India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீனிவாசன் அறிவுறுத்தலின்பேரில் கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இன்று தமிழக-கேரளா எல்லையில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. புளியரை மற்றும் மேக்கரை சோதனை சாவடிகளில் தமிழகம் & கேரளா காவல் துறையினர் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. நெல்லை & தென்காசி மாவட்டம் உட்பட 9 தாலுகாக்களில் நடத்தப்படும் இந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அசல் வழக்குகள், தொழிலாளர் வழக்குகள், மோட்டார் வாகன இழப்பீடு வழக்குகள் உள்ளிட்டவை குறித்து சமரச பேச்சு வார்த்தைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என மாவட்ட கூடுதல் சார்பு நீதிபதி தெரிவித்துள்ளார்.
செங்கோட்டை அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் சுருதி பணியில் சேர்ந்து 10 மாதத்திற்குள் இன்றுடன் நூறாவது பிரசவம் பார்த்து சிறந்த இலக்கை நிறைவு செய்துள்ளார். இதனை கொண்டாடும் விதமாக அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் 2024 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் கல்லூத்து கிராமத்தை சேர்ந்த அபிநயா 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 11.77 நொடிகளில் இலக்கை அடைந்து புதிய சாதனை படைத்துள்ளார். இந்த தொடரில் இதற்கு முன்பாக 2018ம் ஆண்டு இலங்கை வீராங்கனை அமஷா சில்வா 11.92 நொடிகளில் இலக்கை அடைந்தார். இந்த சாதனையை அபிநயா முறியடித்துள்ளார்.
தமிழக எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை வழியாக தினமும் கேரள மாநிலத்திற்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் பல்வேறு விதமான பொருட்களை ஏற்றிச் சென்று வருகின்றன. இந்நிலையில், இன்று(செப்.12) காலை கேரள மாநிலத்திற்கு சிமெண்ட் ஏற்றிச் சென்ற லாரி இசக்கி அம்மன் கோயில் தாண்டி குரங்கு நடை ஓடை பகுதியில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளனது. இதில் டிரைவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. புளியரை போலீசார் விசாரிக்கின்றனர்.
சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லுாரை சேர்ந்தவர் வெளியப்பன்(52). அ.தி.மு.க., பிரமுகர். இவரது மனைவி மாரிச்செல்வி. கடந்த முறை மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் துணை சேர்மனாக இருந்தார். கடந்த 8ஆம் தேதி வெளியப்பன் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், இவ்வழக்கில் தேடப்பட்டவர்களில் அதே ஊரைச் சேர்ந்த பாலமுருகன், கோவேந்திரன் ஆகியோரை மேலநீலிதநல்லூர் போலீசார் கைது செய்தனர்.
வாசுதேவநல்லூரில் தேவேந்திர குல வேளாளர் அரசு ஊழியர் சங்கம் சார்பில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தேவேந்திரகுல சமுதாய நாட்டாமைகள், தேவேந்திர குல அரசு ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கணேஷ், குமார், தர்மராஜா மற்றும் புதிய தமிழகம் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் தென்காசி மாவட்ட தொழில் மையம் இணைந்து கல்வி கடன் வழங்கும் முகாம் மற்றும் தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கும் முகாம் நாளை(செப்.12) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர், எம்பி ராணி ஸ்ரீகுமார் எம்எல்ஏக்கள் கலந்துகொள்ள உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் இன்று (செப்.11) தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று(செப்.11) பிற்பகல் 1 மணிக்குள் நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்தில் இன்று பிற்பகல் 1 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று(செப்.10) முதல் மழை பெய்து வருகிறது. இதனால் வடகரையில் உள்ள அடவி நயினார் அணைப்பகுதியில் 4 மி.மீ., ராம நதியில் 3 மி.மீ.,குண்டாறு அணை பகுதியில் 2.8 மி. மீ., கருப்பா நதியில் 2.5 மிமீ., கடனா நதியில் 1 மி.மீ. மழை பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் இன்று(செப்.11) தகவல் வெளியிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.