Tenkasi

News September 15, 2024

7 வயது சிறுமி மாநில ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதி

image

தென்காசி மாவட்டம் தலைவன் கோட்டையை சேர்ந்த மு.ஜெயகணேசன் கோகிலா என்பவர்களின் மகள் J.முவித்ரா(7) ஸ்கேட்டிங் போட்டியில் மாநில அளவில் விளையாட தகுதி பெற்றுள்ளார். அவருக்கு இன்று பயிற்சியாளர், சமூக ஆர்வலர்கள், உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

News September 15, 2024

தென்காசி மாவட்டத்தில் 16,191 குரூப் தேர்வு எழுதினர்

image

தென்காசி மாவட்டத்தில் குரூப் 2 தேர்வுக்காக 20,870 பேர் வின்னப்பித்திருந்தனர். இந்நிலையில், நேற்று(செப்.14) நடைபெற்ற குரூப் 2 தேர்வில் 16,191 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 4,679 பேர் பங்கேற்கவில்லை. இந்த தேர்வானது தென்காசி மாவட்டத்தில் 82 தேர்வு மைங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

News September 15, 2024

ஆழ்வார்குறிச்சியில் இலவச கண் பரிசோதனை முகாம்

image

ஆழ்வார்குறிச்சி பரம கல்யாணி மருத்துவமனை, பரம கல்யாணி கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் தென்காசி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் நிதி உதவியுடன், நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் வருகிற 17ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பரம கல்யாணி மருத்துவமனையில் நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ளுமாறு இன்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

News September 14, 2024

தென்காசி: சைபர் கிரைம் குறித்து காவல்துறை அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது பல்வேறு வலைதளங்களில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன; சைபர் குற்றவாளிகளால் நீங்கள் ஏமாற்றப்பட்டால், உடனடியாக 1930 என்று எண்ணை தொடர்பு கொள்ளவும்; அல்லது <>https://www.cybercrime.gov.in/<<>> என்ற இணைய முகவரியில் புகார் செய்யலாம்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News September 14, 2024

தப்பிய கைதியை பிடித்த போலீசாருக்கு எஸ் பி பாராட்டு

image

தென்காசி_கிளைச்சிறையில் இருந்து கைதி ஒருவர் இன்று தப்பி ஓடினார். தென்காசி சப் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் மற்றும் இரண்டாம் நிலை காவலர் மாடசாமி ஆகியோர் ஒரு மணி நேரத்தில் கைதியை விரட்டி பிடித்து சிறையில் அடைத்தனர். துரிதமாக செயல்பட்டு கைதியை பிடித்த போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் பாராட்டினார்.

News September 14, 2024

டிஎன்பிசி தேர்வு மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

image

தென்காசி மாவட்டம், செய்யது ரெசிடென்சியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில், இன்று ( செப்டம்பர்14) தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – II (தொகுதி-II & IIA பணிகள்) – இல் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News September 14, 2024

ஆலங்குளம் அருகே கோழி வியாபாரி பலி

image

தருமபுரி மாவட்டம் கெட்டூர் பகுதியை சேர்ந்தவர் மாது(55). இவர் நெல்லையில் தங்கி, கோழிகளை மொத்தமாக எடுத்து சந்தைகளில் கொண்டு விற்பனை செய்து வந்தார். இந்நிலையில், இவர் இன்று(செப்.,14) காலை ஆலங்குளம் மாறாந்தை பகுதியில் பைக்கில் கோழிகளை விற்பனைக்காக கொண்டு சென்றபோது எதிர்பாராத விதமாக பைக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News September 14, 2024

தென்காசி அருகே 2 பேர் குண்டாஸில் கைது!

image

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் கொலை வழக்கின் குற்றவாளிகளான ராமநாதபுரம் வண்டலூர் கிழக்கு தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் அருண் பாஸ்கர்(25) மற்றும் வடக்கு தெருவை சேர்ந்த அமல்ராஜ் என்பவரின் மகன் முத்துக்குமார்(25) ஆகியோரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்பி பரிந்துரையின் பேரில் ஆட்சியர் உத்தரவிட்டார்.

News September 13, 2024

சிசிடிவி பொருத்துதல், பழுது நீக்குதலுக்கான இலவச பயிற்சி

image

தென்காசி மாவட்ட ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் ராஜேஸ்வரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மாவட்ட கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் 19 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு மத்திய அரசு சான்றிதழுடன் கூடிய சிசிடிவி பொருத்துதல் பழுது நீக்குதல் குறித்த இலவச பயிற்சி வகுப்பு வரும் செப் 18ஆம் தேதி தொடங்கி 13 நாட்கள் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

News September 13, 2024

புளியரை பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீனிவாசன் அறிவுறுத்தலின்பேரில் கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இன்று தமிழக-கேரளா எல்லையில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. புளியரை மற்றும் மேக்கரை சோதனை சாவடிகளில் தமிழகம் & கேரளா காவல் துறையினர் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!