற்றுக்கொண்டு, அவர்களின்  கோரிக்கை   குறித்து  கேட்டறிந்தார்.  இதில் ஆலங்குளம் வட்டாட்சியர்  கிருஷ்ணவேலன் , உதவி இயக்குநர் (நில அளவை) புலி டோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News June 11, 2024

பீட்டர் அல்போன்ஸ்க்கு பிறந்தநாள் வாழ்த்து

image

தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நேற்றைய தினம் தன்னுடைய 61-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்தநிலையில், அவருக்கு ஆலங்குளம் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் மாநில செயலாளர் செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் குமரேஷ் ,மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் முரளி ராஜா, சித்துராஜ், செங்கோட்டை வட்டாரத் தலைவர் கார்வின் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

News June 11, 2024

வருவாய் தீர்வாய கணக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது.

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் இந்த ஆண்டிற்கான வருவாய் தீர்வாய கணக்கு சரிபார்க்கும் ஜமாபந்தி நிகழ்ச்சி இன்று(ஜூன் 11)ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் தலைமை வகித்து ஜமாபந்தியை நடத்தினார். இதில் பங்கேற்ற பொதுமக்கள் பலர் பட்டா, வீட்டுமனை, சாலை வசதி, பிறப்பு சான்று, பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு  மனுக்களை வழங்கினார்.

News June 11, 2024

எம்.பி. கனிமொழிக்கு மா.செ வாழ்த்து

image

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழி வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து திமுக பாராளுமன்ற குழு தலைவராக கனிமொழி நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் கனிமொழியை நேரில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

News June 11, 2024

தென்காசி சிக்னலில் தேங்கும் மழை

image

தென்காசி, நடு பல்பு சிக்னலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நின்று செல்கின்றன.இந்த நிலையில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக இந்த சிக்னலில் மழைநீர் தேங்கி கிடக்கிறது.இதனால் இருச்சக்கர வாகன ஓட்டிகள் அந்த பகுதியில் நிற்க கூட முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே தேங்கியுள்ள மழை நீரை அகற்றி நிரந்தரமாக மழை நீர் வெளியேறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் இன்று கோரிக்கை விடுத்தனர்.

News June 11, 2024

தென்காசியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

image

தென்காசி மின் பெயர் பொறியாளர் அலுவலகத்தில் இன்று மாதாந்திர மக்கள் குறைதீர்க்கும் நார் கூட்டம் நடைபெற்றது. மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ் தலைமை தாங்கி பொதுமக்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். கோட்ட செயற்பொறியாளர் கற்பக விநாயகம் மற்றும் உதவிப் பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!